குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 26, 2013

அனைவரும் பயன்பெறக்கூடிய திரிபலா காயகற்ப முறைகள்

 இந்தப்பதிவில் ஆயுர்வேத நூற்களில் காணப்படும் நான்கு வகையான காயகற்ப முறைகளை கூறுகிறோம்.  இவை ஒருவர் நூறாண்டு காலம் வாழ்வதற்கான கற்பமுறைகள். மேலும் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். காயகற்பம் உண்டு விட்டு வாழ்க்கையினை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொண்டிருந்தால் நூறாண்டு காலம் வாழலாம் என்று நினைக்கும் நபர்  நீங்கள் இல்லை என எண்ணுகிறோம். சித்தர்களது நோய் அணுகா விதியும், பிரணாயாமம், தியான மனச்சாதனையும் உடைய சாதகர் ஒருவரே சித்தர் நூற்களில் கூறப்படும் காயகல்பத்தின் நூறாண்டு வாழ்க்கை எனும் முழுமையான பலனை அனுபவிக்க முடியும். மற்றவர்கள் வாழும் வரை ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில் காயகற்பம் என்பது சாதகன் தனது சாதனையினை பிறவிப் பெரும் பயனை அடைவதற்கு பயன்படுத்த பட்ட ஒன்று. இங்கு  கூறப்படும் நான்கு முறைகளில் முதல் இரண்டு முறைகள்  அனைவராலும் பயன்படுத்தக்கூடியது.  

திரிபலா கற்ப முறை - 01
முதல் தடவை உணவருந்தி நன்கு சமிபாடடைந்தவுடன், அடுத்த சாப்பட்டிற்கு ஒருமணி நேரம் முன்னதாக ஒரு கடுக்காயின் அளவு கடுக்காய் பொடி  வெந்நீருடன் அருந்தவும். பின்னர் சாப்பாட்டிற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்னர் இரண்டு பழங்கள்  அளவுள்ள தான்றிக்காய் பொடி  அருந்தவும்,  உணவின் பின்னர் நான்கு பழ அளவுள்ள நெல்லிக்காய் பொடி நெய்யுடன் அருந்தவும். இந்த முறை சரக சம்ஹிதையில் உள்ளதன் படி. இங்கு ஒரு கடுக்காயின் அளவு என்ன? இரண்டு தான்றிக்கயின் அளவு என்ன? நான்கு நெல்லிக்காயின் அளவு என்ன என்று சந்தேகம் வரலாம். அதற்கு இலகுவாக உங்கள் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் முன்றையும் சேர்த்தால் அள்ளக்கூடிய அளவில் 1: 2: 4 என அருந்தலாம். இந்த மூன்று  பொடிகளும் எல்லா சித்த ஆயுள்வேத மருத்துவ கடைகளிலும் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு இருவேளை. 

இப்படி தினமும் அருந்துபவர்களுக்கு நூறாண்டு ஆயுள் நிச்சயம் என சரஹ சம்ஹிதை குறிப்பிடுகிறது.  

திரிபலா கற்ப முறை - 02
திரிபலா பொடியினை எடுத்து நன்கு நீர்விட்டு  பிசைந்து படை போலாக்கி கொண்டு இரும்பு சண்டியின் உள்புறத்தில் தடவி 24  மணி நேரம் சாதாரண அறை வெப்பநிலையில் காய வைத்து (வெயிலில் இல்லை) சுரண்டி எடுத்துக்கொள்ளவும். இது இலங்கை, இந்தியபோன்ற நாடுகளில்தான் சாத்தியம். பின்னர் நன்கு போடி செய்து தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து நீருடன் அருந்தி வர நோயற்ற வாழ்வும் நூறாண்டு ஆயுளும் உண்டாகும்.

திரிபலா கற்ப முறை - 03
திரிபலா சூரணம், அதிமதுரம், மூங்கில், திப்பிலி, சக்கரை சம அளவு கூட்டி தேனும் நெய்யும் இட்டு தினமும் உணவிற்கு பின்னர் 10 கிராம் அளவு இருவேளை உண்டு வரநோயற்று ஆயுள் கூடும். 

திரிபலா கற்ப முறை - 04
இது குறித்த அளவு தங்கம், வெள்ளி, அய பஸ்பங்கள் ஏதாவது ஒன்றுடன் திரிபலா, வசம்பு, திப்பிலி, வாய்விடங்கம், கல்லுப்பு போன்ற சரக்குகள் சேர்த்து செய்யும் கற்பம். 

எளிய முறை திரிபலா கற்ப முறை - 05:
தினசரி 5 கிராம் அளவு திரிபலா சூரணம் இரு வேளை உணவின் பின்னர் உண்பது.

இவற்றுள் எளிய முறைகளான் 01, 02, 05 இல் உங்களுக்கு வசதியான ஒன்றினை பின்பற்றலாம். 

4 comments:

  1. கற்ப முறை 3 ல் " மூங்கில்" ‍என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
    நீங்கள் மூங்கில் அரிசியை குறிப்பிடுகின்றீர்களா? அல்லது வேறு ஏதேனும் குறிப்பிடுகின்றீர்களா?

    ReplyDelete
  2. அது மூங்கிலின் மேல் சீவிய பட்டையின் பொடியினை குறிப்பிடுகிறது,

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...