குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 08, 2018

என் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16

யோகமாணவன் ஏன் தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும்?


இன்பம் தரும் செயல்கள் என்பவை ஒருவன் தனது புலன்களை திருப்திப்படுத்துவதற்கும், அகங்காரத்தை திருப்திப்படுத்துவதற்கும் செய்யும் செயல்கள். உதாரணமாக தனது இன்பத்திற்காக டிவி பார்க்க வேண்டும் என்று எண்ணும்போது பிள்ளையின் படிப்பு கெட்டுப்போகலாம். 

மேலும் புலன்களை அதிகம் பயன்படுத்தும் போது அதற்கான பிராணனின் செலவும் அதிகரிக்கும். இதனால் உடல் நலம் கெடும். 

இங்கு குரு நாதர் இன்பம் தரும் செயல்களில் ஈடுபடுவதே கூடாது என்று கூறவில்லை. இன்பம் தரும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல் நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும் என்றே கூறுகிறார். 

ஆகவே நன்மை என்பது பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். எமக்கும், குடும்பத்திற்கும், நாம் வாழும் சூழலிற்கும், சமூகத்தினதும் சமநிலையைக் குழப்பாததும், உயர்வினை தருவதுமான செயல்கள் நன்மை எனப்படும். 

ஆகவே சாதகன் ஒவ்வொரு செயலையும் தான் இதை தனது இன்பத்திற்காக செய்கிறேனா? இதன் நன்மை தீமை என்ன? அதனால் வரும் விளைவுகள் எவை என்பது பற்றி கட்டாயம் ஆராயவேண்டும். இப்படி ஆராய்வதன் மூலம் அவன் தன்னுள் இருத்தி தியானிக்கும் அந்த புத்தியை தூண்டும் ஒளியை தனது புத்தியில், மனதில் இருந்து செயற்படுவதை அனுபவத்தில் அறிவான். இதனால் தனக்கு நன்மை தரும் செயல்களை மட்டும் செய்வதன் மூலம் இன்பமான எதிர்காலத்தை கட்டமைக்கிறான்.

மேலும் நாம் இன்பம் என்று நினைக்கும் எதுவும் உண்மையான இன்பமாக இருப்பதில்லை. அது இறுதியில் ஏதோ ஒருவகை துன்பத்தையே தரும். ஆனால் செய்யப்படும் செயல்கள் யாவும் இறுதியில் விளைவுகளை தரும். ஆகவே புத்தி விழிப்படையாத நிலையில் இன்பம் என்று செய்யப்பட்ட செயல்கள் இன்பத்தை தருவதற்கு பதிலாக  துன்பத்தை தந்துவிடும். 

உதாரணமாக உணவின் மூலம் நாவிற்கு இன்பத்தை பெறுகிறோம் என்ற நினைப்பில் நாம் உண்ணும் உணவு எமக்கு கேடாகிறது. ஆனால் சாதகன் தனது நாவிற்கு இன்பத்தை விட உடலிற்கு நன்மை தரும் உணவை தேடவேண்டும்.

இதுபோன்று ஒவ்வொரு செயலிலும் தனது இன்பத்திற்கு செயல்களை செய்கிறோமா? நன்மைக்காக செயல்களை செய்கிறோமா? என்பதை சிந்தித்து செய்பவனே சாதகன் - யோக மாணவன். 




No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...