குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 03, 2019

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் சுயகற்கை நெறி (Self-learning course)



அகத்திய மகரிஷியின் படம் அல்லது விளக்கு அவர் மனதிற்கு பிடித்த படி { குருநாதர் உயிரை ஒளியாக்கி நஞ்சினை வென்று பேரொளி நிலையை அடைந்த மகாகுரு, உருவம் என்பது எமது மனதிற்கு புரிதலுக்கு இலகுவான குறியீடே அன்றி இதுதான் அறுதி வடிவம் என்று முடிவு செய்யக்கூடாது}

படத்திற்கு முன்னால் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலினை ஒரு சிறிய மரப்பலகை அல்லது தட்டில் வைத்து நூலை குருவாக எண்ணி

“குருதேவா என் அகத்தில் ஈசனாக இருந்து இந்த நூலில் கூறப்பட்ட பேருண்மைகள் எனக்கு புரியும் ஞான ஒளி பெற வழிகாட்ட வேண்டும்” என்று பிரார்த்தித்து விட்டு கண்களை புருவமத்தியில் வைத்து ஒளி மண்டலத்தை மனக்கண்ணில் பார்த்து, அந்த ஒளி எமது உடலில் சேர்வதாக பாவித்து கீழ்வரும் அகத்தியர் மூல குரு மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவேண்டும். இடையில் வேறு சிந்தனைகள் வந்தால் அதுபற்றி கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

அகத்தியர் மூலகுரு மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ
மந்திர உச்சரிப்பினை இந்த ஆடியோவில் கேட்கவும்: https://soundcloud.com/sumanenthiran-thava/voice-003

இப்படி தினசரி 108 தடவை ஜெபித்து வரும் வேளை வாரத்தில், உங்களுக்கு வசதியான ஒரு நாளை உங்கள் கற்கைக்குரிய நாளாக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

அன்றைய தினம் ஒரு மணி நேரம் கற்கைக்கு ஒதுக்கி அந்தக்குறித்த நேரத்தில் முதல் பாடலை வரியாக படித்து விட்டு, அதன் பொருளை வாசித்து புரிய முயற்சி செய்யுங்கள். அடுத்து வரும் நாட்களில் நேரம் கிடைக்கும் போது அந்த வாரத்திற்குரிய பாடலின் பொருளை மீண்டும் மீண்டும் படித்து மனதில் சிந்தித்து வாருங்கள். படித்து விட்டேன் பொருள் விளங்கி விட்டது என்ற நினைவை எடுக்காதீர்கள். எவ்வளவு பொருள் விளங்கிவிட்டது என்று மனம் கூறினாலும் மீண்டும் மீண்டும் தினசரி அந்த ஒரு பாடலை மாத்திரம் அந்த வாரம் படியுங்கள்.  ஒரு நோட்டுப்புத்தகத்தில் உங்கள் சந்தேகங்களை குறித்துக்கொள்ளுங்கள். அவற்றிற்கு பதில் உடனடியாக கிடைக்கவேண்டும் என்று மனப்பதற்றம் அடையாமல் அவற்றிற்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கற்கையை தொடருங்கள். இப்படி 30 வாரங்களில் நூல் முழுமையையும் படித்து முடியுங்கள்.

இப்படிக் கற்கும்போது அரிய பல யோக இரகசியங்கள் உங்கள் ஆழ்மனமாகிய சித்தத்தில் புலப்படும். மெதுவாக உங்கள் ஆழ்மனத்தில் குருவின் பேரொளி துலங்கத்தொடங்கும். இதன் பயனாக நீங்கள் குருமண்டலத்தின் வழிகாட்டல் உங்களுக்கு கிடைக்கத்தொடங்கும். உங்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், கவலைகள் மெதுவாக நீங்கத்தொடங்கி உயர் யோக சாதனை செய்யக்கூடிய பண்பு உங்களில் உருவாகும்.

இதை செய்யத்தொடங்குவதற்கு எந்த நேர காலமும் பார்க்கத்தேவையில்லை. உங்கள் மனதில் செய்ய வேண்டும் என்று தோன்றியவுடன் செய்யத்தொடங்கவும். அந்த எண்ணமே குரு நாதரின் ஈர்ப்பு, அதை தவறவிட்டால் மற்றைய எண்ணங்கள் எமக்குள் வந்து இதை வலுவிழக்கச்செய்து எமது ஆன்ம முன்னேற்றத்தைத் தடுக்கும்.  

இப்படி கற்றலில் போது உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை ஆசிரியர் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களுடன் இந்த மின்னஞ்சலில் (sithhavidya@gmail.com) தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...