குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 15, 2019

குளத்தில் குப்பை போடும் மன நிலையும் குருவும்


*************************************
ஓரு சூழலியலாளனாக ஆய்வுகளை மேற்க்கொள்ளும் காலத்தில் நாம் அவதானித்த ஒன்று அருலில் குளம் குட்டைகள் இருந்தால் மக்கள் அதை உடனடியாக குப்பைத்தொட்டி ஆக்கி விடுகிறார்கள் என்பது. இதற்கான உளவியல் காரணம் என்ன என்பது பற்றி ஆராயும் போது குருவிடம் வரும் சிஷ்யர்களது மன நிலைக்கும் இதற்கும் தொடர்பிருப்பது புலனாகியது.
குளம் குட்டைகள் என்பதன் உண்மையான தேவை மேலதிகமாக வரும் மழை நீரை தேக்கி, பின்னர் மெதுவாக நிலத்தடி நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வது. குளம் இருப்பின் எமது வீட்டுக்கிணற்றில் கட்டாயம் நீர் இருக்கும். ஆகவே குளத்தின் தேவை எம்மை போசிப்பதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகவே எமது வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கையின் கூறினை தெய்வத்தன்மையாக பார்க்க குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க குளத்தருகே கோவில் கட்டி காவல் தெய்வங்களையும் ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் இன்றைய மனிதனுக்கு எதையும் நோண்டிப்பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே அன்றி புரிவதற்கு பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி நிலமாக்கினால் நல்ல விலை போகும் என்ற எண்ணமே இன்றைய மனிதனின் நிலை. இந்த மனித மன நிலையுடன் குளத்தில் குப்பையை கொட்டுகிறான்.
இதைப்போலவே குருவிடம் வரும் அனேகர் குருவின் ஞான சாகரத்திலிருந்து துளித்துளியாக, பெரும் குளத்திலிருந்து கிணறு நீரூற்றினைப் பெறுவது போன்று கருதாமல், குருவிடம் வந்து தமது மனப்பிரச்சனை, வாழ்க்கைப்பிரச்சனைகளை கொட்டி குளத்தை அசுத்தம் செய்யும் வேலையினையே செய்கிறார்கள். குருவிடம் உள்ள ஞானத்தைத்தினை துளியாக பெற்று பெற்ற துளியை மனம் என்ற குடத்தில் சேர்த்து, அதை ஒழுங்கு என்ற நெருப்பில் காய்ச்சி தம்மை உயர்த்தாமல் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும் என்று தமது குப்பையை கொட்டுகிறார்கள்.
ஆக குளத்தில் குப்பையை கொட்டுவது, குருவிடம் வந்து ஞானத்தையும், மனவலிமையை பெறும் சாதனையை குரு காட்டிய வழியை பின்பற்றாமல் இருப்பதும் அடிப்படையில் ஒரே மன நிலை தான்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...