குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, September 18, 2012

காயத்ரி சாதனைக் குறிப்புகள் - பகுதி 01


காயத்ரி மந்திரமானது பாரத ரிஷிகள் மக்களுக்கு கொடுத்த பெரும் செல்வம், இதனை குறித்த ஒரு வகுப்பினருக்கு மாத்திரமுரியது என்று வரலாறுகள் திரித்து சாதாரண பாமர்களுக்கு கிடைக்கமுடியாதபடி செய்யப்பட்டு வந்தது. மதம் அரசியலானதன் விளைவு இந்த அரிய விடயம் தமிழ் மக்களால் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அகஸ்தியமகரிஷியிடம் வித்தை கற்று 108 வருடங்கள் இந்த பூவுலகில் வாழ்ந்து கண்ணைய யோகியார் தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு சித்தர் முறைப்படி சாபவிமோசனம் செய்வித்து காயத்ரி தீட்சை செய்வித்து வந்தார். அந்த வகையில் எமது குருநாதர் இலங்கையில் சாதாரண தோட்டத்தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து ஆன்ம தாகம் கொண்டு குருவைத்தேடி அலைந்த போது அவரை ஆட்கொண்டு காயத்ரி தீட்சை அளித்து குப்தவித்தையாக வைக்கப்பட்டிருந்த இரகசியங்களை உலகமக்கள் அறிந்துகொள்ளும்படி கற்பிக்கும் படி குரு இட்ட ஆணைப்படி, தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்து வந்தார், அவர் காயத்ரி சாதனையில் சித்தி பெற்றமையினால் காயத்ரி சித்தர் எனவே அழைக்கப்பட்டு வந்தார்.

இதுபோல் ரிஷிகளால் இந்த உலகிற்கு இவை கிடைக்கவேண்டிய காலப்பகுதியில் அவற்றை வெளிப்படுத்த தகுந்த ஆட்கள் மூலம் அவற்றை வெளிப்படுத்தியே வருகின்றனர்.

ஹரித்துவாரில் சாந்திகுஞ் எனும் நகரில் காயத்ரி சாதனையினை விஞ்ஞான முறைப்படி நிருபணத்துடன் இலவசமாக கற்பித்து வருகிறார்கள். இதன் நிறுவனர் பண்டிட், ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் காயத்ரி மந்திரத்தின் அனைத்து உண்மைகளையும் உலக மக்கள் அறியும் வண்ணம் வெளியிட்டுள்ளார்கள்.

எமது வலைப்பின்னல் தமிழ் மக்கள் இந்த உண்மைகளினை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக காயத்ரி சாதனை பற்றி எமது கற்கையிலும், சேகரிப்பிலும், தேடலிலும், குருமுகமாய் அறிந்த விடயங்களை தொகுத்து காயத்ரி சாதனை என்ற தொடராக வெளியிட முயல்கிறோம்.

இவற்றை எழுதுவதற்கான நேர அவகாசம் தர எல்லாம் வல்ல குருவருளை பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...