குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 28, 2020

தலைப்பு இல்லை

எமது இயற்கை விவசாயத் தோட்டத்திற்குள் உருவாகியிருக்கும் தேன் கூடு! 
இயற்கை எப்பொழுதும் தன்னைத் தானே சமநிலையாக வைத்துக் கொள்ளும். எமது ஐந்தடுக்கு முறை உணவுக்காடு ஆனது இயற்கையாகவே உருவாகிய காடுகளை ஒத்ததான அமைப்பிற்கு சாட்சியமாக எமது ஐந்தடுக்கு பயிர்ச் செய்கை உணவுக் காட்டில் தானாகவே உருவாகிய தேனிக்களின் கூடு இனி எமக்கு இந்த உணவு காட்டினுள் மகரந்த சேர்க்கை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இது எமது சாகம்பரா இயற்கை விவசாயப் பண்ணை முகாமையாளரின் இன்றைய பண்ணை முன்னேற்றம் பற்றிய அறிக்கை!
ஒரு விவசாயத் தொழில் நிபுணர் இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் எப்படிச் செயல் புரிகிறது என்பதைப் புரிந்து அதை தனக்குச் சாதகமாக்கும் மனதினை, பார்வையினைப் பெற்றிருக்க வேண்டும்! அந்த வகையில் தொழில் முறை விவசாய நிபுணர் ஒருவர் தேனிக்களின் சூழலியல் முக்கியத்துவத்தைப் புரிந்து விவசாயத் திட்டங்களை உருவாக்குவது என்பது மிக அத்தியாவசியமானது! 
இப்படியான இயற்கையைப் புரிந்து அதனுடன் ஒத்திசைந்து வாழும் தொழில் நிபுணர்களை உருவாக்குவதற்கே நாம் நேரத்தை செலவிடுகிறோம்! 
தோட்டத்திற்குள் தேனியும், சிலந்தியும் இருக்கிறது என்றால் நாம் பீடை கொல்லிகள் எதையும் விசிறவில்லை என்பதற்கான சான்றாதாரம்! இன்று சூழலியல் சான்றுப்பத்திரங்கள் வர்த்தகத்தில் பல இலட்சம் ரூபாய் கொடுத்து பெறப்பட்டு அதற்காக மக்களிடம் சேதன விவசாயப்பொருட்களுக்கு அதிகளவு கட்டணம் கோரப்படுகிறது. ஆனால் சில அடிப்படைச் சூழலியல் குறிகாட்டிகள் (environmental indicators) தெரிந்திருந்தால் அவற்றை இயற்கை விவசாய பூமி என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். 
1) சிலந்திக்கூடுகள்
2) தேன் கூடுகள்
இவை இருந்தால் அங்கு பீடைக்கொல்லி பாவிக்கப்படவில்லை என்று அர்த்தம். 
ஒரு சதுர அடி மண்ணில் 13 -15 மண்புழுக்கள் இருந்தால் அந்த மண் இரசாயன உரம் பாவிக்கப்படவில்லை என்று அர்த்தம்! 
அடுத்தது கத்தரி, வெண்டி போன்றவை அதீத சுவையுடன் இருக்கும். பாகல் ஆக இருந்தால் அது உச்ச பட்ச கசப்புடன் இருக்கும்! 
இப்படி எளிய குறிகாட்டிகளை (simple indicators) உருவாக்கி நாம் எமது கிராமத்திற்குள் நம்பிக்கையையும், சான்றாதாரங்களையும் உருவாக்கி இயற்கை விவசாயப்பொருட்களிற்கு மதிப்புக் கூட்ட வேண்டும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...