குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 11, 2013

மந்திர யோகம் (03): மந்திரங்களின் அமைப்பு

சென்ற பதிவில் மந்திரம் என்றால் என்ன? என்று பார்த்தோம்,
 
இந்தப்பதிவில் மந்திரத்தின் பகுதிகள் என்ன என்று பார்ப்போம், இவை எல்லா மந்திரங்களிலும் காணப்படும் பொதுவான அமைப்புகளாகும், சிலவற்றில் சிலது இல்லாமல் இருக்கும்,
 
ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு உடல் இருக்கும், அதாவது மந்திரம் என்றால் மனித உடல் போன்று கருதினால் அதன் தலை போன்றது "ஓம்' என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். சில  தாந்திரிக மந்திரங்களில் இவற்றிற்கு விதிவிலக்கு உண்டு, பொதுவான மந்திரத்தின் அமைப்பு கீழ்வருமாறு காணப்படும்.
 
அந்த மந்திரத்திற்குரிய தேவதை, ஓம் ஐ தொடர்ந்து ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக  ஓம் கணபதி.... என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க   பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.  
 
 
அடுத்த பகுதி சாதகரின் மனவிருப்பத்தினை, சங்கல்பத்தினை குறிப்பதாக இருக்கும்.  பொதுவாக ஸர்வ சித்திப்ப்ரதாய, மனோவாஞ்சிதம் போன்ற வார்த்தைகள் இவற்றை குறிக்கும்.
 
கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இது எழு வகையாக உள்ளது,
  •  நமஹ: இது மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக்கரணங்களையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ஒன்றாக்குதல் என்று பொருள், நமஹ எனும் போது குறித்த தெய்வ சக்தி எமது அந்தக்கரணங்களில் விழிப்படைந்து அந்த சக்தியினை ஈர்த்து அதுவாகவே ஆகிறது.  ஓம் கணேசாய நமஹ என்றால் கணேசரின் சக்தி அந்தக்கரணங்களில் மெது மெதுவாக பதியத்தொடங்கும்.
  • ஸ்வாஹ: இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது, அதாவது புற பிரபஞ்ச பஞ்ச பூத அக்னி தத்துவத்தில் மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள் ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.
  • ஸ்வதா: ஸ்வாஹா என்பது பிரபஞ்ச்சத்தில் சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில் உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.
  • வஷட்: தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம்  மாறி பயன்தரும்.
  • வௌஷட்: இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
  • ஹும்: இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.
  • பட்: சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்.
 
இந்த பல்லவங்களை சரியான பீஜட்சரங்களுடன் சேர்த்து பல காரிய சாதகங்களுக்கு உபயோகிக்கலாம். (எச்சரிக்கை: இதனை குரு மாத்திரமே சாதகனுக்கு உகந்த  வகையில் எந்த பீஜாட்சரம் பலன் தரும் என்று அறிந்து உபதேசிப்பார், அல்லாமல் மனம் போனபோக்கில் நாமாக செய்து பார்த்தல் வீணான விளைவுகளை தரும்). அதனை தகுந்த குருவிடம் அறிந்து கொள்ளவும். இது மந்திரங்களின் அடிப்டையினை புரிந்து கொள்ள உதவும் ஒரு அடிப்படை தகவல் மாத்திரமே.
 
 பொதுவாக மந்திரங்கள் அனைத்தும் இப்படியான அமைப்புடனேயே காணப்படும்,
 
இந்தப்பதிவி மந்திரம் ஒன்றின் அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்த்தோம், அடுத்த பதிவில் ஒரு மந்திர சாதனையின் அங்கங்கள் எவை  என்பது பற்றி பார்ப்போம்.

2 comments:

  1. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Srishti's yoga classes

  Srishti's yoga classes start tomorrow; Today Sahasra Gayatri prayer at Gurunathar Gayatri Peedam as the promise of Agathi Maamak...