குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 08, 2012

மனதினை அறிவோம் - (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்-01)


சித்தர்கள் மனதினை அறிதலே தன்னை அறிதலுக்கான முதற்படி என்பதனை உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள். சித்தர்களில் குருநாதர் அகஸ்தியர் பெருமளவான இடங்களில் மனதினைப்பற்றி கூறியுள்ளார். மனதின் செயற்பாட்டினை அறிதலே உண்மையான கல்வி, சிறுவயதில் சுவாமி விவேகானந்தரது "வீர இளைஞர்களுக்கு" என்ற புத்தகத்தில் 'உண்மையான கல்வி என்பது ஒருவன் தனது மனதினைப் பற்றிய கல்வியே" என்ற வரிகள் ஆழமாக பதிந்ததால் மனம் என்றால் என்ன? என்ற தேடல் எம்மை குருவை அடையவைத்தது. எமது குருபரம்பரையிலும் கண்ணையயோகீஸ்வரர் மனதினை அறிவதே இறை சாதனையின் முதல் படி என தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார்கள். அவரது மானச யோகம் எனும் நூல் மனதினைப் பற்றி அடிப்படையினை புரிந்து கொள்ள தமிழிலில் உள்ள மிகச் சிறந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த வகையில் மனதினைப் பற்றி திருமூலர், அகத்தியர் முதலான பல சித்தர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞான ரீதியாக தெளிவாக கூறிய சித்தர் பதஞ்சலி முனிவராவார். அவரளவிற்கு அறிவியலாய் மனதினை விளக்கியவர் எவரும் இருக்க முடியாது என்பது யோக ஆசிரியர்களது கருத்து. 

பதஞ்சலி பல்லாயிரக்கணக்கான மனங்களை ஆராய்ந்து இறுதியாக கூறிய முடிவுகளில் தொகுப்பே "யோக சூத்திரம்" எனப்படும் நூலாகும். இது மொத்தம் நான்கு பகுதிகளாகவும் 196 சூத்திரங்களையும் உடையதாகும். சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் எனற நான்குமே இவையாகும். இதுவே அஷ்டாங்க யோகம் எனப்படும் ராஜயோகத்திற்கு அடிப்படை நூலாகும். இதற்கு சுவாமி விவேகானந்தர் முதற்கொண்டு பலரும் விளக்கவுரை எழுதியுள்ளனர். இந்த தொடரின்  நோக்கம் விளக்கவுரை அல்ல, எல்லவற்றிற்கும் அடிப்படையான மனதினை புரிந்து கொள்ள யோக சூத்திரங்களை எப்படி உபயோகிப்பது எனபதாகும். 

ஆகவே உங்களுடைய மனதினை புரிந்து கொண்டு பயன்படுத்த விரும்பும் அன்பர்கள் இந்த தொடரை படித்து இன்புற வாருங்கள். 

அடுத்த பதிவிலிருந்து அவற்றினை ஒழுங்கு முறையாகப் பார்ப்போம். 

ஸத்குரு பாதம் போற்றி!

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...