குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 04, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 02 - திருமணமாகாத பெண்களுக்கான சாதனை,குடும்ப வாழ்க்கை மகிழ்வாக இருக்க)


திருமணமாகாத பெண்களுக்கான சாதனை

எமது எளிய முறை காயத்ரி உபாசனை பகுதியில் கூறியபடி உபாசனையினை செய்து, தினசரி 24 தடவைகள் (அதிகமாக 108) ஜெபம் செய்து நல்ல மணாளன் அமைய பிரார்த்திது வரவேண்டும். இது எப்படி செயற்படுகிறது என்பதனை ஏற்கனவே முன்னைய பதிவுகளில் விளக்கியுள்ளோம். 

குடும்ப வாழ்க்கை மகிழ்வாக இருக்க

திருமணமான பெண்கள் காயத்ரி சாதனையினை கீழ்வருமாறு செய்வதால் ஆனந்தம், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் போன்றவற்றை தமது பிள்ளைகள், கணவனுடன் பெற்று மகிழ்வாக வாழ்வார்கள். சில குடும்பங்களில் கணவன்மார் பொறுப்பற்று தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பார்கள், அப்படிப்பட்ட குடும்பங்களில் இந்த சாதனையினை மனைவி செய்து வருவாராக இருந்தால் அந்த கணவன் நல்வழிப்படுத்தப்படுவார். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்து காணப்படும். 

இந்த சாதனை காலையில் செய்ய வேண்டியது, மதியத்திற்கு முதல் முடித்துவிடவேண்டும், அதுவரை திரவ ஆகாரம் தவிர உணவு உட்கொள்ளக்கூடாது. நீராடி சாதகி கிழக்கும் நோக்கி அமர்ந்து கொள்ளவேண்டும். பின்னர் நாளாந்த உபாசனையினை முறைப்படி முடித்துக்கொள்ளவேண்டும். இந்த உபாசனையில் மஞ்சள் நிறம் இடம் பெற்றிருக்க வேண்டும், பூக்கள் மஞ்சள் நிறமுடையவையாக இருக்க வேண்டும், சந்தனப் பூச்சினை பயன்படுத்த வேண்டும், பிரசாதம் கடலை மாவில் செய்து படைக்கவேண்டும். மஞ்சள் நிறமாக பசு நெய் பயன் படுத்தவேண்டும். இப்படி இயலுமான வரை மஞ்சள் நிறத்தினை பயன்படுத்தி வரவேண்டும். 

இதன் பின்னர் தேவியயை கண்மூடி தியானிக்கும் போது தேவி மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பதாக, மஞ்சள் நிற வரிப்புலியில் அமைந்திருப்பதாக, அதன் பின்புற ஆகாயம் மஞ்சள் நிறமாக இருப்பதாக பாவிக்கவும். அத்துடன் நீங்கள் அணிந்திருக்கும் உடையும் மஞ்சள் நிறமாக இருக்கவேண்டும். இந்த பாவனையில் 24 தடவைகள் காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். இப்படி அமைதியாக இருக்கும் போது தேவியை மனதில் பாவித்து காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து வரவும். இந்த சாதனை செய்பவர்கள் பௌர்ணமி தினங்களில் உபவாசன் இருக்கவேண்டும். அத்துடன் தினசரி உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்வதும், தினசரி குளிக்கும் போது மஞ்சள் பூசுவதும் அவசியமாகும்.

இந்த சாதனை உங்களுக்கு, கணவனுக்கு ஆயுள் ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை என்பவற்றைக் கொடுக்கும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...