குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 26, 2018

சாதனா உரையாடல்கள் -04

இன்றைய உரையாடல் (26/06/2018) மாணவரின் பண்புகள்.

பண்புகள் என்பது ஒரு விஷயத்தில் மனம் எப்படி இயங்குகிறது என்பதாகும்.

மாணவன் என்றால் அறிந்து கொள்பவன் என்று பொருள்.

எதிப்பற்றியாவது அறியவேண்டிய தீராத்தாகம் கொண்ட எவரும் மாணவர்தாம்.

இப்படி விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்று தீராத்தாகம் கொண்ட மாணவர்களை அவர்களின் பண்புக்கு ஏற்ப மூன்று வகைக்குள் பிரிக்கிறார் பவணந்தியார்.

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

அதாவது
1. தலை மாணாக்கர் - அன்னம் அல்லது பசு போன்றவர்

2. இடை மாணக்கர்- நிலம் அல்லது கிளி போன்றவர்கள்

3. கடைமாணாக்கர் - ஓட்டைக்குடம், ஆடு, எருமை, அல்லது வடிகட்டி போன்றவர்.

தாம் அறிந்த விஷயத்தை உயர்விற்கும், மற்றவர்களுக்கு பிரயோசனமான வழியில் பயன்படுத்தும் மாணவர்களையே தலை மாணாக்கர் என்று கூறுவர். இத்தகையவர்களின் பண்பு இரண்டு விலங்குகளால் குறித்துக்காட்டப்பட்டுள்ளது

முதலாவது, அன்னம், அன்னம் என்பது உயர்ந்த ஞானத்தின் குறியீடு. அன்னை காயத்ரியின் வாகனமாக குறிப்பிடப்படுவது, புழு பூச்சி போன்ற எதையும் உண்ணாமல் தனக்கு தேவையான உயர்ந்த விஷயத்தை மாத்திரம் எடுத்துக்கொள்ளும். எப்போதும் உயர்ந்ததுடன் மாத்திரம் தொடர்பினைப்பேணும். ஆக எந்த அறிவையும் உயர்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தும் பண்பும், தனது மனதை உயர்ந்த விஷயங்களில் எப்போது ஈடுபடுத்திக்கொண்டு இருப்பதும், நல்லவற்றை மாத்திரமே கிரகித்து தன்னுள் ஜீரணித்துக்கொள்வதும் தலை மாணாக்கரது பண்பு. மேலும் அன்னம் வெண்மையானது, வெண்மை தூய்மையின் அடையாளம், ஆகவே தலை மாணாக்கரது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். அன்னம் அழகியது, பார்ப்பவர் மனதை மயக்கும் நளினமும், நடையும் உடையது. அதுபோல் தலைமாணாக்கன் அறிவு மற்றவர்களை ஈர்க்கும் அழகுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது, பசு, பசு எப்போதும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும், ஆனால் உடனடியாக தனது சமிப்பாட்டிற்கு அனுப்பி விடாது. முன் இரைப்பையில் சேர்த்து பின்னர் நன் கு அரைத்து தனது சமிபாட்டிற்கு அனுப்பும். அதுபோல் தலைமாணாக்கார் கிடைக்கும் அறிவை எல்லாம் மனதில் கொட்டிக்கொண்டு பின்னர் புத்தியால் அசைபோட்டு தமக்கு தேவையானவற்றை ஜீரணித்துக்கொள்வர். இப்படி ஜீரணித்துக்கொண்ட உணவு உடலை போசிக்கும் பாலாக, தயிராக, நெய்யாக தரும். ஜீரணிக்காத உணவு சாணமாக பயிர்களை வளப்படுத்தும். ஆக பசுவிற்குள் செல்லும் உணவு எதுவும் வீணாகாமல், அதேவேளை தனக்கு தேவையானதை ஏற்று உடலையும் போசித்து, அதற்கு மிகுதியானதை பாலாக மற்றவர்களையும் போசித்து, தனக்கு தேவையில்லாததையும் மற்றவர்களுக்கு பலன் தரும் உரமாக மாற்றி தரும் பண்பு பசுவிற்கு உண்டு.

இதைப்போல் தலைமாணாக்கரும் தமக்கு கிடைக்கும் அறிவில் தமக்கு தேவையானதை ஜீரணித்து அந்த அறிவை மற்றவர்களுக்கு பயன்படும் அறிவாக உபயோகிப்பர். அதேவேளை தமக்கு தேவையில்லாத அறிவை கிடைத்தால் அது பயன்படக்கூடியவர்களுக்கு கிடைக்கச்செய்வர்.

ஆக அன்னம் பசு இவ்விரண்டு உதாரணமும் மற்றவர்களுக்கும், உலகிற்கும் பயன்படக்கூடிய வகையில் அறிவை பாவிக்கும் தலைமாணக்கருக்கு உதாரணமாக கூறப்பட்டது.

சாதகர்களுக்கு தலைமாணாக்கர் என்பதன் பொருள் என்னவென்பது விளங்கியிருக்கும் என்று நம்புகிறோம்.

இன்று அதிக பயணம் என்பதால் இத்துடன் இந்தப்ப்பதிவை முடித்துக்கொண்டு நாளை மற்ற இரு வகை மாணாக்கருக்குரிய பண்புகளை விளக்குகிறோம்.

நன்றி

ஸ்ரீ ஸக்தி சுமனன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...