குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 16, 2019

தலைப்பு இல்லை

நேற்று நண்பர் ஒருவர் புத்தகத்தின் அட்டைப்படத்தை தனது பதிவில் பதிவிட்டிருந்தார். 
அது ஜப்பானியர்களின் நீண்ட ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான காரணம் பற்றிய இரகசியத்தை உரையாடுவதாக கூறப்பட்டிருந்தது. 
ஐகி-காய் - ikigai (生き甲斐) என்பது அதன் பெயர்! இதில் ஐகி என்பது பிராணன் எனும் உயிர்சக்தியைக் குறிக்கும் சொல். ஐகி காய் என்ற சொல்லின் அர்த்தம் தமிழில் சரியாக இப்படி மொழிபெயர்க்கலாம் என்று எண்ணுகிறேன். 
பிராணனின் பயன் அல்லது உயிர்சக்தியின் பயன்
பிராணனின் விளைவு அல்லது உயிர்சக்தியின் விளைவு
ஜப்பானியர்களின் போர்க்கலையான ஐகிடோவும் இந்த உயிர்சக்தியை உபயோகித்து தற்பாதுகாப்பினை ஏற்படுத்தும் உத்திதான்! 
ஜப்பானியர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையின் அர்த்தம் என்பது காலை கண்விழித்தவுடன் தனது உயிர்சக்தியை எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதாக இருக்கிறது. 
இவை எமக்குப் புதியது போல் தோன்றினாலும் நித்திய கர்மம் என்று வைதிகத்திலும், சைவமரபிலும், ஆயுர்வேதத்திலும், சித்த வைத்தியத்திலும் வரையறுக்கப்பட்டிருந்த ஒன்று தான்! இந்த மரபுகள் தற்போது சடங்காகவும், புனிதப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் கருதப்படுவதால் உயிர்சக்தியை எப்படி பயன்படுத்துவது என்ற அடிப்படை இல்லாமல் வெறும் சடங்காகப்போய் பலன் தரவில்லை என்று கூறலாம்! 
அறம், அல்லது தர்மம் என்பது இப்படி எமது உயிர் சக்தியை எப்படி எமது உடல் மன மேம்பாட்டிற்கு பயன்படுத்தி கூட்டு முயற்சியாக சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது என்ற கோட்பாடுகள்தான்! 
ஐகி-காய் தத்துவத்தினூடாக ஒருவன் தினசரி தனது உயர்சக்தியை மனதினூடாகவும், உடலினூடாகவும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஓர் ஒழுங்குமுறையை ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும், நீண்டகாலம் வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இந்த ஐகி-காய் தத்துவத்தின் அடிப்படை.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...