குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 03, 2012

தெய்வ உபாசனை செய்வது எப்படி? - அறிவியல் விளக்கம்

பொதுவாக தெய்வத்தினை வணங்குவது பகுத்தறிவுக்கு ஒவ்வாது, பக்திமார்க்கம் இளகிய மக்களின் மனதினை வசப்படுத்தும் ஒரு உத்தி என தெய்வ வழிபாட்டினை ஒதுக்குவோர் பலர் உள்ளனர். அதுபோல் பல வருடங்கள் தெய்வத்தினை வணங்கி ஒருபயனும் பெறாதோர் பலர் விரக்தி உற்று வணங்காமல் விட்டு விடுகின்றனர். ஒரு சிலர் சிவவாக்கியர் பாடல்களை எடுத்து வைத்துக்கொண்டு புறவழிபாடு தேவையில்லை அக வழிபாடு மட்டும்தான் சித்தர்கள் கூறியுள்ளார்கள் என வாதிடுவர். இந்தக் காலகட்டத்தில் மேற்கூறிய கருத்துக்களை மறுப்பதற்கில்லை. குருதத்துவத்தினை என்பது முற்றாகவே தவறாக பிரச்சார உத்தியாக்கப்பட்டு, தனிமனித வழிபாடாக்கி மதிமயங்கி மயக்கமுற்று திரிவோர் பலர், இன்றைய காலகட்டத்தில் தெய்வ வழிபாடு, பூஜை, கோயில், ஆசிரமம் என்பனவெல்லாம் பணம் சேர்க்கும் படோபமான இடங்கள் ஆகிவிட்ட நிலையில் மக்கள் மனதில் விரக்தியும், ஏக்கமுமே மிஞ்ச்சி நிற்கின்றன. 

அது சரி இத்தனையும் வகுத்தவர்கள் எமது முன்னோர்களே, இவ்வளவற்றையும் ஒருவித பிரயோசனம் ஏதும் இல்லாமலா செய்துவைத்தார்கள்? என்பதும் வலுவான கேள்வி. இதற்கு சரியான பதிலே மக்கள் மனதில் உள்ள இந்த நிலையினை ஆற்றக்கூடியது. அந்த வகையில் தெய்வ வழிபாடு, கோயில் என்பவற்றின் தத்துவத்தினை விளங்க முற்படுவோம். 

எமது முன்னைய பதிவுகள் பலவற்றில் விளக்கியுள்ளோம், மனிதனின் அடிப்படை மனம், பிராணன், உடல் என்ற இந்த மூன்றும்தான். நாம் எதைச் செய்தாலும் இந்த மூன்றையும் உபயோகித்துதான் செய்கிறோம். எமது முன்னோர்கள்/சித்தர்கள் மனிதன் பெறவேண்டிய அடிப்படை கல்வி என்பது ஒருவன் தன்னை அறிதலே ஆகும் என எண்ணி அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்கள். அதாவது வெளியில் உள்ள அண்டத்தினை அறியவேண்டுமானால் முதலில் தன்னில் உள்ள பிண்டத்தினை அறியவேண்டும் என்பதற்கான வழிமுறைகளே இந்த தெய்வ உபாசனை/வழிபாடு, கோயில் வழிபாடு. பொதுவாக எந்த உயரிய விதியும் சரியாகவும் பயன்படுத்தலாம், பிழையாகவும் பயன்படுத்தலாம். இது விஞ்ஞானத்திற்கும் பொருந்தும், மெய்ஞ்ஞானத்திற்கும் பொருந்தும். ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சக்தி சமன்பாடு இன்று உலகை அழிக்கவல்ல அணுகுண்டாகவும் உருவாகியுள்ளது, அதே நேரம் மின் உற்பத்தி முதற்கொண்டு பல பிரயோசனமான பௌதீக சக்திகளை விளங்கிக்கொள்ளவும் பயன்படுகிறது. இதே கதிதான் எமது சித்தர்கள் உருவாக்கிய தெய்வ வழிபாடுகள், கோயில் வழிபாட்டு முறைகளுக்கும் நடந்தது. அதாவது பிழையான பிரயோகங்களின் விளைவே முதற்பந்தியில் கூறிய நிலையின் காரணமாகும். 

சரி பீடிகை ஏதுமில்லாமல் தெய்வ வழிபாட்டின், கோயில் வழிபாட்டின் உண்மைத்தத்துவம் என்னதான் என்று சொல்லிவிடுங்கள் எனக்கூறுகிறீர்கள் அல்லவா! அதன் சுருக்கம் வருமாறு;

அனைத்து தெய்வவழிபாடுகளும் ஆழ்மனது மூலம் தெய்வ சக்தியினை தொடர்புகொள்ளும் செயல்முறைகளே. பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் அனைத்தும்  மனிதனின் மனம் மூலமே செயற்படுகிறது. 

இந்த செயற்பாடு இயற்கையாக அமைந்த அளவில் இருக்கும் போது சீரான வாழ்க்கையினையும் அல்லாத போது துன்பத்தினையும் அனுபவிக்கிறோம். ஆக இந்து மதத்தில் ஏன்  பலகடவுள்கள் உள்ளார்கள் என்பதற்கும் இதுவே விளக்கம். ஒவ்வொரு சக்தியினையும் மனதினை ஒருமைப்படுத்த வல்ல வகையில் உருவமைத்து உள்ளனர். 

ஒரேகடவுளை வணங்குபவர்கள் எப்படி நன்மை பெறுவது? பலவித பிரார்த்தனை மூலம்,  தமக்கு வேண்டியவற்றை தகுந்த கருத்து வாக்கியங்களை அமைத்துக்கொண்டு  ஆழ்மனதினை செயற்படுத்தி பயன் பெறலாம். 

அப்படியானால் மனச்சக்தி மட்டும்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ளதா ? என்ற கேள்வி எழலாம் . அதற்கு பதில் அலை வேகம் கூடிய பிரபஞ்ச மனச்சக்தியினையே  தெய்வ சக்தி என்கிறோம். அவற்றை ஈர்க்கும் செயன்முறையே தெய்வ உபாசனையும் அவற்றின் மற்றைய வடிவங்களும்.  அதாவது மனிதமனம் அத்தகைய உயர் சக்திகளை ஈர்த்து அறியகாரியங்களைசெய்ய வல்லது.

இத்தகைய அரிய உண்மைகள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு பிற்காலத்தில் மதம் சமயம் என்பன ஒரு அதிகார அலகாக  மற்றப்பட்டதன் விளைவே இன்றைய சமூகத்தின் நிலையாகும். 

1 comment:

  1. இக்கட்டுரையின் சாராம்சத்தில் எனக்கு உடன்பாடு உள்ளது.

    தொடருங்கள்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...