குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 28, 2021

தலைப்பு இல்லை

10) கயிற்றை சர்ப்பமென மயங்குதல் (ரஜ்ஜு ஸர்ப்ப நியாயம்)

இருளில் கயிற்றை மிதித்த ஒருவன் நச்சுப்பாம்பு தன்னைக் கடித்துவிட்டதாக குதித்து, பயத்தால் அழும் நிலை. அவன் நண்பர் விளக்கினைக் கொண்டுவந்து ஒளி பாய்ச்சியவுடன் சட்டென பயம் மறைந்து மனம் அமைதியடையும். 

இதைப்போலதான் நாம் எமக்கு ஏற்படும் துன்பங்களை, அறியாமை இருள் நிறைந்த மனதினால் தேவையற்ற பயங்களையும், குழப்பங்களையும் உருவாக்கிக்கொண்டு குழம்பி அழுகிறோம். அமைதியாக அறிவு எனும் ஒளிகொண்டு பிரச்சனைகளை ஆராயத்தொடங்க, அவை அனைத்தும் தீர்க்கக்கூடியவையே என்ற புரிதல் ஏற்பட்டு மனம் பயம் நீங்கி அமைதியடையும். 

எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதைத் தீர்க்கும் அறிவு என்ற ஒளி இல்லாததால் அந்தப்பிரச்சனையை பூதாகாரமாக்குகிறோம் என்பதைப் புரிந்திருத்தல் அவசியம். 

11) கானல் நீர் நியாயம் (ம்ருக த்ருஷ்ன நியாயம்)

பாலைவனத்தில் கானல் நீர் போலியானது; அதைப்பார்த்து ஓடக்கூடாது என்ற அறிவில்லாமல் பாலைவனத்தில் பயணிக்கும் ஒருவன் கானல் நீரை உண்மை என்று நம்பி அந்த இடத்தை அடைந்துவிட்டால் நீர் கிடைத்துவிடும் என்று அதை நோக்கி ஓடத்தொடங்குகிறான். இப்படி ஓடத்தொடங்கும்போது அவன் உடலில் சேர்த்து வைத்திருந்த ஆற்றலும் அதிகமாக இழந்து அங்கு நீரும் இருப்பதில்லை. அங்கிருந்து பார்க்க இன்னும் தூரத்தில் நீர் இருப்பதைப் போல் தோன்றி மீண்டும் ஓடுவான். இப்படி ஓடும் ஒருவன் எப்போதும் நீரைப் பெறுவதில்லை. தனது ஆற்றலை பாலைவனத்தின் வெப்பத்திற்கு இழந்து இறக்க நேரிடும். 

உலகவாழ்க்கையில் போலியான நட்புகள், அனைத்து இன்பங்களும் பாலைவனத்து கானல் நீர் போன்றவையே! இவை இன்பம் தரும் என்று ஓடிய எவரும் எந்த இன்பத்தையும் பெற்றதில்லை. 

12) ஆகாயம் நீலம் என்று நம்பும் நியாயம் (ஆகாஸ நீலிம நியாயம்)

பகலில் மாத்திரம் ஆகாயத்தைப் பார்த்த ஒருவன் ஆகாயம் என்றால் நீலம் என்று மாத்திரம் நம்பும் அறியாமையைக் குறிக்கும் தர்க்கம் இது. 

நாம் பலரையும் சில நேரங்களில் போடும் வேடங்களில் இவர் இப்படித்தான் என்று முத்திரை குத்தி நம்பிக்கொண்டிருக்கும் மனதின் அறியாமையைப் புரிந்துகொள்ள உதவும் தர்க்கம். 

இரவில் வானம் கறுப்பாக இருக்கும், மழையில் கருமுகில்களால் சூழப்பட்டிருக்கும் என்ற யதார்த்த உணர்வினை அறிந்திருத்தல் மூலம் ஆகாயம் பற்றி தெளிவான அறிவினைப் பெறலாம். 

இந்தத் தர்க்கம் ஒரு பொருளில் பல அமிசங்களை ஆழ்ந்து அகன்று நுண்ணி கற்க வேண்டும் என்பதைக் கூறும். 

13) கனக குண்டல நியாயம்

ஒரே தங்கத்தினை பொற்கொல்லன் தனது கலை நயத்தினால் பல்வேறு வகையான ஆபரணங்களாக வடிப்பான். அதே போல் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் ஒரு மூல வஸ்துவிலிருந்துதான் வந்திருக்கிறது என்ற அறிவு இருப்பவன் பேத புத்தியை வளர்த்து துன்பத்தில் விழமாட்டான்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...