குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, September 02, 2012

கும்பகப் பிரணாயாமத்தின் அவசியம்

இன்று யோகம் பயில்பவர்கள் பலர் பிரணாயாம பயிற்சியின் முக்கியத்துவம் அறிந்து அதனை பயிலவேண்டும் என்ற பெரும் ஆவலினால் புத்தகங்களை வாசித்து செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அதிலும் எல்லா நூற்களிலும் கும்பகப் பிரணாயாமம் செய்தால்  பல சித்திகள் வரும் என்று இருப்பதால் பலரும் அதனைச் செய்வதற்கு ஆர்வப்படுகின்றனர். இது பற்றி ஒரு சில கருத்துக்களை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம். 

எமது முன்னைய பதிவுகளை படித்தவர்கள் மனம், உடல், பிராணன் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும் இடைத்தாக்கமடைவதும் என்பதனை அறிந்திருப்பீர்கள். இவை மூன்று ஆன்மாவினைச் சூழ்ந்துள்ள கவசங்கள். இந்த மூன்றுமே பஞ்ச கோசங்களாக விரிவடைகின்றது. சாதனை அடிப்படையில் மனிதன் நேரடியாக இந்த மூன்றின் மூலமாகத்தான் அடுத்த இரண்டு கோசங்களை தொடர்புகொண்டு விரிவடையச் செய்யமுடியும்.  இந்த கோசங்கள்  "நான்" இல்லை என்ற அறிவு பெற்று இவற்றை ஒளிரச் செய்யும் உண்மையான ஆன்மாவினை அறிதலே யோக சாதனையின் நோக்கம். 

இந்த அடிப்படையில் பிரணாயாமம் என்பது பிராணன் மூலம் மனதினையும் உடலினையும் வலுப்படுத்தும் செயல்முறையாகும். இது மூச்சுடன் இரண்டற பிணைந்தது. மூச்சு சுவாசப் பையினூடாகவும் நரம்புத்தொகுதியின் ஊடாக கட்டுப்படுத்தப்படுகிறது . மூச்சினை உள்ளிழுக்கும் பொது மனிதனின் எழாதார சக்கரத் தொகுதியினூடாக (மூலாதாரம் தொடக்கம் சஹஸ்ராரம் வரை) பிராணன் உட்புகிகின்றது.  இதன் பின் இந்த சக்கரங்களில் சேமிக்கப்பட்டு சூஷ்ம உடலின் மூலம் மெதுவாக எமது உணர்ச்சிகள் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்தூல உடலிற்கு வெளிப்படுத்தப் படுகிறது. இந்த செயன்முறையே சாதாரணமாக ஒவ்வொரு கணமும் நடை பெற்றவண்ணம் உள்ளது. 

மூச்சினை ஆழமாக சுவாசிக்கும் பொது அதிகளவு பிராணன் உட்புகுகின்றது. இதனாலேயே பிரணாயாமத்தில் ஆழ்ந்து மூச்செடுக்கும் பயிற்சி ஆரம்ப பயிற்சியாக்கப்படுள்ளது.

இனி நாம் எடுத்துக்கொண்ட தலைப்பினைப் பற்றி பார்ப்போம். கும்பகப் பிரணாயாமம்  ஏன் அவசியம் என்று? ஏற்கனவே  மனம், உடல், பிராணன் ஆகியமூன்றும்  தொடர்புடையவை என்று பார்த்துவிட்டோம். இதில் பிராணன் சக்தியினை வழங்குகின்றது, உடல் ஆன்மாவிற்கான தளத்தினை (base ) வழங்குகின்றது .  மனம் ஆன்மாவினைச் சூழ கவசமாக பரிணமித்து மாயையில் ஆழ்த்துகின்றது. 

மனதின் நிலைகள் விழிப்பு, கனவு, நித்திரை, தூரியம், தூரியாதிதம் என ஐந்து வகைப்படும். முதல்மூன்று நிலைகளும் சாதாரணமாக உலக மாயையிற்கு ஆட்பட்டு வாழும் அனைவருக்கும் உள்ள நிலையாகும். ஆன்ம சாதனையில் ஈடுபட்டு ஆன்மாவினை அறிந்த விழிப்புணர்வு பெற்ற நிலை தூரியம் - விழிப்புணர்வு (awakened state ) எனப்படும். இந்த நிலைவாய்க்கும் போது ஆன்மா மனதினை தனது இச்சா சக்தியினால் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறது. அதாவது இதுவரை மனம் போன போக்கில் சென்ற உடல், பிராணன், புத்தி, ஆன்மா எல்லாம் தற்பொழுது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இது மனம் வசப்பட்ட நிலையாகும். இதுவே எந்த ஒரு சாதனையிலும் சாதாரண  மனிதன் அடையக்கூடிய அடுத்த நிலையாகும். 

இந்த தூரிய நிலையினை அடைவதுவே கும்பகப்  பிரணாயாமத்தின் உண்மையான நோக்கமாகும்.  இது எப்படி சாத்தியம் என்பதனை சற்று விளக்குவோம்.  

