குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 24, 2018

சாதனா உரையாடல்கள் - 01

இன்றைய உரையாடலில் நோக்கம்: 23/06/2018

சாதனையின் அடிப்படையை யதார்த்த ரீதியாக புரிந்துகொள்வதற்குரிய தெளிவினை சாதகர்களுக்கு உருவாக்குதல்.

சாதகர்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது வெறுமனே மந்திர ஜெபம் செய்வதால், எண்ணிக்கையை பூர்த்தி செய்வதால் நாம் சாதனையில் முன்னேறுகிறோம் என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படக்கூடாது என்பதாகும்.

மந்திர ஜெபமும் சாதனையும் எமது உடல், மனம் ஆகிய இரண்டையும் தூய்மைப்படுத்தி வலிமைப்படுத்தும் சாதனங்கள். இப்படி தூய்மையடையும் உடல் மனம் ஆகியவற்றை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் காலம் சேர்கிறது.

உதாரணமாக சாதனையால் தூய்மையுற்ற மனம், உடல் ஆகிய இரண்டையும் எந்தச் செயல்களில் தினசரி வீணாக்குகிறோம் என்பதை விழிப்புணர்வுடன் அவதானித்தல் ஒரு சாதகனின் அவசியமான பண்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எவ்வளவு சாதனை செய்தாலும் ஓட்டைக்குடத்தில் ஊற்றும் நீர்தான்!

எனவே சாதகன் தனது நேரத்தை தினசரி சரியாக திட்டமிட்டு பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று. இப்படி செய்யாத சாதகர்கள் சாதனையால் முழுமையாக பயன் எதையும் பெறமுடியாது.

ஆகவே ஒவ்வொரு சாதகனுக்கும் 24 மணி நேரம் தினசரி தரப்படுகிறது. இதை சரியாக தமது உடல், மன, ஆன்ம முன்னேற்றத்திற்கும் பௌதீக வள, வாழ்வதற்கான பணத்தினை பெறுவதற்கு சரியாக திட்ட மிட்டுப்பயன்படுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் பணமும், தேவையான வளங்களும் இன்றி உலக வாழ்க்கை இல்லை. ஆகவே அதை மறுக்கும் சாதகனால் மன நிம்மதியாக தனது வாழ்க்கையை தொடரமுடியாது. ஆகவே தன்னிடம் இருக்கும் பணத்தையும், வளங்களையும் எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது பற்றி சாதகன் திட்டமிட்டு செயலாற்றவேண்டும்.

இப்படி ஒரு சாதகன் உடல், மனம், நேரம், பணம் ஆகிய நான் கினையும் சரியாக திட்டமிட்டு சரியான வழியில் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துவத சாதனையின் முதல் படி.

ஆகவே சாதகர்கள் அனைவரும் இதனை நன்றாக மனதில் உள்வாங்கிக்கொண்டு தமது சாதனையை தொடர குருமண்டலத்தை பிரார்த்திக்கிறோம்.

அடுத்த உரையாடலில் ஒவ்வொன்றை பற்றிய விரிவாக உரையாடுவோம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...