குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 15, 2020

தலைப்பு இல்லை

நண்பர் ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருக்கிறார்! 

நான் அளித்த பதில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்! என்று!

உடனே அது தமிழர்களை ஏமாற்றச் செய்த சதி! சொதி என்று வியாக்கியானம் வேறு! 

அவருக்கு நான் அளித்த பதில்; 

பாரம்பரியமாக வானியலை அடிப்படையாகக் கொண்டு இராசி மண்டத்தை 12 ஆகப் பகுத்து, அதில் தொடக்கப் புள்ளியாக மேஷ ராசியை வைத்து, அந்த ராசிக்குள் சூரியன் நகர்வதையே ஆண்டின் முதல் நாளாக எனது பாட்டன், முப்பாட்டன் எல்லோரும் பின்பற்றி வந்திருக்கிறார்கள்! மாதப்பிறப்பு என்பது ஒவ்வொரு இராசியில் சூரியன் புகும் முதல் நாள்! இன்று தை மாதப்பிறப்பு! இது அறிவியல் பூர்வமான வானியல் காரணமும் கூட! 

ஆயிரம் ஆண்டுகாலமாக அரசாளுபவர்கள் தம்மை இயற்கைக்கும், கடவுளுக்கும் நிகராகக் கற்பனை செய்துகொண்டு தமது பெயர் நிலைக்க ஏதாவது குழப்ப வேலைப்பார்த்து வைப்பது வழக்கம்! அந்த அரசனைக் கடவுளாக மதிப்பவர்கள், தம்மை அந்த வழி வந்தவர்களாக எண்ணிக்கொள்பவர்கள் அந்த ஆண்டுக்கணக்கினை எடுத்துக்கொள்வார்கள்! அதில் தவறு ஒன்றுமில்லை! 

இன்றைய நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுபவர்களும் அப்படி முற்காலத்தில் அரசன் வகுத்த வழிமேல் பக்தி கொண்டு கொண்டாடுபவர்களை போல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டு என்று கூறிய அரசனைத் தொழும் வழி வந்தவர்கள்தான்! 

நீங்கள் இந்த நாளைப் புத்தாண்டு என்று கொண்டாடினாலோ, நான் சித்திரையைப் புத்தாண்டு என்று கூறினாலோ பூமியும், சூரியனும் மாறிச்சுற்றப் போவதில்லை! 

இப்படிக் கொண்டாட்டம் என்று சொல்லி பூமியை மாசுபடுத்திக்கொண்டு, சந்தோஷம் என்று சொல்லி குடித்துக் கும்மாளம் அடிக்கும் கூட்டம்தான் அனேகர்! 

நீங்கள் உங்கள் அரசன் வழியைப் பின்பற்றுகிறீர்கள், நான் என் முன்னோர்கள் வழியைப் பின்பற்றுகிறேன் என்று பதில் கூறினேன்! 

ஒவ்வொரு காலத்திலும் ஒன்றை ஒன்று வென்று தனது அதிகாரத்தை நிறுவும் அதிகாரத்தின் விளையாட்டுக்களில் நேரத்தை வீணாக்குவதை விடுத்து கொண்டாட்டங்களின் நோக்கம், 

மகிழ்ச்சி!

சந்தோஷம்!

ஒற்றுமை!

இவற்றிற்காக அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோமா!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...