குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, September 04, 2019

தலைப்பு இல்லை

பலருக்கும் வேதங்களை, புராணங்களைப் படிக்க வேண்டும், ஆனால் என்ன காரணத்திற்காக என்பதில் தெளிவு இருப்பதில்லை! அதை பற்றிய ஒரு உரையாடலுக்காக இந்தப் பதிவு! 
ப்ரமேயம்
பிரமாணம்
விருத்தி ஞானம்
ப்ரமதா
இந்த நான்கு சொற்களும் எமக்கு எப்படி அறிவு உருவாகிறது என்பதை விளக்கும் சொற்கள். 
அறியப்பட்ட சரியான அறிவு ப்ரமேயம்!
அறிவதற்கான சரியான முறை பிரமாணம்!
அறிவதற்கு மனதில் எழுப்பப்படும் சரியான கேள்விகள் விருத்தி ஞானம்! 
அறிபவரின் மனதில் தோன்றும் விருத்திகள் ப்ரமதா!
இங்கு சரியான அறிவு என்பது பற்றிய வரைவிலக்கணம் அவசியம்! 
ஒரு செயலின் இறுதி இலட்சியம் என்ன என்பது பற்றித் தெரியாமல் அதைப்பற்றி அறிய முயல்வதில் எந்தப் பயனும் கிடைப்பதில்லை! அது மன ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தும் முறை.
சிலர் curiosity எனப்படும் அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக எப்போதும் எல்லாவற்றையும் கேள்வி கேட்டுக் கொண்டு இருப்பார்கள், இது மூளையின் சக்தியை வீணாக்கும் செயல்! ஏனென்றால் உடலில் பெரும்பகுதி ஆற்றலை உறிஞ்சுவது மூளை, அந்த மூளையினை இலக்கும், நோக்கமும் அற்ற விஷயங்களுக்காக பயன்படுத்துவது ஒருவித துஷ்பிரயோகம்! 
ஆகவே கேள்வி மட்டும் கேட்பது சரியான முறை அல்ல! இலக்குடன், நோக்கத்துடன் கூடிய கேள்வியே சரியான முறை! 
அடுத்து எது சரியான இலக்கு என்பது பற்றித் தெரியாமல் நாம் கற்பனை செய்யும் இலக்கினாலும் எமது அறிவைப் பெறும் செயல் வீணாகலாம்! இதற்கு எமக்கு முன்னிருந்த ஆப்தர்கள் - உண்மையை அனுபவப் பூர்வமாக அறிந்தவர்களின் வார்த்தைகளை துணை கொள்ள வேண்டும். இது ஆப்த வாக்கியம் என்று கூறுவார்கள். 
எமக்கு முன்னிருந்த அனுபவம் வாய்ந்த உண்மையை அனுபவித்த பெரியோர்கள் வாழ்க்கையின் இலக்கினை நான்காக வகுத்திருக்கிறார்கள். 
அறம்
பொருள்
இன்பம் 
வீடு
அறம் என்பது எது எம்மை இந்த பூமியுடன், வாழ்க்கையுடன் பிணைத்து வைத்திருப்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விதிகள்! 
பொருள் என்பது எமது வாழ்க்கையினை வாழ்வதற்கு அறத்தைப் பின்பற்றி சேர்க்கப்படுபவை! 
இன்பம் என்பது எமது மனம் சார்ந்த அகவாழ்க்கையையும், உடல் சார்ந்த புறவாழ்க்கையையும் சரியாக திருப்தியாக வாழ்வதற்கு தேவையானவற்றைச் செய்வது!
இந்த மூன்று படிகளையும் சரியாக செய்தால் கிடைப்பது வீடுபேறு அல்லது மோக்ஷம், மோக்ஷத்திற்கு முயற்சிப்பவன் அறத்தின் வழி நின்று பொருளீட்டி, தானும் தன்னைச் சார்ந்தவர்களும், இந்த உலகமும் இன்பமாக வாழ வழிசெய்தால் வாய்ப்பது! ஆகவே மனிதர்கள் செய்யவேண்டியது அறம், பொருள், இன்பம், இவற்றைச் சரியாகச் செய்தால் கிடைப்பது வீடு பேறு! 
வாழ்வின் இந்த நான்கு இலக்குகளையும் சரியாகப் புரிந்துகொண்டு அதனைப் பெறும் இலக்குடன் கேட்கும் கேள்வியே சரியான அறிவைத் தரும்! அப்படிப்பெறும் அறிவினால் மட்டுமே தெளிவு வரும்! அது பயன் கிடைக்கும்! 
இப்படி வேதங்களும், புராணங்களும் எதற்காக கூறப்பட்டது என்ற இலக்கு இல்லாமல் படிக்கத்தொடங்கினால் ஏற்கனவே எமது மனதிலுள்ள வக்கிரங்களையும், காழ்ப்புணர்ச்சிகளும், ஆபாசங்களும் அதன் அர்த்தங்களாக வெளிப்பட்டு எம்மைக் குழப்பும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...