குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 26, 2018

சாதனா உரையாடல் - 03

இன்றைய (25/06/2018) உரையாடல் மனம் பற்றியது.

மனிதன் என்பதன் பொருளே மனம் உள்ளவன் என்பதுதான். எந்தமொழியில் மனிதன் என்பதை மொழிபெயர்ந்தாலும் மனம் என்பது தொடர்புறும்.

மனம் என்றால் என்ன என்பதற்கு பலரும் எண்ணங்களின் தொகுப்பு எனப்பொருள் பட பதில் கூறியிருந்தார்கள். அந்தப்பதில் உண்மை என்றாலும் மீண்டும் எண்ணம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

சாதகன் தான் ஆன்ம பௌதீக முன்னேற்றம் பெற மனத்தையும் அதன் இயக்கத்தையும் புரிந்து கொள்வது மிக அவசியமானது. இந்தவகையில் மனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பொருத்தமான விளக்கம் மனம் ஒரு சக்தி என்பதாகும். சக்தியாக மனதைப் புரிந்து கொள்வதில் மனதின் பல்வேறு பரிணாமங்களை அறிந்து கொள்ளலாம்.

1. சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியது. அதுபோல மனதில் தோன்று எண்ணங்கள் அழிவதில்லை.
2. சக்தி சலனிக்கும்போது அதிர்வினை உண்டாக்கும், அதுபோல் மனச்சக்தி சலனிக்கும்போது எண்ணங்கள் என்ற அதிர்வு உண்டாகும்.
3. சக்தியை ஒடுக்கினால் ஆற்றல் உண்டாகும், அதுபோல் மனதை ஒருமுகப்படுத்தினால் ஆற்றல் உண்டாகும்
4. பௌதீக சக்திகள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றக்கூஅடியவை, அதுபோல் மனச்சக்தி அன்பு, பரிவு, பாசம், கருணை, கோபம், காமம், க்ரோதம் எனும் உணர்ச்சிகளாக மாறக்கூடியது.
5. பௌதீக சக்திகளை நல்ல உட்கட்டுமானங்கள் மூலம் எமது தேவைக்கு முன்னேற்றங்களுக்கு பயன்படுத்தலாம். அதுபோல் மனச்சக்தியை சாதனைமூலம் எமது தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.
6. சக்தியை அடக்கினால் அழுத்தம் அதிகமாகி வெடித்து சிதறும், அதுபோல் மனதை அடக்க முடியாது, அடக்கினால் அழுத்தம் உண்டாகி உடல் பாழ்படும்.
7. சக்தியை கட்டுப்படுத்தி, ஒழுங்கு படுத்தி எமது தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம். அதுபோல் மனச்சக்தியை கட்டுப்படுத்தி அரிய பல காரியங்களை சாதிக்கலாம்.
8. சக்தியை கண்களால் பார்க்க முடியாது, இயக்கத்தின் மூலமே அறியலாம் அதுபோல் மனதை அதன் இயக்கத்தின் மூலமே அறியலாம்.

ஆக மனம் என்பது ஒரு சக்தி, அதிலும் ஒளி, ஒலி, வெப்பம் போன்ற பௌதீக சக்தியல்ல, சூக்ஷ்மமான சக்தி என்ற புரிதல் சாதகர்களுக்கு மற்ற எல்லா தத்துவ விளக்கங்களுக்கும் முன்னராக புரிய வேண்டியது.

மனம் சக்தி என்ற அடிப்படை புரிந்தால் நாம் வீணான ஆணவத்தால் மனத்துடன் சண்டை போட மாட்டோம். எவராவது மின்சக்தியுடன் தமக்கு பிடிக்கவில்லை என்று கோபப்படுவாரகளா? அதுபோல் மனம் சக்தி என்று உணர்ந்தவர்கள் மனத்துடன் சண்டை பிடிப்பதை நிறுத்தி விட்டு மனதை எப்படி தனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது என்று சிந்திக்க ஆரம்பிப்போம்.

ஆகவே மனதை பயன்படுத்த விரும்பும் சாதகர்கள் மனம் ஒரு சக்தி என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்.

இனி நீங்கள் மனதிற்கு கொண்டிருக்கும் விளக்கங்களை மனம் என்பது ஒரு சக்தி என்ற அடிப்படையில் ஒப்பிட்டுப்பாருங்கள்.

அந்தசக்தியை வசப்படுத்த என்ன செய்யலாம் என்பதே சாதனை, உபாசனை, யோகம், மந்திர ஜெபம் எல்லாம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...