குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, September 26, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 02)


சென்ற பகுதியில் இந்த எளிய காயத்ரி உபாசனையின் அங்கங்களைப் பார்த்தோம். இந்தப்பதிவில் அவை ஒவ்வொன்றினதும் விரிவான விளக்கத்தினையும் செய்முறையினையும் பார்ப்போம். இந்த பதிவில் முதலாவது அங்கம் குருவணக்கம்;

குருவணக்கம்: 

குருதத்துவம் பற்றி எமது மற்றைய பதிவுகளில் படித்தறியலாம். உபாசனையில் குருவணக்கத்தின் அவசியம் யாதெனில் குருபரம்பரையினூடாகவே மந்திர சக்தி கடத்தப்பட்டு வருகிறது. அதாவது மந்திர சித்தி பெற்ற குருவுடன் நாம் சூட்சுமமாக தொடர்பினை ஏற்படுத்தி அந்த நிலையினை எம்மில் ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையே குருவணக்கம். உதாரணமாக பௌதீகவியலில் காணப்படும் அலைகளது செயற்பாட்டு தத்துவத்தின் மூலம் இதனை விளங்க்கி கொள்ளலாம். குரு தனது சாதனையின் மூலம் தனது சூஷ்ம உடலினை மந்திர சக்தியின் வடிவாக ஆக்கு வைத்திருப்பார். அவர் தனது சூஷ்ம உடலிலிருந்து எப்போதும் இந்த தெய்வ கதிர்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார். இது சக்தியினை வெளிப்படுத்தியவண்ணம் இருக்கும். நாம் அந்த சக்தியினை பெறும் உத்திதான் இந்த குருவணக்கம். அதாவது ஒருவகை டியூனிங்க் எனக்கூறலாம். இது சித்தர்களின் வழிமுறையில் சித்தி பெற்றவர்களின் மூலம் செய்யவேண்டியது. இனி செய்முறை;

செய்முறை: 
இந்த வலைப்பின்னல் மூலம் சாதனையினை தொடங்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையில் தொடங்கலாம். இந்த குருவணக்கத்தில் முதல் பகுதி எமது வாழ்வில் நாம் அறிவு ஞானம் என்பவற்றில் முன்னேறி இந்த பூவுலகில் இன்பமாய் காரணமாய் இருந்த ஆரம்பகர்த்தாகளின் ஆசியினை பெறுவது. இரண்டாவது பகுதி குரு தத்துவத்தின் இலட்சணம் எமது மனதில் பதிவித்துக்கொள்ள பொருளறிந்து பாடப்படுகிறது. மூன்றாவது பகுதியிலுள்ள குருமார் இந்த சாதனைமுறைகளை உங்களுக்கு இந்த வலைப்பின்னலூடாக அறியத்தரும் குரு பரம்பரையினர். இவர்களது ஆசியும் வழிகாட்டலும் சரியான சூஷ்ம தொடர்பு இருந்தால் மட்டுமே சாதனையில் முன்னேற முடியும். நாங்காவது பகுதியில் உள்ள ரிஷிமார் இந்த மந்திரத்தின் சித்தி, சக்திகளை கட்டுப்படுத்துபவர்கள், ஜெபிக்கும் எல்லாருக்கும் அனைத்து ஆற்றல்களும் வந்து விடாது, தவறான வழியில் பயன்படுத்த நினைப்பவர்களை கட்டுப்படுத்தி, அனுபவங்கள் மூலம் நல்வழிப்படுத்தி படிப்படியாக உங்களில் காயத்ரி மந்திரசக்தியினை செயற்படுத்தும் அதிகாரிகள். இவர்களது ஆசிகள் மந்திர சித்தியிற்கு முதன்மையானது.

