குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 29, 2019

தலைப்பு இல்லை

இலங்கையில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளது. 
முடிவுகளின் படி தமிழ் மாவட்டங்கள் எனக் கூறப்படும் வட கிழக்கு மாகாணங்கள் பின்னடைவைச் சந்தித்து விட்டதாக புள்ளி விபரங்கள் பதியப்பட்டு வருகிறது. 
வழமையான "தமிழர் மன நிலையான" தமது பிரச்சனைக்கெல்லாம் காரணமான, தமது இனத்தையே அழிக்க வந்த அரக்கர்களின் சூழ்ச்சி போன்ற பூதாகரச் சிந்தனைகளை பேஸ்புக் புரட்சியாளர்கள் பதிய ஆரம்பித்து விட்டார்கள். 
தமிழர்களின் பொதுப் புத்தியான தமது வீழ்ச்சிக்கெல்லாம் காரணம் வெளியிலுள்ள எதிரிகள் என்ற மூடத்தனம் எப்போது விலக ஆரம்பிக்கிறதோ அன்று தான் சமூகம் முன்னேற ஆரம்பிக்கும். 
இது தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்குமுள்ள ஒரு ஒற்றுமை! இலங்கையில் தமிழரின் துன்பத்திற்கெல்லாம் காரணம் சிங்களவர், தமிழ் நாட்டில் தமிழரின் துன்பத்திற்கெல்லாம் காரணம் வட நாட்டுக்காரன்! 
வெகுவிரைவில் கனடாவிலும், ஐரோப்பாவிலும் வெள்ளைக்காரன் புலம்பெயர் தமிழர்களின் துன்பத்திற்கு காரணமாக இருப்பான் என்று நம்புவோம். 
வெளிநாட்டுப் பணத்தைக் கொட்டி, படிப்பு உழைப்பு என்பவற்றின் நோக்கம் என்னவென்று தெரியாத, சுகபோக, இலட்சியமற்ற சமூகத்தை செவ்வனே உருவாக்கிக் கொண்டு தமது வீழ்ச்சிக்கு எவனோ செய்யும் சூழ்ச்சி என்று கூக்குரல் போடாமல் மாணவர்கள் படிப்பில் அக்கறை இல்லாமல் போவதற்கு என்ன சமூக காரணம் என்று கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பது அவசியம்! 
நாம் வலிமையாக இருந்தால் நோய் வராது என்பது இயற்கையின் விதி! சமூகம் நோய் பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் சமூகத்தின் மன நிலையில், பண்பில் ஆரோக்கியம் இல்லை என்பது தான்! 
பொதுவாக பிச்சைக்கார மனநிலை என்ற உளவியல் நிலை உண்டு. வீதிகளில் தமது காயங்களை காட்டி பிச்சை எடுப்பவர்களை கூட்டிச் சென்று குணப்படுத்தி எல்லா வசதிகளும் செய்து கொடுத்தாலும் தமக்கு மீண்டும் புண்களை உண்டாக்கிக் கொண்டு பழைய பல்லவியை பாடி பிச்சை எடுப்பதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். 
இதைப் போல் பழைய பல்லவி பாடி சிங்களவன் சூழ்ச்சி, தமிழனின் வீழ்ச்சி என்று புலம்புவதை விடுத்து சமூகம் முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...