குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, September 13, 2019

தலைப்பு இல்லை

எனது வாழ்க்கையின் முக்கியமான அகத் தூண்டலை ஏற்படுத்திய ஒரு புத்தகம் பற்றிய பதிவு இது! 

இந்தப் புத்தகம் சிறுவயதில் நான் ஒரு விவாதப் போட்டியில் பங்குபற்றி வென்றதற்காக கிடைத்த பரிசு! பலக்காலமாக எனது புத்தக அலுமாரிக்குள் தேடிக் கொண்டிருந்தேன், நேற்றுத் தான் கிடைத்தது!

கல்வி - ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? என்பதற்கான உறுதியான வழிகாட்டல் சுவாமி விவேகானந்தரிடமிருந்து தான் கிடைத்தது. 

இந்த உபதேசம் எனக்கான அகத்தேடலிற்குரிய பாதையைத் திறந்தது. சுவாமி விவேகானந்தர் கூறிய கல்வி என்பது மனதைப் பற்றி அறிதல், மனதைப் பண்படுத்துதல், மனதின் ஆற்றலை ஒழுங்குபடுத்தல் என்பதைத் தவிர எதுவுமில்லை. 

மனம் என்றால் என்ன? மனதை எப்படிப் பயன்படுத்துவது? மனதின் ஆற்றல் எவை? இவையே எனது கற்றலின் ஆர்வமானது. இந்த தேடலுக்குரிய சரியான பதிலை வழங்கியவர்களே எனக்கு குருவாகவும் வாய்த்தனர்! அல்லது என்னைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்!

மனதைச் செம்மையாக்கி ஞானம் அடையும் வழி ஸ்ரீ அகத்திய மகரிஷியின் குருபரம்பரைக்குரியது. மற்றைய சித்தர்கள் பலர் வாசி, பிராண தத்துவங்களைக் கொண்டு முன்னேறும் வழிகளைக் கூற அகத்திய மகரிஷியின் வழி ஞானத்தில் முன்னேற மனமதை செம்மையாக்க வேண்டும் என்பது. 

இதற்கு ஏற்றால் போல் எனது பெயரையும் தந்தை இட்டிருந்தார். 

சுமனேந்திரன் - சு+ மன+ இந்திரன் 

இந்திரன் என்றால் ஒளியும் சக்தியும் மிகுந்தவன் என்று பொருள்!

சுமன - என்றால் மேன்மையான மனம் என்று பொருள் கொள்ளலாம். 

ஆக, எனது பெயரின் பொருள் 

ஒளியும் சக்தியும் மிகுந்த நல்ல மனமுடைய இந்திரன் - சுமனஇந்திரன் என்றாகிறது. 

எனது குருநாதர் இதைச் சுருக்கி சுமனன் என்று மற்றவர்களுடன் உரையாடும் போது பயன்படுத்துவார்! அதையே எனது எழுத்துக்கான பெயராக வைத்துக்கொண்டேன். திருமணமான பின்னர் ஸ்ரீயும் ஸக்தியும் சேர்ந்துகொண்டது. ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆனேன்! 

எனது குருநாதர் கூறுவார் தீக்ஷா நாமம் என்பது ஒருவர் தமது ஆன்ம சாதனையின் இலக்கினைக் ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக தரப்படுவது என்று! 

எனக்கு எனது பெற்றோர் இட்ட பெயரே எனது அகத்தேடலுக்குரிய வழியாக ஆகிவிட்டது. 

மனம் பற்றிய தேடல்! மனதை எப்படி மேன்மைப்படுத்துவது! மனதை எப்படி ஒளிமிகுந்ததாக்குவது! இது ஒருவன் கற்கவேண்டிய கல்வியின் இலட்சியம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...