முதல் பகுதியில் கூறியது போல் உருவவழிபாடு செய்ய விரும்புபவர்களாக இருந்தால் சாதனா குருமார்களில் படங்களை எமக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேட்கலாம். அல்லது நீங்கள் சாதனையின் போது ஏற்றும் விளக்கிலேயே ஒளி ரூபமாக அனைவரையும் ஆவஹிக்கலாம். 

முதல் பகுதி:
  • ஓம் தாயே நமஹ அல்லது போற்றி - சாதகன் பெற்ற தாயினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், பெற்ற தாயே ஒருவனின் முதல் குரு, 
  • ஓம் தந்தையே நமஹ அல்லது போற்றி -  தந்தையினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், தகப்பன் இரண்டாவது குரு. 
  • ஓம் ஸத்குருவே நமஹ அல்லது போற்றி - உங்களை ஞானப்பாதையில் வழிகாட்டிய அனைத்து குருமாரையும் நினைத்து அவர்களின் மானசீக ஆசியினை பெறுவதாக பாவிக்கவும்.
இரண்டாவது பகுதி:
பின்னர் கீழ்வரும் குருமந்திரத்தினை ஒரு முறை கூறவும்
  • குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ குரு சாஷ்ஷாத் பரப்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ - இதன் பொருள் சுருக்கமாக குருவே பிரம்மா, விஷ்ணு, சிவ ஸ்வரூபமாக எனக்கு பிரத்தியட்சமாக இருப்பவர், அவரே பரப்பிரம்ம ஸ்வரூபம் இத்தகைய குருவை நான் வணங்குகிறேன். 
  • ஆனந்தம் ஆனந்தகரம் ப்ரசன்னம் ஞானஸ்வரூபம் நிஜபோத ரூபம் யோகேந்திர மீட்யம் பவரோஹ வைத்தியம் ஸ்ரீம் ஸத்குரும் நித்யம் அஹம் பஜாமி
என குருவின் சக்தி உங்கள் உடலில் மனதில் வந்து சேர்வதாக பாவிக்கவும். உங்களில் உள்ள பாவங்கள் 

மூன்றாவது பகுதி:
பின்னர் 
  • ஓம் காயத்ரி சித்தரே நமஹ - சூஷ்ம உடலில் இருந்து பூவுலகில் காயத்ரி சாதனை செய்பவர்களுக்கு வழிகாட்டி வரும் குரு
  • ஓம் கண்ணைய யோகீஸ்வரரே நமஹ 
  • ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ - இந்த குருபரம்பரையின் ஆதிகுரு, கண்ணைய யோகீஸ்வரரின் குரு. 
நான்காவது பகுதி 
  • ஓம் விஸ்வாமித்திர மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தினை முதலில் உணர்ந்து உலகம் பயன் பெறவேண்டும் என வழங்கியவர்
  • ஓம் வஷிஷ்ட மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்
  • ஓம் பிரம்மாவே நமஹ -  காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்

ஆக அன்பர்களே தற்போது நீங்கள் இந்த எளியமுறை காயத்ரி உபாசனையில் நன்மையினை தவிர எதுவித தீங்க்கும் நிகழாது என்பதில் மனத்தெளிவு அடைந்திருப்பீர்கள். எனெனில் உங்களை சரியான வழியில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் இந்த குருவணக்கத்தின் மூலம் சாதிக்கிறீர்கள். ஆதலால் கட்டாயம் இந்த முறையில் குருவணக்கம் செய்வது முக்கியமான ஒன்று.


அடுத்த பகுதியில் பிரணாயாமம் பற்றி பார்ப்போம்...

2 comments:

  1. This is really very useful. very excited to see the rest of the parts. Thanks a lot. - CSRK

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள்

    அருமையான தகவல்கள்' பாராட்டுகள்.

    எனக்கு இரண்டாம் பகுதியின் இரண்டாம் குருமந்திரமும் அதன் தொடர்வையும் சற்று விளக்கவும்.

    மற்றவை அணைத்தையும் இலகுவாக விளங்கிகொண்டேன்...

    குருவே போற்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...