குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 01, 2012

ஔவையாரும் கணபதியும் - குண்டலினி யோகத்திறவுகோல்




ஔவைப்பிராட்டியை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது, நீதி நூற்களும் பாலருக்கு உகந்த பாடல்களும் எழுதி சிறுவயது முதல் எம்முடன் என்றும் வாழ்ந்துவரும் சிரஞ்சீவி ஔவைப்பிராட்டி. இந்தப் பதிவின் விடயம் ஔவையார் கைலாயம் சென்ற கதையின் யோக இரகசியத்தினை விளக்குவதாகும். அனைவரும் அறிந்த கதைதான். 

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமானாரும் கையிலையிற்கு இந்திரன் அனுப்பிய ஐராவதம் எனும் தேவலோக யானையில் செல்லும் வழியில் ஔவைப்பிராட்டி கணபதிக்கு பூஜை செய்தவண்ணம் இருக்கிறார். அவரைக் கண்ட சுந்தரர் தம்முடன் கையிலையிற்கு வரும் படி அழைக்க பாட்டியோ கணபதி பூஜையினையின் நடுவே செல்ல விருப்பமில்லாமல் கணபதியிடம்  "பெருமானே நீர் விரும்பினால் நீரே என்னை கையிலையில் சேர்த்துவிடும்" என கூறுகிறார். அதற்கு கணபதி பிராட்டியாரை நோக்கி அகவல் ஒன்று கூறும்படி கேட்க அவர் குண்டலினி யோகமுறைகளை எல்லாம் உள்ளடக்கு பாடியதுதான் இன்று பாராயண நூலாக விளங்கும் "விநாயகர் அகவல்". இது குண்டலினி யோக இரகசியங்கள் அடங்கியது. அது பற்றி வெறொரு சமயத்தில் பார்ப்போம். இந்தப்பதிவில் இந்த கதையின் குறியிட்டு விளக்கம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். இதன் பின்னர் கணபதி தனது தும்பிக்கையின் மூலம் ஔவைப்பிராட்டியாரை சுந்தரரும் சேரமான் பெருமானாரும் கையிலை செல்லும் முன் கொண்டு சேர்க்கிறார். 

கணபதி குண்டலினி யோகத்தில் மூலாதரச் சக்கரத்தின் அதிபதி, மனித பரிணாமத்தின் அனைத்துக் கர்மங்களினதும் சேமிப்பு இடம் மூலாதரச் சக்கரம். இந்த இடத்தினை கட்டுப்படுத்தும் தெய்வ சக்தியே கணபதி. இந்த சக்கரம் விழிப்படையாமல் ஆன்மா மேல் சக்கரங்க்களை நோக்கி பயணிக்க முடியாது. இந்த சக்கரம் சமனிலையில் இருந்தால் தான் அந்த மனிதனது உணர்ச்சிகளும் மனதும் சரியான வகையில் வேலை செய்யும். இல்லாவிட்டால் மனம் பெரும்பாலும் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கும். ஆக சமூகம் சமனிலையில் இருக்க இந்த மூலாதாரச் சக்கரம் சமனிலையில் இருக்கவேண்டும். இதை அறிந்தே எமது முன்னோர்கள் எல்லா ஆற்றங்க்கரையில், அரச மரத்தடியில் கணபதியினை ஸ்தாபித்து தலையில் குட்டி தோப்புக்கரணம் போடும் படி செய்வித்தார்கள். தலையில் சரியாக புருவ முடிவின் பகுதியின் அழுத்துவதன் மூலம் இடகலை, பிங்கலை நாடிகளை சிறிய அளவில் செயற்படுத்த முடியும், இப்படி செயற்படுத்திவிட்டும் தோப்புக்கரணம் போடும் போது மூலாதாரம் சலனித்து சிறிதளவில் மற்றைய சக்கரங்களுக்கு குண்டலினி சக்தியினை பாயவைக்கும். இந்த ஆற்றல் ஒவ்வொரு சக்கரத்திற்கும் செல்லும் அளவில் நீங்கள் நினைத்த காரியம் சித்தியாகும், அது போல் இந்த செய்முறையினால் யோக நாடிகள் சுத்தமாகி மனம் ஏகாக்கிரப்படும். ஆக கணபதி என்ற சக்தியின் செயற்பாட்டை செய்விக்கவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார்கள் எமது முன்னோர்கள். 

இனி ஔவைப்பிராட்டியாரின் கதைக்கு வருவோம், சுந்தரமூர்த்தி நாயனார் பரியங்க யோகத்த்தின் மூலம் குண்டலினியை விழிப்பித்து கையிலை எனப்படும்  சகஸ்ராரத்தினை அடைந்தவர், சேரமான் பெருமானார் தானும் கையிலைக்கு வரவேண்டும் எனும் போது சுந்தரர் அவருக்கு பஞ்சாட்சர மந்திர தீட்சை அளித்து அவரை கூட்டிச் செல்கிறார். பஞ்சட்சர ஜெபத்தில் உள்ள ந, ம, சி, வா, ய என்பது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி முதலான ஆதாரஙகளின் பீஜ - வித்து மந்திரச் சொல், இதன் மூலமும் கையிலையாகிய சஹஸ்ராரத்தினை அடையலாம். அவர்கள் கையிலையிற்கு செல்வதற்கு முன்னர் விநாயகர் அருளால் ஔவைப்பிராட்டி கயிலை அடைந்தார் என்பது கணபதியின் சாதனா மகிமையினைக் குறிக்கிறது. அதாவது கணபதி சாதனை ஒன்றே குண்டலினையை விரைவாக சஹஸ்ராரத்திற்கு அடையவைக்கும் என்பதனைக் குறிக்கவே இந்தக்கதையினை உருவகப்படுத்தினர். 

இதனாலேயே ஸ்ரீ வித்தையில் கணபதி சாதனை முதன்மையாக வைக்கப்பட்டிருக்கிறது, அனைத்து விடயங்களிலும் கணபதி முதன்மைப்படுத்துவதன் ரகசியம் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரம் சமனிலையில் இருந்தால் மட்டுமே பிரபஞ்ச ஆற்றல் எதுவித தடங்கலும் இல்லாமல் மன திலும், உடலிலும் பாயும், இந்த நிலையில் எந்த தடங்கலும் இல்லாமல் காரியம் முடியும் என்பதனாலேயே. ஆகவே இந்த இரகசியத்தினை விளங்கிகொண்டு இனிமேல் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரத்தில் கணபதியினை வணங்கி செய்தால் வெற்றி கிட்டும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

ஸத் குரு பாதம் போற்றி

5 comments:

  1. விளக்கங்களை அறிந்து கொண்டேன்... நன்றிங்க...

    ReplyDelete
  2. very useful story sumanan.

    thanking you so much.

    ReplyDelete
  3. Thank's for your information. Now I understand.

    ReplyDelete
  4. Nanri ayya - ganapathi sadhanai eppadi seiya vendum ayya?

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...