குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, September 03, 2019

கணேச இரகசியம் – 01

இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய அதியுயர் உண்மை அணுத் தன்மை சார்ந்தது. அணுக்கள் கூட்டாகச் சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டுள்ளது. சமஸ்க்ருதத்தில் கண - gaṇa என்பது கூட்டம் அல்லது தொகுப்பு என்று பொருள்படும். கணங்கள் என்றால் ஒருவகைப்படுத்தலின் தொகுப்பு, பொதுவாக ஜோதிடத்தில் மனிச கணம், தேவ கணம், ரக்ஷச கணம் என்று சொல்லுவார்கள். இதன் பொருள் பூமியில் பிறக்கும் மனித ஆத்மாக்கள் பூமிக்கும் வரும் வழியை அவற்றின் சத்துவ, ரஜோ, தமோ குணத்தின் அடிப்படையில் நக்ஷத்திரத்தினூடாக தேர்ந்தெடுக்கும். ஆகவே மனித உடலில் உள்ள உயிரின் அடிப்படையில் மூன்று வகுப்பாக – கணங்களாக பிறந்த நக்ஷத்திர அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. இப்படி மனிதர்களைப் பகுப்பது போல் உலகில் எதைப்பகுத்தாலும் அதை வகைப்படுத்த கணங்கள் தேவைப்படுகிறது. 

இவற்றை ஆழம் வரை ஆராய்ந்து சென்றால் இறுதியில் அணுவும், அணுவிற்குள் இருக்கும் துணிக்கைகளும் மிஞ்சும். 

இவற்றை எல்லாம் வகைப்படுத்தி, செயற்படுத்தும் மூல சக்தியை பராசக்தி என்று குறிப்பிடுவோம். இவற்றை மனிதர்கள் வணங்குவதற்கு இலகுவாக பல பெயர்களை இட்டு கூறிவருகிறார்கள். இந்த மூலசக்தியிலிருந்தே எல்லாவித பாகுபாடான பிரபஞ்சப் பொருட்களும் உருவாகிறது. 

இப்படி உருவாகிய பிரபஞ்சப்பொருட்கள் எல்லாம் குழம்பிய நிலையில் (Chaotic state) இலிருந்து ஒத்திசைவாக (Harmonically) நடக்க ஒரு தலைவன் தேவை. அவனே கண+அதிபதி = கணபதி, 

மூலசக்தியிலிருந்து கதிர்த்த பிரபஞ்சப் பொருட்களை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த அந்த சக்தியின் அமிசத்திலிருந்து ஒன்றாலேயே அதைச் செய்ய முடியும். இதனால் தான் பார்வதியின் உடலிலிருந்து வழித்தெடுத்த மஞ்சளில் இருந்து கணபதி உருவாகினார் என்று புராணத்தில் சொல்லி வைத்தார்கள்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...