குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 26, 2019

சாதனை ஏன் தடைபட்டுப் போகிறது?

சில அன்பர்கள் சாதனையை தொடர முடியவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள். இந்தக்காரணத்தால் எம்முடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதாகவும் அறிந்தோம். இது பற்றி சில தெளிவுகளைப் பகிரலாம் என்று எண்ணுகிறோம்.
எமக்கு இருக்க வேண்டிய முதலாவது தெளிவு, நாம் ஏன் சாதனை செய்ய விரும்புகிறோம் என்பது, இந்த தெளிவு இல்லாமல் ஏதோ ஒரு மன உந்தலில் தொடங்கிவிட்டு குழப்பமடையக்கூடாது.
இரண்டாவது சாதனையில் குரு வாக்கியப்பிரமாணத்தை தவிர வேறு அதிகமாக நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை மனதில் ஆராய்ந்து குழப்பிக்கொள்ளக் கூடாது. எப்படி உபதேசம் பெறப்பட்டதோ அதை சிறுக சிறுக நிதானமாக பயிற்சித்து தமது சொந்த அனுபவத்தினை ஆராய்ந்து தம்மில் உறுதியை வளர்த்துக்கொண்டு சாதனையில் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும்.
மூன்றாவது சாதனையில் பெறும் உபதேசம் மனித உருவில் உள்ள குருவிடமிருந்து பெற்றாலும் அது மகாகுருவின் மகா காரண சரீரத்திலிருந்து பெறப்படும் உபதேசம் என்ற நம்பிக்கை,
நான்காவது இந்த நம்பிக்கையை அறியாமையால் மனித உடலில் உபதேசம் தரும் குருவை இவர் வெறும் கருவி, நான் நேராக அகத்தியரிடமே உபதேசம் வாங்கிக்கொள்கிறோம் என்ற அறியாமை இறுமாப்பும் தவறானது, இப்படியான அறியாமை மனக்குழப்பங்களை எம்மில் ஏற்படுத்தினால் ஆழ்மனமாகிய சித்தம் நம்பிக்கையிழந்து விடும். ஆகவே உபதேசம் பெறும் குருவின் மீதான அன்பு, சரியான மனப்பண்பு என்பவையும் முக்கியமானவை. குருவிற்கு தரும் மரியாதை என்பது குருவிற்குரியது அல்ல, எமக்கு சாதனைக்குரிய மனப்பண்பை உருவாக்கிக் கொள்ளும் ஒரு பயிற்சி சென்ற உண்மையினை அறிய வேண்டும்.
ஐந்தாவது வாழ்க்கையில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தாம் செய்த வினையின் விளைவு என்ற சுய பொறுப்புணர்வு இல்லாததும், தாம் செய்யும் சாதனை, வழிபடும் தெய்வத்தின் கோபம் போன்றவை போன்ற அறியாமை சிந்தனைகள்.
ஆறாவது, சாதனை என்பது சுய சுத்தி, சுய முன்னேற்றம் என்பதைப் புரியாமல் ஏதோ ஒரு அதீத சக்தியை, சித்தியைப் பெறும் முயற்சி என்ற பேராசை. சாதனை மூலம் எம்மை தூய்மையாக்கிக் கொள்ள நாம் உயர்ந்த தெய்வ சக்தியைப் பெறத்தகுதி உள்ளவர்களாக மாறுகிறோம். ஆகவே எம்மை சுத்தி செய்து கொள்வது மட்டுமே எமது முயற்சி அதன் தகுதிக்கு ஏற்ப எம்மில் தெய்வ சக்தி விழிப்படையும் என்ற உண்மையை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
ஏழாவது சாதனையை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் தமது இயலாமையை குருவிடம் வெளிப்படுத்தி உதவி பெறும் திறந்த மனப்பான்மை இல்லாமல் தம்மில் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி சாதனையை விட்டு விலக்கிச் செல்லல்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சரியான மனப்பண்புடன் குருவுடன் பழகும் போதும், குருமண்டலத்தின் பணிகளை எமது முதற்பணியாக கொண்டு செயலாற்றும் மனப்பண்பு உள்ளவர்களுக்கு மட்டுமே மிக உயர்ந்த சாதனைகளை கற்கும், அறியும் வாய்ப்புக்களைப் கிடைக்கும் என்ற நுண்மையான அறிவு எப்போதும் இருக்க வேண்டும்.
குருபணி என்பது குருவின் ஆற்றலை நாம் பெறுவதற்கான ஒரு வழி என்பதை அறியாமல் தாம் ஏதோ குருவிற்கு உதவுவதாக எண்ணும் மனப்பாங்கு சாதனையில் உயர்வதற்கு தடையாக அமையும்.
விரக்தி, செயலாற்ற சோம்பல் ஆகியவற்றை துறவு, பற்றின்மை என எண்ணும் அறியாமையில் இருந்து வெளிவர வேண்டும்.
சாதனை தடைபட்டால் எமது கர்ம பிரபாவத்தினாலும், நாம் வாழும் சூழலினாலும் தடைபடுகிறது, இதனை நான் குருவருளுடன் மீண்டும் தொடர்வேன் என்ற சங்கல்பசக்தியால் உடனடியாக தொடங்கி பயிற்சிக்கவேண்டும். நல்ல நாள் பார்த்து சாதனை தொடங்குவதற்கு காத்திருக்கக்கூடாது.
இவை சாதனைக்குரிய சில அடிப்படை மனப்பண்புகள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...