அஷ்டாவதானம் செய்ய
******************************
பதினைந்தாவது பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுச்சுவடியில் இட்ட தலைப்பு "அஷ்டாவதானம் செய்ய" என்பதாகும். அவதானம் என்பது முற்காலத்தில் மனோசக்தி விருத்தியின் ஒரு அமிசமாக, மிக உயர்ந்த கற்கையாக தமிழ், பாரத சமூகத்தில் கருதப்பட்டது. முற்காலத்தில் சமூகத்தில் அஷ்டாவதானம், சோடஷ அவதானம், ஸதாவதானம் பெற்றவர்கள் பெருமதிப்புடன் கௌரவிக்கப்பட்டார்கள்.
அவதானம் என்பது
- ஞாபகசக்தி - Memory
- தாரணா சக்தி - Concentration
- படைப்பாற்றல் சக்தி - Creativity
- மனதின் இருப்பு - Presence of Mind
- கவனச்சிதறலுக்கு மத்தியில் சமநிலை (சமாதி போன்ற நிலைத்தன்மை)
ஆகிய ஐந்து ஆற்றல்களையும் மனம் பெறும் நிலையாகு. இதன் மூலம் மனித மனம் ஒரு ஒழுக்கத்துடன் பயிற்றுவிக்கப்படும் போது எப்படி விரிந்து ஆற்றலுடையதாக அசாதாரண திறமைகளைப் பெறுகிறது என்பதை உணர்லாம். முற்காலத்தில் மனதின் திறனை வளர்ப்பதே உயர்ந்த கல்வியாக கருதப்பட்டது. இக்காலத்தில் வெறும் ஞாபகத்தில் பரீட்சை எழுதிப் பட்டம் வாங்குவதையே கல்வி என்று மனதின் மற்றைய பாகங்களை விருத்தி செய்பவற்றில் கவனம் செலுத்துவதில்லை.
இந்த அவதானம் 1) அஷ்டாவதானம் 2) ஸதாவதானம் 3) ஸஹஸ்ர அவதானம் என மூன்று வகைப்படும்.
இதில் முதல் நிலை அஷ்டாவதானமாகும். இதில் ஒருவர் எட்டு விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும்.
- ஸ்லோகார்த்த-பிரதானம் – கேள்வி கேட்பவர் சமஸ்கிருதத்தில் அல்லது தமிழில் பாதி வசனத்தைக் கொடுக்கிறார்; அவதானி அதை சரியான இலக்கணம், உரைநடை மற்றும் அர்த்தத்துடன் முடிக்க வேண்டும்.
- தத்தபத-காவ்யம் – கேள்வி கேட்பவர் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை (பதம்) கொடுக்கிறார்; அவதானி அதை அர்த்தமுள்ள வகையில் இணைக்கும் ஒரு வசனத்தை எழுத வேண்டும்.
- சித்ர-காவ்யம் – கட்டுப்பாடுகளுடன் வசனங்களை எழுதுங்கள் (பாலிண்ட்ரோம், இணைச்சொல், சில எழுத்துக்களைப் பயன்படுத்தாமல், முதலியன).
- சமஸ்யா-பூர்த்தி – ஒரு வரி அல்லது புதிர் வசனம் கொடுக்கப்படுகிறது; அவதானி அதைச் சுற்றி ஒரு முழு வசனத்தை உருவாக்க வேண்டும்.
- ஆசு கவி– கொடுக்கப்பட்ட கருப்பொருளில் உடனடி கவிதை.
- கணித பிரதானம் – கணித அல்லது தர்க்கரீதியான புதிர்களைத் தீர்க்கவும்.
- ஸ்மரண-சக்தி – தொடர்களை நினைவில் கொள்ளுங்கள் (எ.கா., நிகழ்ச்சி முழுவதும் சீரற்ற முறையில் கொடுக்கப்பட்ட தொடர்பில்லாத பொருள்கள், எண்கள் அல்லது சொற்களின் பட்டியலை ஞாபகத்தில் வைத்துக் கூறுவது).
- ஆபாத-ப்ரத்யுத்தரம் - நகைச்சுவையான அல்லது தத்துவார்த்த கேள்விகளுக்கு, பெரும்பாலும் வேண்டுமென்றே கவனச்சிதறல்கள் (சத்தம், நகைச்சுவைகள், குறுக்கீடுகள்) மத்தியில் தன்னிச்சையாக பதிலளிக்கவும்.
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.