குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 28, 2018

சாதனை உரையாடல் - 09

நேற்றைய உரையாடல் சாதனை என்றால் என்ன என்பது?
சாதனை என்பதன் சமஸ்க்ருத அடிச்சொல்லின் அர்த்தம் இலட்ச்சியத்தின் மீதான அர்ப்பணிப்பு என்று பொருள்.
அதாவது ஒருவன் ஒரு இலட்சியத்தை இலக்கு வைத்து அதற்காக தன்னை அர்ப்பணிப்பு செய்து முயற்சி செய்பவன் சாதனை செய்பவன் ஆகிறார்.
பொதுவாக சாதித்துவிட்டான் என்று கூறுவதை கேட்கிறோம் அல்லவா, அதன் பொருளும் அவன் வைத்த இலக்கினை அடைந்து விட்டான் என்பதுதான்.
காயத்ரி சாதனை என்றால் காயத்ரியை இலட்ச்சியமாக வைத்து அர்ப்பணிப்புடன் செயல்புரிதல் என்று பொருள்.
காயத்ரி என்பது புத்தியைத் தூண்டும் பரம்பொருளின் பேரோளியை நம்மில் இருத்தி தியானிப்பது.
எனவே காயத்ரி சாதனை என்பது புத்தியை தூண்டும் பரம்பொருளின் பேரொளியை எம்மில் இருத்தி தியானித்து நாமும் அந்தப் பேரொளியின் ஒரு பாகமாக மாறும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சி.
ஆகவே எவராவது சாதனை செய்கிறோம், சாதகர்கள் என்றால் இலட்சியத்திற்கான அர்ப்பணிப்புடன் செயல்புரிபவர்களையே குறிக்கும்.
அடுத்தது இந்த அர்ப்பணிப்பு ஒரு நாளில் மட்டும் இருப்பதால் அதனால் இலட்சியம் அடையப்படுவதில்லை. இந்த இலட்சியத்திற்கான அர்ப்பணிப்பு தினசரி, வாழ் நாட்கள் முழுவதும், பலபிறவிகளுக்கும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே சாதனை என்பது தொடர்ச்சியான இலட்சியத்திற்கான அர்ப்பணிப்பு.
அர்ப்பணிப்பு என்பது சிரத்தையால் மட்டுமே வரும். ஆகவே சாதகர்களின் முக்கிய பண்பு சிரத்தை.
இங்கு சாதனை என்ற வார்த்தையில் சாதகர் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியவை " இலட்சியத்திற்கான அர்ப்பணிப்பு"
இங்கு இலட்சியம் புத்தியைத் தூண்டும் பரம்பொருளின் பேரோளியை நம்மில் இருத்தி தியானிப்பது, அதன் மூலம் அந்த தெய்வீக பண்புகளை எம்மில் உருவாக்குவது, மற்றவர்களும் அதைப்பெற எம்மால் இயன்ற முயற்சிகளை செய்வது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...