குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, July 03, 2018

என்மாணவன்: சாதனா உரையாடல் - 14

நேற்றைய உரையாடல்

ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்

ஆசையுடன் பாசமும் சேர்ந்தே உலக வாழ்க்கையினை உருவாக்குகிறது. ஆசை இன்றி உலகில் நாம் எதையும் சரியாக செய்ய முடியாது. பாசம் இன்றி நாம் எதனுடனும் ஒன்றி இயங்க முடியாது. ஆகவே ஆசையும் பாசமும் உலக வாழ்க்கைக்கு அவசியம்.

பாசம் மேலும் எட்டு விதமாக பிரியும். இதை அஷ்ட பாசங்கள் என்று கூறுவார்கள். அவையாவன

1. க்ரோதம் – வெறுப்பு
2. சந்தேகம்
3. பயம்
4. வெட்கம்
5. வெறுப்பு
6. குலம் – ஜாதி
7. நிறம் – உடல் அழகு
8. ஒழுக்கம்

இந்த எட்டும் சேர்ந்தே ஒருவனின் ஆங்காரம் உருவாகும். அல்லது ஒருவனின் ஆங்காரத்தின் உப பிரிவுகள் எனலாம்.

ஆங்காரம் என்பது மனிதனின் மனம் இயங்குவதற்குரிய மையம் எனக்கண்டோம். ஆங்காரம் உருவாவது பாசத்தால் என்றால் மனம் செயல் கொள்வது இச்சை என்ற ஆசையால்.

எனவே ஒரு மனிதனின் இயக்கத்தில் இவையிரண்டும் அவசியம். எனினும் இவை மனிதனின் உண்மை ஆன்ம சொருபத்தினை சார்ந்தவை அல்ல. ஆன்மா தனது உண்மை நிலையை அடைய தடுக்கும் திரைகள்.

சாதகன் உண்மையில் இதுதலைக்கொள்ளி எறும்பு போல் உலக வாழ்க்கையினை வாழ ஆசையும் பாசமும் வேண்டும். அதேவேளை ஆன்ம முன்னேற்றத்திற்கு இவை தடையாகவும் அமையும். எனவே அவற்றை தள்ளியும் வைக்க வேண்டும்.

எனவே அவனுக்கு இருக்கும் ஒரே தெரிவு நடிப்பதுதான். ஆகவே உலக வாழ்க்கையில் இருக்கும் போது தனது நடிப்பு சிறக்க ஆசையும் பாசமும் உள்ளவனாக இருக்க வேண்டும். ஆனால் தனது உண்மை இலக்கான ஆன்ம முன்னேற்றத்திற்கு பாதிப்பு வரும் வகையில் அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. எப்படி என்றால் ஒரு நடிகை தனது அழகை கூட்டிக்காட்ட மேக்கப் போட்டுக்கொள்வாள், ஆனால் அதனால் அவளது உண்மை அழகு கெட்டுவிடக்கூடாது.

இதுவே ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்


என்பதன் பொருள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...