குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, July 24, 2018

மன அழுத்தம் பற்றிய உரையாடல்




மன அழுத்தம் பற்றி நண்பர் ஒருவர் கருத்துப்பகிரும் படி ஒருமுறை கேட்டிருந்தார். விளக்கமாக எழுதவேண்டும் என்பதற்காக வேலைப்பளு குறைந்த பின்னர் எழுதலாம் என்று பிற்போட்டிருந்தேன்.
மன அழுத்தம், மன நோய்களைபற்றி அறிந்து வீணாக எனக்கு மன நோய் இருக்கிறதா என்று பயந்து நோயாளியாகாமல் முதலில் மனச்சமநிலை, மன ஆரோக்கியம் என்றால் என்ன என்பது பற்றி புரிந்து கொள்ள வேண்டும். மனதின் அரோக்கியத்திற்கு நான் கு கால்கள் உண்டு

·        முதலாவது எண்ண ஓட்டம் (thought process) : இது எதை நாம் மனதில் சிந்திக்கிறோம், எப்படி சிந்திக்கிறோம் என்பதும் குறித்த விஷயத்தைப்பற்றி எப்படி நாம் கற்பனை செய்கிறோம் என்பதும். இதுவே எமது சிந்தனையின், மனதின் முதல் படி, நாம் கண், காது, செவி, வாய், தோல் என்ற ஐந்து புலன் களின் மூலம் பெற்ற அனுபவங்களூடாக உலகைப்பற்றிய சிந்தனையை எமது மனதில் ஆரம்பிக்கிறோம். உதாரணமாக சாரயம் அருந்த ஆரம்பிக்கிறோம் என்றால் அதற்கான எண்ண ஓட்டம், எமது சூழல் இருந்தோ, எமது சூழலில் பலம் பொருந்தியவர், ஆதர்சனமானவர் தலைவர் என்று நம்பப்பட்டவரிடமிருந்தோ எமது மனதிற்கு கிடைக்கிறது,  இதை மனம் பெற்றுக்கொண்டு நாமும் சாரயம் அருந்த வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை ஆரம்பிக்கிறது. இப்படி ஆரம்பிக்கப்பட்ட எண்ண ஓட்டம் மனதின் அடுத்த பாகத்தால் மேலும் நெறிப்படுத்தப்படுகிறது.
·        விளைவுபற்றிய அறிவு (knowledge of effect) : இது நாம் சிந்திக்கத்தொடங்கிய எண்ண ஓட்டத்திற்கு எமது மனதின் ஒரு பாகமாகிய அறிவு எப்படி பதிலளிக்கிறது என்பது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கிறது. ஒன்று விழிப்புணர்வு, இரண்டாவது தர்க்க சிந்தனை. மேலே நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தை இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு ஆரய்ந்தால், சாராயம் அருந்த வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது, ஆனால் தீர்மானிக்கவில்லை, இந்த தீர்மானத்தை பெறுவதற்கு எமது மனதிடம் இரண்டு அறிவு சார் பகுதிகள் இருக்கிறது. விழிப்புணர்வுடன் சாராயாத்தின் விளைவு என்னவென்று ஆராய்ந்தால் அது அதன் விளைவுகள் முழுமையும் அறிவிக்கும், அதுபோல் தர்க்க சிந்தனை விளைவுகளை சரியான வகையில் ஒழுங்குபடுத்தும். சாராயம் அருந்தினால் மூளையின் சம நிலை கெடும், ஈரல் கெடும், சிறு நீரகம் கெடும், மனதின் விழிப்புணர்வு நிலை கெடும், அடிமைப்ப்படுவோம் என்ற ஒழுங்கில் சிந்திக்கும் போது குடிக்க கூடாது என்ற முடிவிற்கு வருவோம். அப்படி இல்லாமல் வெளிநாட்டு சாராயத்தை அப்படியே கிளாஸில் ஊற்றி, அதற்கு கொஞ்சம் மினரல் வாட்டர் கலந்து, சர் என்று உறிஞ்சி அடித்தால் அதுதான் பேரின்பம் என்ற் தர்க்க ரீதியாக சிந்தித்தால் குடிப்போம் என்று முடிவு செய்யும். இப்படி முடிவு செய்துவிட்டால் அடுத்து வருவது மனதின் வெளிப்பாடு.
·        நடத்தை (Behavior): இது அறிவால் முடிவு செய்யப்பட்ட மனதின் வெளிப்பாடு. நாம் மேலே கூறிய உதாரணத்தின் படி குடிகாரனாகப் போகிறாரா இல்லையா என்பதன் வெளிப்பாடு. அறிவு முடிவு செய்தன் படி நடத்தை காண்பிக்கப்படும். இன்னொரு புறத்தில் மற்றவர்கள் காண்பிக்கும் நடத்தையில் இருந்து நாம் எமது அறிவை கட்டமைத்துக்கொள்கிறோம். ரஜனிகாந்த், விஜய் சிக்கரட் குடிப்பதால் தாமும் சிக்கரட் குடிக்கும் பழக்கம் வருபவர்கள் இந்த வகையினர். ஆக நடத்தை பரிமாறிக்கொள்ளப்படும். இந்த நடத்தை தினசரி பயிற்சிக்கப்படும் மன எண்ண ஓட்டங்களால் தீர்மானிக்கப்படும். தினசரி நூற்கள் படிக்கும் பழக்கம் இருந்தால் அதன் பிரகாரம் அவரது நடத்தை இருக்கும். அவரை அறிவாளி என்போம். தினசரி குடித்துப்பழகுபவர் குடிகாரர் ஆகிறார். தினசரி எழுதிப்பழகுபவர் எழுத்தாளர் ஆகிறார். ஆக நடத்தை மற்றவர்களில் இருந்து எமது அறிவு ஏற்றுக்கொள்வதனாலும், நாம் பயிற்சிப்பதாலும் உருவாகிறது. இப்படி உருவாகிய நடத்தையால் வருவதே மனதின் நிலை
·        மனதின் நிலை (mood): நடத்தை அறிவு, மனது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்போது எமது மன நிலை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறது. இல்லாத போது குழப்பமாகவும் துன்பமாகவும் இருக்கிறது. ஆக மன நிலை நடத்தையின் மதிப்பீட்டினாலேயே பெறப்படுகிறது.

