குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 13, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -22

 




இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட தலைப்பு "தவபலன் பெற" 

இந்திய ஆன்மீக மரபுகளில், குறிப்பாக யோகா, தந்திரம், வேதாந்தம் மற்றும் ஆயுர்வேதத்தில், தபஸ்/தவம் என்பது ஒவ்வொரு மனிதனும் பெறவேண்டிய ஒரு ஒழுக்கமாகும். தவம் இல்லாமல் எதையும் மனிதன் சாதிக்க முடியாது. இந்த வார்த்தை சமஸ்கிருத மூல வார்த்தையான "தப்" என்பதிலிருந்து வந்தது, இதன் பொருள் வெப்பப்படுத்துதல், எரித்தல் அல்லது பிரகாசித்தல். 

தபஸ் என்பதன் நேரடி அர்த்தம் "அக வெப்பம்" அல்லது "நடத்தை அல்லது அணுகுமுறையின் கண்டிப்பு அல்லது கடுமை".

இது ஒழுக்கமான முயற்சி, சுய கட்டுப்பாடு மற்றும் உணர்வுடன் கூடிய பயிற்சி மூலம் உருவாகும் ஆன்மீக நெருப்பாகும். இந்த நெருப்பு அசுத்தங்களை (உடல், மன மற்றும் கர்ம) எரித்து, சாதகனை மாற்றி, அவர்களை சுயத்தை அல்லது தெய்வீகத்தை உணர்தலுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்காகப் பயிற்சிக்கப்படுகிறது. 

தவங்களின் மூன்று பரிமாணங்கள்: 

உடல் ரீதியான தவங்கள்: உடல் மூலம் ஒழுக்கத்தை கடைப்பிடித்தல். உபவாசமிருத்தல், பிரம்மச்சரியத்தை பராமரித்தல், யோகாசனங்கள் மற்றும் உடல் சுத்திகரிப்பு நடைமுறைகள். இந்த உடல் தவத்தின் நோக்கம் உடலை வலுப்படுத்தி தமஸை (மந்தநிலை) நீக்குதல்.


வாய்மொழி தவங்கள் (வாச்சிகா தவங்கள்): பேச்சின் ஒழுக்கம், உண்மையை பேசுதல் (சத்யம்), மந்திர ஜபத்தை பயிற்சி செய்தல், கடுமையான அல்லது தீங்கு விளைவிக்கும் வார்த்தைகளைத் தவிர்ப்பது. இதன் நோக்கம்: வாக்கினை தூய்மைப்படுத்துதல் மற்றும் தெய்வீக அதிர்வுடன் பேச்சை சீரமைத்தல்.

மன தவங்கள் (மானசா தவங்கள்): மனம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல். தியானம், கருணை, பொறுமை மற்றும் சமநிலையை வளர்ப்பது. இதன் நோக்கம்:  கோபம், பேராசை மற்றும் ஈகோ போன்ற மன அசுத்தங்களை எரித்தல்.

தபஸ் என்பது ஆன்மீக நோக்கத்துடன் கூடிய சுய ஒழுக்கம். இது அறியாமை, ஆசைகள் மற்றும் வரம்புகளை உணர்வுபூர்வமாக எரித்து, சுயத்தின் உள் ஒளியை வெளிப்படுத்தும் செயல்முறையாகும். இது வெறும் துன்பம் அல்லது துறவு அல்ல, மாறாக மாற்றத்தை ஏற்படுத்தும் நெருப்பு, விடுதலை (மோக்ஷ) பாதையில் அவசியமான படியாகும்.

முருகன் தவப் பிரியன், ஆறு நாட்கள் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது ஒருவகைத் தவமே! சிவபெருமானின் நெற்றிக்கண் பொறிகளில் இருந்து பிறந்த அக்னிவடிவானவன் என்பதால் முருகப்பெருமானே தவம் செய்யும் ஆற்றலைத் தருபவர். அதை இந்தப் பாடலில் கூறுகிறார் அருணகிரி நாதர். 

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.


கமுகம் பாளை போன்ற கூந்தலுடைய வள்ளியின் பாதங்களைப் பணிபவனே, தேவர்களின் அரசனே, தலைவனே, மேருவைப் போன்ற பெருமையுடையவனே, இளம் காளையைப் போன்ற குமரனே, உனது தாளைப் பணிந்து தவம் செய்யும் ஆற்றலைப் பெற்றேனே! 

இந்தப்பாடல் தவம் புரிவதற்குரிய ஆற்றலைப் பெற முருகப்பெருமானை தியானிக்கும் வழியையும் சூக்ஷுமமாகச் சொல்கிறது. பிரம்மனைச் சிறையில் இட்ட நேரம் வள்ளியுடன் கூடிய பிரம்ம சாஸ்தாவாக படைப்பினைச் சிறிது காலம் முருகப்பெருமான் நடாத்தினார். வள்ளியே சக்தியாக இருந்து படைப்பிற்குரிய ஆற்றலை வழங்கினார்.  தவம் செய்வதற்கு சக்தியிருக்க வேண்டும். அந்த ஆற்றலைத் தருவது வள்ளி என்பதால் பாடலில் வள்ளி பதம் பணியும் வேளைச் சுரபூபதி என்று விழிக்கிறார். 

இந்தப் பாடலிற்குரிய யந்திரமும், மந்திரமும் பிரயோகிக்க அது தவ சித்தியைத் தரும். கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிப்போர் எல்லோரும் இந்தப் பிரயோகத்தைச் செய்து தமது தவ பலனை அதிகரித்துக்கொள்ள முடியும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...