குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 09, 2013

மந்திர யோகம் (01): தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா?


இந்த தொடர்பதிவுகளில் மந்திர யோகம் பற்றிய அடிப்படைகளை விளக்கலாம் என்று எண்ணி உள்ளோம்.

தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா? சமஸ்கிருதம் தெரிய வேண்டுமல்லவா? அது வடமொழி தெரிந்தவர்கள் தானே சொல்லலாம்!

மேற்கூறிய கருத்துக்கள் அண்மையில் ஒரு நண்பர் ஆதங்கத்துடன் எம்மிடம் வினாவினார், அதற்கு விளக்கமாக எமது மனதில் எழுந்த கருத்துகளை தொகுத்த வடிவமே இந்த கட்டுரை தொடர்!

இதற்கு முதலாவது பதில் "அடேயப்பா அப்படியென்றால் தமிழர்கள் தண்ணீர் குடிக்கலாமா? காற்றினை சுவாசிக்கலாமா? என்று கேட்பது போலல்லவா இது இருக்கிறது?" மந்திரம் மனித மனதையும், உணர்வையும்,ஆன்மாவினையும்,உடலினையும் ஒன்றிணைக்கும் சாதனமல்லவா? அவற்றை பயன்படுத்துவது மனிதனின் அடிப்படை உரிமை! அதனை அறியாமையினால் காரணமே தெரியாத ஒன்றால் மறுக்கின்றோம் என்றால் அது எமது மடமை என்பதனை அறிந்து கொள்ளவேண்டும் நண்பா!

அடுத்து எமக்கு ஒருவிடயத்தினை பற்றி தெரியவில்லை என்றால் அதனை குதர்க்க புத்தியுடன் அணுகாமல் அவை பற்றி அறிந்தவர்களிடமோ அல்லது நல்ல நூற்களை கற்றோ தெரிந்து கொள்ள வேண்டும், பொறுமையாக சீர்தூக்கி ஆராய வேண்டும், இப்படி அணூகுவீர்களானால் உண்மை விளங்கும். அதற்கான எமக்கு தெரிந்த விடயங்களை இங்கு பதிவிடுகிறோம், உங்களை போல் சந்தேகம் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் சகோதரர்கள் இதனால் பலனடைவர் என்று எண்ணி குருதேவரை பணிந்து விடயத்தினுள் புகுவோம்.

முதலாவதாக மந்திரம் என்ற சொல்லின் விளக்கத்தை பார்ப்போம். இதற்கு ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் பொதிந்த சூத்திரத்தினை வரைவிலக்கணமாக தரும். அது "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரம் என்ப” (தொல்காப்பியம், சொல்லதிகாரம், 480). இதற்கு பலவாறாக தமிழறிஞர்களால் பொருள் கொள்ளப்பட்டாலும் இதன் மந்திர சாத்திர பொருள் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் இது மந்திரம் எப்படி உருவாகிறது, யார் உருவாக்குகின்றார்கள் என்ற விளக்கத்தினையும் தருகிறது. இனி இந்த தொல்காப்பிய சூத்திரத்தின் பொருளினை சுருக்கமாக பார்ப்போம்.

நிறை மொழி என்றால் இன்று பொருள் கொள்ளூம் அறிஞர்கள் நன்றாக மொழியினை அறிந்தவர்கள் எனப்பொருள் கொள்கிறார்கள், அது சரியாக இருப்பினும் வெறும் மேலோட்டமான பொருள்தான் அது. அப்படியானால் இன்றைய தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரது வார்த்தைகள் அனைத்துமே மந்திரமாகி விடுமல்லவா? அதன் சூஷ்ம அர்த்தம் வேறு!

தொல்காப்பியம் மந்திரத்தின் உற்பத்தி, அதன் சித்தி, அது பயிற்சி செய்யவேண்டிய முறை ஆகியவற்றை ஒரே சொல்லால் சொல்லிவிடுகிறது, அதுதான் " நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த" வரியில் வரும் நிறைமொழி மாந்தர் எனும் சொல். நிறை மொழி மாந்தர் என்பவர் தனியே மொழி அறிந்தவர மட்டுமல்ல, சொல்லினால் வரும் ஒலி, அண்ட ஒலி சூஷ்ம உடலில் உருவாகும் இடம், உருவாக்கி பிரபஞசத்தில், மனித உடலில் செயல் கொள்ளும் தன்மை அறிந்தவர்கள்தான் நிறை மொழி மாந்தர் எனப்படுவர். அதாவது சைவ சித்தாந்த வார்த்தையில் சொல்வதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள் இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர். இவர்கள் சொல்லும் மொழி எல்லாம் மந்திரங்கள் எனப்படும். இதன் படி வேதங்கள் கூறும் ரிஷிகள், சித்தர்கள், நாயன்மார்கள் கூறிய பாடல்கள், தோத்திரங்கள் எல்லாம் மந்திரம் என்ற வரைவிலக்கணத்திற்குள் வரும்.

இவை மட்டுமல்ல மந்திரங்கள் யார் ஆத்மா சித்தி பெற்றவர்களோ அவர்களது வார்த்தைகளும் மந்திரங்களே! இவ்வாறு கோரக்கர் போன்ற சித்தர்களால் உருவாக்கப்பட்ட சபர் மந்திர பத்ததிகள் பற்றி பின்னொரு தடவை பார்ப்போம்,

மந்திர என்ற வடமொழி சொல்லிற்கு மனனம்+திரயதே என்று பிரிக்கலாம். மனனம் என்றால் நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப் பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை உச்சரிப் பவரை காப்பாற்றுவது என்று பொருள்.

இவை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

ஆக உங்கள் மந்திரம் தமிழர்கள் சொல்லலாமா? என்ற கேள்விக்கு சரியான விடை கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறோம், மந்திரம் என்ற சொல்லிற்கு முழுமையான பொருளை அறிந்தவர்கள் தமிழர்கள் தாம், சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் நினைப்பவரை காப்பது என்றுதான் பொருள் ஆனால் தமிழில் அதற்கான வரைவிலக்கணம் அதன், உற்பத்தி, செயல்முறை, இருப்பு என முழுமையாக கூறி நிற்கும். ஆகவே தமிழர்கள் தான் மந்திரத்தின் செயற்பாட்டை அறிந்த மெய்ஞாநிகழ என்ற பெருமையுடன் தாராளமாக மந்திரங்களை கூறலாம் என்பதில் உறுதி கூறுகிரோம்.

ஆனால் எந்தவொரு செயலையும் செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறையிருக்கிறது அதன் படி செயல்புரிந்தால் மட்டுமே பலனளிக்கும்,அது மந்திர யோகத்தின் மூலம் பயனடைய விரும்புபவர்களுக்கும் நிச்சயம் பொருந்தும். அவற்றை படிப்படியாக மற்றைய பதிவிகளில் பார்ப்போம்.

வளரும்.....

ஸத்குரு பாதம் போற்றி!

3 comments:

  1. அன்புள்ள சுமணன்

    உங்கள் பதிவு தினமும் வந்தால் ஆன்மிக முன்னேற்ற திற்கு ரொம்ப உதவியாய் இருக்கும்

    உங்கள் செந்தில்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...