மேலே விளக்கப்பட்டது போல் மன-பிராண-உடல் இடைத்தொடர்புகளில்  பிராணன் ஓர் இணைப்புப் பாலமாகும். அதாவது binding  energy, இந்த ஓட்டத்தினை ஒருகணம் நிறுத்தினால் ஆன்மாவினைச் சூழ உள்ள கவசங்கள் அறுந்துபோகும். மரணத்தில்  பிராணனிற்கும் உடலிற்கும் இடையிலான தொடர்பு அறுந்தாலும் ஆன்மாவினைச் சூழ பிராண, மன, புத்தி கவசங்கள் ஒட்டிய வண்ணமே இருக்கும். அதாவது மரணம் என்பது உடலினைவிட்டு மற்றைய நான்கு கவசங்களும் பிரிதலேயாகும்.  

யோக இறை சாதனையில் உடலில் இருந்தவண்ணம் ஆன்மாவினைச் சூழுவுள்ள மற்றைய   கவசங்களை பிரித்து ஆன்மாவினை அறிகிறோம். இதற்கு கும்பகப்  பிரணாயாமம் துணைபுரிகிறது. எப்படி? மூச்சினை சில வினாடிகள் அடக்கும் போது பிராணன் அடங்க ஆன்மா தனது கவசங்களில் இருந்து பிரிந்து சுயத்தன்மை பெறுகிறது. இப்படி ஆகும் போது மனம் விழிப்புணர்வு அடைகிறது.  அதாவது தூரிய நிலை அடைகிறது. 

அப்படியாயின் மரணத்தின் போதும் மனிதன் பிராணனை இழக்கின்றானே? அப்போது  ஏன் அந்த நிலையினை பெறவில்லை!  

இந்த இடத்தில் எமது முன்னோர்கள் தேவர்களாக இருந்தாலும் மனித உடலிற்கு வந்துதுதான் தமது இறை சாதனையினை  பூர்த்தி செய்யவேண்டும்  , சித்தர்கள் மனித உடலினை போற்றியதன்  இரகசியத்தினை விளக்குவோம். 

தூரிய  நிலையினை அடைவதற்கு பிராணன், மனம், புத்தி கவசங்களை ஆன்மாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதனை அறிவோம். அவற்றை பிரித்து அழித்துவிட இயலாது, அப்படிச் செய்தால் அடுத்த நிலையினை (தூரியாதீதம் ) அடைய இயலாது. அவற்றின் பிடியிலிருந்து ஆன்மா வெளியில் வந்து அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருதலே தன்னையறிந்த நிலையாகும். இதன் பின்னரே ஆன்மா தலைவனை அறிந்து இறைவனை அடைதல் எனும் துரியாதீத நிலையினை அடைய முடியும். இப்படி மனம், பிராணன், புத்தி கவசங்களை சாதனையினால்  பிரிக்கும் போது அவற்றை இழுத்து பிடித்து வைத்திருக்க ஒரு தளம் வேண்டும், அந்த செயற்பாட்டினை உடல் செய்கிறது.  ஆக உடல் இன்றி மனிதன் தனது உண்மையான ஸ்வரூபமான ஆன்மாவினையும் அறிய முடியாது. இறைவனையும் அறிய முடியாது. 

இந்த நிலையே கும்பகப் பிரணாயாமத்தில் ஏற்படுகின்றது. ஒரிருகணம் பிராணனை கட்டுப்படுத்தும் போது மற்றைய கவசங்கள் ஆன்மாவிலிருந்து பிரிந்து ஆன்மா மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மனம் விழிப்புணர்வு  நிலையடைகிறது. மனம் விழிப்புணர்வு அடைந்த நிலையில்  சித்திகள் வாய்க்கின்றது. 

தற்போது அன்பர்களுக்கு சித்தர்கள் ஏன் கும்பக பிரணாயாமத்தினை வலியுறுத்தினார்கள் என்பதன் உண்மை நோக்கம் விளங்கியிருக்கும். ஓரளவு மன, உடல் சுத்தி இல்லாமல் அதிகளவு கும்பக பிரணாயாமம் செய்தல் உடலிற்கும் மனதிற்கும் கேடு விழைவிக்கலாம் என்பதில் அவதானமாக இருத்தல் வேண்டும். இன்னொரு வார்த்தையில் கூறுவதானால் கும்பகப் பிரணாயாமம் ஒருவகையில் உடலுடன் இருந்ததே விழிப்புணர்வுடன் மரணத்தின் அனுபவத்தினை பெறுதல் எனலாம். 

இறுதியாக பிராணாயாமம் பழக  விரும்பும் அன்பர்கள் தம் நோக்கத்தினை துணிந்து அதற்கேற்றவாறு தம்மை தயார்படுத்தி பழகுதல் வேண்டும் என்பதனை நன்கு அறிதல் வேண்டும். 

கும்பகப் பிரணாயாமம் ஆத்ம சித்திக்குரிய அரிய சாதனம். 

ஸத் குரு பாதம் போற்றி !

1 comment:

  1. புதியவர்களுக்கு எளிதாக புரியம் வண்ணம் சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். தொடருங்கள் ......

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...