குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 07, 2019

கடமைக்காக செயலாற்றுதல்

பலர் ஒரு செயலைச் செய்வதற்கு தாம் அங்கீகரிக்கப்பட வேண்டும், அதனால் ஏதாவது பயன் கிடைக்க வேண்டும் என்று காட்டும் ஆர்வம் செயலினை சிரத்தையாக செம்மையாகப் பூர்த்தி செய்வதில் காட்டுவதில்லை! 

ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டால் தமது மனதையும் மூளையையும் அந்தப் பொறுப்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு எந்த சிந்தனையும் செலவு செய்யாமல் சொன்னபடி செய்யும் சுப்பன் போன்று செயலாற்றுபவர்கள் தமது ஆற்றலையும் வீணாக்கி, மற்றவர் ஆற்றலையும் வீணாக்குபவர்கள். 

இன்னும் சிலர் செயலுக்கு முன்னர் கூறும் வாய்ஜாலமும், ஆலாபனைகளும் செயலை செம்மையாகச் செய்து சரியான விளைவினை முடிவில் பெறுவதில் காட்டுவதில்லை! 

இன்னும் சிலர் நுட்பமாக மரியாதை செலுத்துவதாக நடித்து செயலைச் செய்யாமல் ஏமாற்றுபவர்கள்! 

இன்னும் சிலர் குருவையும், தெய்வத்தையும் மதித்து பக்தி காட்டுவதால் குருவும் தெய்வமும் தமது மனத்தவிப்பினை நிறைவேற்ற வந்த வேலைக்காரர்கள் என்ற நினைப்பில் தமது கடமைச் செய்யாமல் தம்மை ஏமாற்றும் முட்டாள்கள். 

இன்னும் சிலர் தமது சொந்தச் செயலிற்கும் மற்றவர்கள் உதவி என்று கேட்பதற்கு செய்வதற்கும் பாரபட்சம் காட்டி, இலாப நட்டம் பார்க்கும் கணக்கர்கள்! 

இவர்கள் அனைவரும் தம்மைத் தாமே ஏமாற்றுபவர்கள்!

செயலாற்றுவது என்பது ஒரு யோகம், யோகம் என்றால் இணைப்பு, ஒரு செயலைச் செய்ய அந்தச் செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஏகாக்கிரமாக சிந்திக்க வேண்டும், இப்படிச் சீராக சிந்தித்து பின்னர் அந்தச் செயலை செய்யும் போது மனம் சீராகும்! மனம் சீராகினால் திருப்தி உண்டாகும், திருப்தி உண்டானால் மனம் மகிழ்வடையும்! மனம் மகிழ்ச்சியாக இருந்தால் மனச் சலனம் குறையும், மனச் சலனம் குறைந்தால் யோகம் சித்திக்கும். 

இப்படி எடுத்த செயல்கள் அனைத்தையும் ஒரே மனப் பண்புடன் முடிக்கும் பண்பு பெற்றவனே உண்மையான மனிதன்! மற்றவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றும் ஏமாளிகள்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...