குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 06, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -20

**************

அனுக்கிரகம் பெற - மெய்ப்பொருள் உபதேசத்திற்கான பக்குவம் பெற

****************************** 



இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுப்பிரதியில் இட்ட தலைப்பு "அனுக்கிரகம் பெற" என்பதாகும். 

அனுக்கிரகம் என்பது சாதாரண அர்த்தத்தில் "ஆசீர்வாதம்" மட்டுமல்ல. அது தெய்வீக அருளாகும், இது ஆன்மாவை அதன் வரம்புகளுக்கு அப்பால் மாற்றுகிறது, விடுவிக்கிறது மற்றும் உயர்த்துகிறது, இது கர்ம விதியின் காரணமாக அல்ல, இறைவனின் எல்லையற்ற கருணை இரக்கம் மற்றும் விருப்பத்தின் காரணமாக வழங்கப்படுகிறது.

எமக்கு தெய்வத்தைப் பிடித்திருப்பதால் ஒரு பலனும் இல்லை. தெய்வத்திற்கு எம்மைப் பிடித்திருக்கும் நிலையே அனுக்கிரகம். உங்களை உங்கள் முதலாளிக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கேட்காமலே எல்லாச் சலுகைகளும் கிடைப்பதைப் பொன்ற நிலை அனுக்கிரகம். 

இன்று பலரும் தெய்வ உபாசனையில் தமது மன இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒருவித பேராசை நிலையிலேயே ஆரம்பிக்கிறார்கள். அதுபோல் குருவிடம் சென்று குருவின் மனதிற்கு பிடித்த நிலையைப் பெறாமல் குருவை தாம் விரும்பியதைச் சொல்லித்தர வேண்டும் என்ற முட்டாள்தனத்தில் அணுகுகிறார்கள். 

தெய்வ உபாசனையிலும், குருவிடமும் நாம் அனுக்கிரகத்தைப் பெறுவதை மாத்திரம் செய்தால் போதுமானது! மற்றவை தானாக நடக்கும். இது உலகியல் வழக்கிலும் சரியானது வேலைத்தளத்தில் எமது முதலாளியின் அன்பைப் பெற்றாலே மற்றச் சலுகைகள் வந்து சேரும்.  

உபாசனையில் எப்போதும் ஆரம்ப காலத்திம் குரு காட்டிய வழியில் நாம் உபாசிக்கும் தெய்வத்தின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டியே சங்கல்பிக்க வேண்டும். அனுக்கிரகம் கிடைத்துவிட்டால் எமது மனவிருப்பங்கள் யாவும் தானாகவே சித்தியாகும். 

இந்தப்பாடலில் அந்தப் பரம்பொருள் முருகனின் அனுக்கிரகத்தைப் பெறும் பிரயோகத்தைச் சொல்கிறார்.  பாடலையும் பொருளையும் பார்த்த பின்னர் இதன் பிரயோகம் பற்றி உரையாடுவோம். 

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

விரித்த, தாராண சக்தியுடைய மிகுந்த வலிமையுடைய எல்லோராலும் விரும்பப்படுபவனே, தேவர்கள் விரும்பும் தாரகப் பொருளே, நாகமாகிய குண்டலினி சக்தியைத் தாங்குபவனே, அடைவதற்கு அரிதாகிய மெய்ப்பொருள் உபதேசம் பெறுவதற்கு உரியவனான பக்குவம் உணர்த்தி விடு! 

இந்தப்பாடல் நாம் இறை அனுக்கிரகம் பெறுவதற்குரிய நிபந்தனைகளைக் கூறுகிறது. உயர்ந்த ஒருவருக்கு உங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்குரிய பண்பும், தகுதியும் உங்களிடம் இருக்க வேண்டும். அதுபோல் இறைவன் கருணையும், இரக்கமும் கொண்டு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்றால் எமக்கும் சில அத்தியாவசியப் பண்புகள் இருக்க வேண்டும். அவற்றை முருகனின் குணங்களாக உருவகித்துப் பாடுகிறார். அவையாவன 

விரிந்த மனம் 
தாரணையுடைய ஏகாக்கிர மனம் 
பலமான மனம் 
தெய்வ குணமுள்ள மனம்
நாகம் எனும் குண்டலினி சக்தி விழிப்பு

இவ்வளவு பக்குவமும் எமக்கு வாய்க்குமாக இருந்தால் மெய்ப்பொருள் உபதேசம் கிடைக்கும். எப்படி இந்தப்பக்குவத்தைப் பெறுவது? இந்தப்பாடலின் பொருள் அறிந்து, மூல மந்திரத்தை குருமுகமாகப் பெற்று, யந்திர சாதனைப் பிரயோகம் செய்ய எம்மில் இந்தப்பண்பு வளந்து முருகப்பெருமானின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிட்டும் .

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...