குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 29, 2018

ஸ்ரீ குருபாதுகா ஸ்தோத்திரம்

சாதகர்களுக்கு....
குருபாதுகை என்பது குருவின் பாதங்களை தாங்கும் மிதியடி, இது யோக தாந்திர விஞ்ஞானத்தில் குருவின் சக்தியை, குரு எந்த விதமான வழிமுறைகளில் தனது ஆன்ம முன்னேற்றத்தினை பெற்றால் என்ற தகவல் அடங்கிய ஒரு memory chip. எவராவது ஆன்ம முன்னேற்றம் பெறவிரும்பினால் அவர் தனது ஸ்வ குருவின் பாதுக்கைகளை தியானித்து படிப்படியாக ஆன்ம முன்னேற்றம் பெறலாம்.

இங்கு நாம் கடந்த குருப்பூர்ணிமாவில் சிந்தித்த தியானித்த ஐந்து சுலோகங்களின் பொருளை சுருக்கமாக விளக்கியுள்ளோம். இவை இலக்கண அறிவு கொண்டு எழுதப்பட்டதல்ல, ஆதலால் பிழைகள் இருக்கலாம்.
குருகீதையின் முதல் ஐந்து ஸ்லோகமாக சில சம்பிரதாயங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் உண்மை ஸாதகர்களுக்கு பெரும் அம்ருதமும் ஆனந்தமும் தரக்கூடியது.


ஸ்ரீ குருபாதுகா பஞ்சகம் – 01 
ஓம் நமோ குருப்யோ குருபாதுகாப்யோ நம: 
பரேப்யஹ: பரபாதுகாப்யஹ:
ஆசார்யசித்தேஸ்வரபாதுகாப்யோ நமோ நமஹ: 
ஸ்ரீ குருபாதுகாப்யஹ: ||1||

ஓம் குருவிற்கும் குருவின் பாதுகைகளுக்கு வணக்கம், 
பரமான உயர்ந்த தத்துவமாக இருக்கும் குருவிற்கும், அந்த உயர் பரத்தத்துவத்தை உணரச்செய்யும் குருபாதுகைகளுக்கு வணக்கம், 
சித்தர்களுக்கு ஈஸ்வர ரூபமான குருவின் பாதுகைகளுக்கு வணக்கம், வணக்கம்
ஸ்ரீ குருபாதுகைக்கு வணக்கம்!


குருபாதுகா ஸ்தோத்திரம் - 02
ஐம்கார ஹ்ரீம்கார ரஹஸ்யுக்த ஸ்ரீம்கார குதார்த மஹாவிபூத்யா
ஓம்கார மர்ம ப்ரதிபாதினிப்யாம் நமோ நமஹ; ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||2||


எவர் மந்திர ஸப்தங்களின் இரகசியங்களை கூறித்தருபவரோ, அதிலும் மஹா விபூத்யமாக (மஹா சக்திகளான) ஓம்காரம், ஹ்ரீம்காரம், ஐம்காரம், ஸ்ரீம் கரம் ஆகிய நான்கு சக்திகளினதும் இரகசிய அர்த்தத்தை விளக்கும் ஸ்ரீ குருவின் பாதுகைக்கு வணக்கம்!


குருபாதுகா ஸ்தோத்திரம் - 03
ஹோத்ராக்னி ஹௌத்ராக்னி ஹவிஸ்ய ஹோத்ர் ஹோமாதி ஸர்வாக்ர்தி பாஸமானம் யத்ப்ரம்ஹ தத்போத்ஹவிதாரினீப்யாம் நமோ நமஹ: ஸ்ரீ குருபாதுகாப்யாம்.


எவருடைய பாதுகை பிரம்ம ஞானத்தை தருவதோ, எது ஹோத்ரா, ஹௌத்ரா போன்ற ஸர்வ அக்னிகளின் ஜொலிப்பாக இருக்கிறதோ, அந்த குருபாதுகைக்களுக்கு வணக்கம்.


குருபாதுகா ஸ்தோத்திரம் - 04
காமாதிசர்பவ்ரஜகாருடாப்யாம் விவேகவைராக்யனிதிப்ரதாப்யாம்
போதாப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம் நமோ நமஹ: ஸ்ரீ குருபாதுகாப்யாம்


எனது காமாதி மனோ விகாரங்களை சர்ப்பங்களை கவ்வும் கருடனைப்போன்று அழிக்கும் வல்லமை உள்ளதும், எது விவேவகத்தையும், வைராக்கியத்தையும், ஞானத்தையும் தருவதோ, எது மோக்ஷத்தை தருவதோ அந்த ஸ்ரீ குருவின் பாதுகையை வணங்குகிறேன்.


குருபாதுகா ஸ்தோத்திரம் – 05 
அனந்தசம்ஸார ஸமுத்ரதாரனௌகாயிதாப்யாம் ஸ்திரபக்திதாப்யாம்
ஜாட்யாப் திஸம்சோசனவாதவாப்யாம் நமோ நமஹ; ஸ்ரீ குருபாதுகாப்யாம்


அனந்த ஸம்ஸார சமுத்திரத்தை கடக்க உதவும் கப்பல் போன்றதும், எனது உணர்வற்ற ஜடத்தன்மையை உள்ளுறையும் அக்னியால் எரித்து, ஸ்திர பக்தியை தரும் ஸ்ரீ குருவின் பாதுகையை வணங்குகிறேன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...