குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 05, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 03 - காயத்ரி சாதனை மூலம் பிள்ளைப்பேறு, குழந்தைகளை நல்வழிப்படுத்தல் )


ஒரு மனிதனை உருவாக்குவது பெண், அதனாலேயே பெண் தாய் எனும் ஸ்தானத்தினனை அடைகிறாள். ஒரு பெண் தாயாக பல கடமைகளை செய்யவேண்டி இருக்கிறது. குழந்தைகளை பெறுவதிலிருந்து, வளர்த்து நல்வழிப்படுத்தும் வரை தாயின் பங்கே முழுமையானது. இந்த ஆற்றலை உலகையே ஈன்று, பராமரிக்கும் ஜெகன்மாதாவின் சிறு செயல் வடிவத்தையே ஒரு பெண் தாயாக செய்கிறாள். அந்த பெண் ஜெகன்மாதாவின் ஆற்றலை பெற்றால் இந்தப்பணியினை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். ஒரு குழந்தையின் அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை தாயினுடைய பிரதிபலிப்பாகவே அமையும். இந்தவகையில் மகப்பேற்றுடன் தொடர்பான சில காயத்ரி சாதனைகளை கீழே தருகிறோம்.

சாதனை - 01
கருவுற்றிருக்கும் தாய் சந்தியா வேளைகளில் (காலை சூரியோதயம், மாலை சூரிய அஸ்தமனம்) காயத்ரி மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் சூரியனிலிருந்து அறிவுமயமான ஒளி கருப்பையினூடாக வந்து கருவை அடைவதாக பாவிக்கவும். இப்படிப்பட்ட சாதனையினால் பிறக்கும் பிள்ளை அறிவாற்றல் நிறைந்ததாகவும், ஞானமுடையதாகவும், நீண்ட ஆயுள் உடையதாகவும் இருக்கும். 

சாதனை - 02
கருப்பையில் பிரச்சனை உடையவர்கள் மேற்குறித்த நேரங்களில் நீராடி இடுப்பில் ஈர ஆடையுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து காயத்ரியினை சூரியனின் ஒளிவடிவாக தியானித்து யோனி வழியாக அந்த சூரியன் ஒளி சென்று கருப்பையினை அடைவதாகவும் கருப்பையில் உள்ள குறைபாடுகள் மாதாந்த தீட்டுடன் செல்வதாகவும் பாவித்து வரவேண்டும். இதனை கண்களை மூடி மனதில் தியானித்து வரவேண்டும். இது கருப்பையினை பலப்படுத்தி கருவுறக்கூடிய தன்மையினை ஏற்படுத்தும். இந்த சாதனை முடிந்தபின்னர் கைகளில் நீரை எடுத்து சூரியனுக்கு அர்க்கிக்க வேண்டும். அதன் பின்னர் உள்ளங்கைகளில் நீரை விட்டு குடிக்கவேண்டும்.  இதே சாதனைதான் குந்திதேவி கர்ணனை பெற்றெடுக்க செய்த சாதனையாகும். இந்த சாதனையினை கன்னிப்பெண்கள் செய்யக்கூடாது. இது குழந்தை இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்தவர்கள், கருவழிவு ஏற்படுவது ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும் அரிய சாதனையாகும். 

சாதனை - 03
சோம்பல், படிக்க விருப்பமில்லாத, அடிக்கடி நோய் வரும் குழந்தைகளுக்கு தாய் குழந்தையினை மடியில் வைத்து மனதில் காயத்ரி தேவி அன்னப்பறவையில் இருப்பதாக கைகளில் சங்கு சக்கரம் வைத்திருப்பதாக பாவித்து காயத்ரி மந்திரத்தினை மானசீகமாக ஜெபித்த வண்ணம் தலையினை தடவியவாறு சில நிமிடங்கள் செய்யவும். குறிப்பாக குழந்தைகள் நித்திரைக்கு செல்லும்போது செய்யலாம். இது குழந்தையின் அறிவு, புத்தி, மனம், உடல் ஆகியவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்தி நல்ல வழியில் செல்லவைக்கும். இதே சாதனையினை பாலூட்டும் தாய்மார் குழந்தைக்கு பாலுட்டும் போதும் செய்யலாம். வியாழக்கிழமைகளில் ஒருவேளை உணவுடன் விரதமிருந்து சூரிய அஸ்தமனத்தில் குழந்தையுடன் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்து, குழந்தையின் தலையில் சிறிதளவு நீர் தெளிக்கவும். 

அன்பான தாய்மார்களே, மேற்கூறிய முறைகள் விரைவாக சித்திப்பதற்கு நீங்கள் கட்டாயம் 125 000 ஜெபம் முடித்து தினசரி எளிய முறை காயத்ரி உபாசனை செய்து வரவேண்டும் என்பதனை மறக்கவேண்டாம்.

அனைவரும் இன்புற்றிருக்க ஜெகன் மாதா காயத்ரியை பிரார்த்திக்கிறோம். 

ஸத்குருபாதம் போற்றி!

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...