இனி மன அழுத்தத்திற்கு வருவோம், மேலே கூறப்பட்ட ஒழுங்கில் மனதிற்குள் என்ன செல்கிறது என்பதை கவனிப்பது எண்ண ஓட்டத்தில் தங்கியுள்ளது. இப்படி சென்றது சரியா பிழையா என்பதை தீர்மானிப்பதற்கு மனதிற்கு போதுமான அனுபவமும், அறிவும் இருக்க வேண்டும், பின்னர் அந்த அறிவு குறித்த்த எண்ண ஓட்டத்தின் விளைவு பற்றி சரியான அனுமானத்தை மனதிற்கு விழிப்புணர்வுடன் ஆராய்ந்து சொல்ல வேண்டும். இப்படிச் அறிவு சொல்வதால் எம்மில் வரும் நடத்தையை கட்டுப்படுத்தும் ஆற்றல் எமக்கு இருக்க வேண்டும். இப்படி கட்டுப்படுத்தும் ஆற்றல் இருந்தால் எமது மன நிலை சம நிலையுடன் இருக்கும்.
ஆக மன அழுத்தம் இருக்கிறது என்றால் முதலில் செய்ய வேண்டியது எமது எண்ண ஓட்டம் எப்படி செல்கிறது என்பதை கவனித்தல், எம்மால் கவனிக்க முடியவில்லை என்றால் எம்மை புரியக்கூடிய நல்ல ஆசானின் உதவியை பெறல். எண்ண ஓட்டம் சீர் செய்வதாலேயே மன அழுத்தத்தை வேரிலிருந்து சரி செய்ய முடியும்.
இதை கணணி உதாரணம் மூல விளங்குவோம். ஒரு மென்பொருளில் வரும் கோளாறு (bug) மன அழுத்தம் என்றால் அதனுடைய algorithm மீளவும் ஒன்றின் பின் ஒன்றாக ஒழுங்கு பார்க்கப்பட்டு சரி செய்தால் மட்டுமே அந்த மென்பொருள் சரியா இயங்கும். இல்லாமல் கணணியை மூடிவைத்தால் உண்மையான பிரச்சனை தீராது. அதுபோலவே மன அழுத்தத்திற்கு மருந்து மாத்திரை பாதித்தல். இவை மனம் வேலை செய்யும் நரம்புகளை ஓய்வெடுக்க வைப்பதன் மூலம் சற்று பிரச்சனையை தள்ளி வைக்கிறது. ஆரோக்கியத்தை தருவதில்லை. மீண்டும் உடல் விழிப்படைந்தவுடன் பிரச்சனையும் விழிப்படையும்.
இது பற்றி மேலதிக விஷயங்களை ஆர்வமுடையவர்களின் உரையாடல் மூலம் தொடர்வோம்….

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...