குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 12, 2012

சித்தத்தின் செயற்பாடு (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் 05)



சென்ற பதிவில் சித்தம் என்பது முழுமையான மனம் அல்ல,மனதின் ஒரு கூறான ஆழ்மனமே சித்தம் என்று பார்த்தோம். பதஞ்சலியார் மனதின் மற்றைய கூறுகளான மேல் மனம், புத்தி, அகங்காரங்களின் விருத்திகள் அல்லது செயற்பாட்டினை தடை செய்ய சொல்லவில்லை. சித்தத்தின் விருத்தியினையே தடை செய்யச் சொல்லுகிறார். ஏன்?

மற்றையவை ஒரு வழியில் ஞானத்தினை, இறைவனை அடைய உதவும் கருவிகள், மேல் மனம் இறைவன் மேல் செலுத்தலாம், புத்தி அறிவினை அடைந்து இறை ஞானத்தினை அடைய உதவும், அகங்காரம் நான் கடவுள் என்று உணர உதவியாக இருப்பது, ஆனால் சித்தமே இவை எல்லாவற்றையும் பதிந்து வைக்கும் கோப்பு மட்டுமே, அது தானாக எதையும் செய்யாது. மற்றைய மூன்றும் ஆன்மாவின் இச்சைக்கு ஏற்ப மாறக்கூடியவை, ஆனால் சித்தத்தில் உள்ள பதிவுகள் நிரந்தரமானவை, அவற்றை அகற்றாமல் மனிதன் எதுவித மாறுதலுக்கும் உள்ளாக முடியாது. மனிதனின் துன்பத்திற்கு காரணம் மேல் மனமல்ல, மேல் மனம் ஒன்றை அவதானிப்பதுடன் அதன் வேலை முடிந்து விடுகிறது, அதற்கு மேல் அது அதனை பற்றுவதில்லை.

அடுத்து புத்தி இது சரி, இது பிழை என சுட்டிக்காட்டுவதுடன் தனது வேலையினை முடித்துக்கொள்கிறது. அதுவும் மனிதனை ஒரு விடயத்தினை பற்றிக்கொள்ள வைப்பதில்லை.

அகங்காரமும் இவற்றிற்கேற்றவாறு மாறும் தன்மை உடையது, இந்த மூன்றையும் உருபெற வைக்கும் தகவல்களைக் கொடுப்பது சித்தம் எனும் பதிவகமே.

அதாவது புத்தி இது சரி இது பிழை என முடிவெடுப்பது சித்தத்தில் உள்ள பதிவுகளுக்கேற்பவே!

மேல் மனம் ஒரு வியயத்தை நாடுவதற்கு விருப்பத்தினை உண்டு பண்ணி தீனி போடுவது இந்த சித்தத்திலுள்ள பதிவுகளே!

அது போல் ஒருவர் தனது அகங்காரத்தின் மையத்தினை உருவாக்குவதும் சித்தத்திலுள்ள பதிவுகளுக்கு ஏற்பவே!

ஆக மேல் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கும் சேர்ந்த மனம் என்ற தொகுதியில் சித்தம் என்ற பதிவுகளை சேகரிக்கும் கூறே மற்றைய மூன்று பகுதிகளையும் ஆட்டிப்படைத்து வைக்கிறது, இதுவே மனிதனது துன்பங்கள் இன்பங்கள் எல்லாவற்றிற்கும் காரணம், இதில் உள்ள பதிவுகளின் படியே மற்றைய கூறுகள் நடக்கும். இந்தப்பகுதியில் நல்லவற்றைப் பதித்தால் நல்லதும், தீயவற்றை பதித்தால் தீயது நடக்கும்.
ஆக இதுவரைகாலமும் நீங்கள் சித்ததில் சேர்த்த பதிவுகள் எல்லாவற்றையும் நீக்கும் செயல் முறையே யோகத்தின் முதற் படி என்பதனை சுட்டிக்காட்டவே இந்த சூத்திரத்தில் "சித்த வ்ருத்தி நிரோத" என்றார்.

இதுவரையும் மனமும் சித்தமும் ஒன்றல்ல என்பதனையும் சித்தம் என்பது மனதின் மிகவும் பலமாக கூறு என்பதனையும் பார்த்தோம். இதனை கையாளத்தெரிவதே யோகத்தின் முதற்படி என்பதனையும் பார்த்தோம்.

இதனை எப்படி சாதிப்பது? அதையும் இந்த சூத்திரத்தில் கூறியுள்ளார்,

அது பற்றி அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

8 comments:

  1. eagerly waiting for the next post. Thanks - CSRK

    ReplyDelete
  2. im waiting for your valuable post..

    ReplyDelete
  3. I am waiting for the next post.

    ReplyDelete
  4. உங்கள் பதிவிற்கு காத்து இருக்கும்

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா,
    அருமையாக விள்க்குகிறீர்கள். நான் இறைமறுப்புக் கருத்தாளன்,அத்வாது ஆத்மா என்பது உடலில் இருந்து மாறுபட்டது என்பதை ஏற்பது இல்லை. மூளையின் செயலே சிந்தனை,அது பல அடுக்குகளைக் கொண்டது என்பதையும் உங்கள் கருத்துக்கள் மறுக்கவில்லை.

    நமது முன்னோர்களான சித்தர்களின் மன கட்டுப்பாடு சார்ந்த ஆய்வுகளை,எழுத்துக்களை மனோவியல் என்ற ரீதியில் அணுகுவதில் நமக்கு உடன்பாடே!!. அதுவும் உங்கள் பதிவில் உள்ளது அருமை. மாற்றுக் கருத்தாளர்களுக்கும் சிந்திக்க விடயம் கொடுக்கிறீர்கள் நன்றி தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. This post is more informative, very useful and clearly written. I enjoyed reading it and thank you for writing.

    ReplyDelete
  7. When I went to Dentist last Saturday, I read a pamphlet about Maum Meditation. It claims that founder of the practice in 1996 started teaching concepts similar to the ones mentioned in your blog post. If you did not mention about these things as ancient Siddhar's and Rishi's teachings then I would start believing that these concepts are founded in South Korea. The following are some links to that organization: http://maum.org/eng/meditation/levels.asp
    http://maum.org/eng/meditation/whatmaum_01.asp

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...