**************
அனுக்கிரகம் பெற - மெய்ப்பொருள் உபதேசத்திற்கான பக்குவம் பெற
******************************
இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுப்பிரதியில் இட்ட தலைப்பு "அனுக்கிரகம் பெற" என்பதாகும்.
அனுக்கிரகம் என்பது சாதாரண அர்த்தத்தில் "ஆசீர்வாதம்" மட்டுமல்ல. அது தெய்வீக அருளாகும், இது ஆன்மாவை அதன் வரம்புகளுக்கு அப்பால் மாற்றுகிறது, விடுவிக்கிறது மற்றும் உயர்த்துகிறது, இது கர்ம விதியின் காரணமாக அல்ல, இறைவனின் எல்லையற்ற கருணை இரக்கம் மற்றும் விருப்பத்தின் காரணமாக வழங்கப்படுகிறது.
எமக்கு தெய்வத்தைப் பிடித்திருப்பதால் ஒரு பலனும் இல்லை. தெய்வத்திற்கு எம்மைப் பிடித்திருக்கும் நிலையே அனுக்கிரகம். உங்களை உங்கள் முதலாளிக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கேட்காமலே எல்லாச் சலுகைகளும் கிடைப்பதைப் பொன்ற நிலை அனுக்கிரகம்.
இன்று பலரும் தெய்வ உபாசனையில் தமது மன இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒருவித பேராசை நிலையிலேயே ஆரம்பிக்கிறார்கள். அதுபோல் குருவிடம் சென்று குருவின் மனதிற்கு பிடித்த நிலையைப் பெறாமல் குருவை தாம் விரும்பியதைச் சொல்லித்தர வேண்டும் என்ற முட்டாள்தனத்தில் அணுகுகிறார்கள்.
தெய்வ உபாசனையிலும், குருவிடமும் நாம் அனுக்கிரகத்தைப் பெறுவதை மாத்திரம் செய்தால் போதுமானது! மற்றவை தானாக நடக்கும். இது உலகியல் வழக்கிலும் சரியானது வேலைத்தளத்தில் எமது முதலாளியின் அன்பைப் பெற்றாலே மற்றச் சலுகைகள் வந்து சேரும்.
உபாசனையில் எப்போதும் ஆரம்ப காலத்திம் குரு காட்டிய வழியில் நாம் உபாசிக்கும் தெய்வத்தின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டியே சங்கல்பிக்க வேண்டும். அனுக்கிரகம் கிடைத்துவிட்டால் எமது மனவிருப்பங்கள் யாவும் தானாகவே சித்தியாகும்.
இந்தப்பாடலில் அந்தப் பரம்பொருள் முருகனின் அனுக்கிரகத்தைப் பெறும் பிரயோகத்தைச் சொல்கிறார். பாடலையும் பொருளையும் பார்த்த பின்னர் இதன் பிரயோகம் பற்றி உரையாடுவோம்.
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.