-
அனுஷ்டான சாதனையின் போது பிரம்மச்சரியம் இருத்தல் அவசியம், இல்லறத்தவர்கள் 15 நாட்களுக்கொருமுறை இல்லறத்தில் ஈடுபடலாம்.
- கீழ்வரும் ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவும்; சாத்னை காலத்தில் மற்றவரைக்கொண்டு சாதகன் தலைமுடி வெட்டிக்கொள்வது, சவரம் செய்துகொள்வதை தவிர்க்க வேண்டும், தானகவே சவரம் செய்துகொள்ளலாம்; வெறும் தரையில் நித்திரை செய்ய வேண்டும்; உணவு முடியுமானால் ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும், மற்ற வேளைகளில் பழங்கள், பால் என்பன உண்ணலாம்; தனது வேலைகளை தனே செய்து கொள்ளவேண்டும், மற்றவர்கள சாதகனது உடலை, உடைகளை தொடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இவை மிக மிக முக்கியமானவை அன்று, ஆனால் கடைப்பிடிதால் உடலிலும் மனதிலும் ஜெபசக்தியினை அதிகளவு சேர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
- ஜெபமாலையின் நடுவில் மேரு மணி இருக்கும், ஜெபம் பூர்த்தியாகும் போது அந்த மணியினை கடந்து செல்லக்கூடாது. மாலையினை திருப்பி அடுத்த மாலை ஜெபத்தினை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜெப முடிவிலும் மேரு மணியினை கண்களிலும் நெற்றிப் பொட்டிலும் வைத்து மறுபுறமாக திருப்ப வேண்டும். இப்படி செய்யும் போது ஆக்ஞா சக்கரத்தினுள் எமது ஜெப சக்தி இழுத்துக்கொள்ளப்படும்.
- ஜெபமாலை, யந்திரங்கள், சாதனை பொருட்களை சாதகன் தவிர்ந்த வேறு நபர்கள் தொடக்கூடாது.
- காயத்ரி சாதனை எந்த விதத்திலும் தீமை பயக்காதது. ஆதலால் யாவரும் பயமின்றி செய்யலாம். நன்மையினை மட்டுமே தரவல்லது. இந்த நிபந்தனைகளை கடைப்பிடிப்பதால் நன்மைகள் அதிகமாகவும், துரிதமாகவும் கிடைக்கும்.
- மந்திரம் சரியாக பயனளிக்க அதனை சரியான உச்சரிப்புடன் கூறுவது அவசியமாகும். காயத்ரி மந்திரத்தில் அந்த உச்சரிப்பு பிழையானாலும் பலதடவை முயற்சிக்க தேவியின் அருளால் சரியான உச்சரிப்பினை அறிந்துகொண்டு பயன்பெறும் ஆற்றலை தருவாள்.
- ஒருமுறை காயத்ரி சாதனை முயன்று விருப்பத்துடன் செய்து விட்டீர்கள் என்றால் உங்கள் மனது அதன் பயன் கண்டு மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டும். இதன் பயனாக படிப்படியாக உங்களில் ஞான வளர்ச்சியும், ஆன்ம வளர்ச்சியும் ஏற்படும். ஆதலால் எப்படியாவது இலட்சியத்துடன் ஒரு அனுஷ்டானத்தினை பூர்த்தி செய்ய முயலுங்கள். அதாவது 125 000 ஜெபத்தினை பூர்த்தி செய்தல் ஒரு அனுஷ்டானம் எனப்படும்.
- இப்படி ஒரு அனுஷ்டானம் பூர்த்தியான பின்னர் உங்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வீர்கள், மனம் அன்பு, கருணை, உற்சாகம் போன்ற உணர்வுகளால் நிரம்பி இருப்பதையும், எந்தவொரு சிக்கலான பிரச்சனைக்கும் நொடியில் தீர்வு காணும் ஆற்றலும் உண்டாகும்.
- இந்த சாதனையினை செய்வதற்கு ஜாதி, மதம், பால், வேற்றுமை, சமூக வேற்றுமை எதுவுமில்லை. யாருக்கு மனதில் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் குருவருளுடன் தொடங்கி பயன் பெறலாம். இறைவன் நீர் நிலம், காற்று என இயற்கையினை அனைவருக்கும் பொதுவாகத்தான் கொடுத்திருக்கிறான், அதுபோல் பிரபஞ்ச சக்தியான காயத்ரியும் அனைவருக்கும் பொதுவான ஒன்றே! ஆதலால் ஆர்வமுடைய எவரும் இதனை ஜெபிக்கலாம்.
- இடைக்காலத்தில் இந்த அரியவித்தை ஞானம் ஒரு வகுப்பாரிற்கு மட்டும் உரியது என மறைக்கப்பட்டு பெண்கள் ஜெபிக்கககூடாது என்று சுயநலமாக்கப்பட்டது. இவற்றில் எந்தவித உண்மையும் இல்லை, காயத்ரி மந்திரத்தில் வணங்கப்படும் தெய்வமே பெண்ணாக இருக்கும் போது எப்படி பெண்கள் ஜெபிக்கக்க கூடாது என்று சொல்லலாம். பெண்கள் தாராளாமாக ஜெபிக்கலாம். இந்த சாதனையினை செய்யலாம். இதனால் நல்ல ஒழுக்குமும் அறிவும் உடைய சமூகம் மிளிரும்.
- காயத்ரி சாதனை என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை, அதனை பயன்படுத்தி நன்மை பெறுவது அவரவர் விருப்பத்தினை பொறுத்தது. ஆகவே அனைவரும் காயத்ரி சாதனை செய்ய குருதேவரை பிரார்த்திக்கிறோம்.
- மேலும் காயத்ரி சாதனை பற்றிய பதிவுகள் சாதனை புரிய விரும்பும் சாதகர்களுக்காக இந்த வலைப்பதிவில் வெளியிடப்படும்.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Thursday, September 20, 2012
காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (பகுதி 02)
Srishti's yoga classes
Srishti's yoga classes start tomorrow; Today Sahasra Gayatri prayer at Gurunathar Gayatri Peedam as the promise of Agathi Maamak...

-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
அருமையான விளக்கம். நன்றி குருவே
ReplyDelete