குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 01, 2020

தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய புதிய 2020 வருட நல் வாழ்த்துக்கள்
புதிய வருடத்தைக் கொண்டாடுவது என்பது மனதினை புதுப்பித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்! 
மனதினை எப்படிப் புதுப்பித்துக் கொள்வது என்பதற்கு இந்தப் பிரார்த்தனைப் பாடல் துணை செய்யும்! 
எமக்கு மேலான சக்தி எதுவும் இருந்தால் அதை எமக்குத் தெரிந்த பிரத்தியக்ஷ தெய்வமான தாயாக எண்ணி அதனிடம் விண்ணப்பிப்பது என்பது உணர்வுப் பூர்வமானது. 
"அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! 
ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என அனைவருக்குமாக பிராத்திக்கிறோம்!" 
இவை அனைத்தும் மனிதனுக்கு அடிப்படையில் இருக்க வேண்டிய பண்புகள்! பிரபஞ்ச மகாசக்தியை தாயாக எண்ணி எம்மில் அந்தப் பண்புகள் வரவேண்டும் என்று சொல்லும் பிரார்த்தனை! 
அருள் என்றால் கருணை, வாழ்வில் கருணை உள்ளம் வாய்த்திட வேண்டும்! எமக்கு உள்ளத்தில் கருணை இருப்பதுடன் எமக்கு மேல் இருக்கும் அனைத்து சக்திகளின் கருணையும் எங்களுக்கு வாய்க்க வேண்டும். 
செல்வம் இல்லார்க்கு செல்வாக்கு இல்லை!
எது சரி, எது பிழை, எது உண்மை? எது பொய்? என்ற ஞானம் வாய்த்தால் வீணாக துன்பத்தில் மாட்டிக் கொள்ள மாட்டோம்! 
வலியது தக்கனப் பிழைத்து வாழும், வலிமை பெற ஆற்றல் வேண்டும்! 
ஆற்றல் பெற்றால் மனதில் அன்பு இருத்தல் வேண்டும்! அப்படி இருந்தால் தான் நாம் மற்றவர்களுக்கு உதவும் பண்பு உள்ளவர்களாக இருப்போம்! அன்பு இருந்தால் நல்ல பண்பும் வாய்க்கும்! 
பொருள் இருந்தால் தான் இவ்வாழ்க்கை இல்வாழ்க்கை வளம் பெறும்!
நலம் என்பது துன்பமற்ற நலமான வாழ்க்கை.
பொறுமை இருந்தால் மனம் அடங்கி சிறப்படையும்! 
ஈகை தன்னிடமிருப்பதை மற்றவரிடம் பகிரும் பண்பு!
இவையெல்லாம் எம்மில் பொருந்தி நீண்ட ஆயுளும், உடல் மன ஆரோக்கியமும் துன்பத்தைத் தீமையைக் கண்டு அஞ்சாத வீரமும் இருத்தல் வேண்டும்.
எம்மை வழி நடாத்தும் இறைசக்தி மேல் பக்தியும் அன்பும் இருக்க வேண்டும்! 
இருக்கும் செல்வமும் கீர்த்தியும் தேயாமல் வளர வேண்டும்! 
இவை அனைத்தும் இருந்தால் அந்த வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக பரிபூரண வாழ்க்கையாக இருக்கும். 
இது மனிதர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எமது பிரார்த்தனையாகட்டும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...