குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 26, 2019

அகத்தியரும் குடும்ப வாழ்க்கையும்


********************************
குரு நாதர் உரைத்தபடி....
அகத்தியர் என்ற உணர்வு நஞ்சினை வெல்லும் தீமையை வென்று ஒளி நிலையடைய வழிகாட்டும் பேருணர்வு எப்படி செயற்படுகிறது என்ற விளக்கமே லோபாமுத்திரை சமேத அகத்திய மாமகரிஷியாக புராணங்களில் உரைக்கப்பட்டது.
உலகிற்கு, உயிற்கு மங்களம் உண்டாக்கும் ஸ்ரீ வித்யாவினை முதலில் பூவுலக மானிடருக்கு அறியக்கூடிய வகையில் ஈர்த்தவர் அகத்தியர்! பிரம்மாண்டத்தின் ஒழுங்கினை வளத்தினை இயக்கும் உயர் உணர்வை (supra consciousnesses) இனை தனது குருவான ஹயக்ரீவரிடமிருந்து மானிடர்கள் அனைவரும் அறியும் அதிர்வு நிலைக்கு (frequency) இற்கு கொண்டுவந்தவர் அகத்தியர் பெருமான்!
இதை வேறு வகையில் சொல்வதானால் தகுதியுடைய ஒரு உயிரான்மா பூவுலகில் உயர் உணர்வை ஈர்க்க இருப்பதால் அந்த உயர் உணர்வு பூமியில் இறங்கியது. அப்படி பூமியின் உயர் உணர்வை இயக்கத்திற்கு கொண்டுவந்தவர் அகத்தியர்! இதனாலேயே பூமியை சமப்படுத்த தென்னாடு அனுப்பப்பட்டார் என்ற புராணக்கதை கூறப்பட்டது.
பூவுலகம் நச்சு எண்ணங்களால் நிறைய நிறைய அதன் பாரம் அதிகமாகி சம நிலை குழம்ப, அதை சமப்படுத்த சிவனாரால் தென்னாடு அனுப்பப் பட்டவர் அகத்தியர்!
அகத்தியரின் வேலை உலகிற்கு நன்மை செய்யவேண்டும், மனித குலம் மேம்பட வேண்டும் என்று எங்கெல்லாம் பக்குவம் உள்ள ஆன்மா எண்ணுகிறதோ அங்கெல்லாம் தனது தவத்தின் பலத்தை வித்தாக கொடுத்து மரமாக வளர்ப்பது!
தன்னை பிரபஞ்ச பேருணர்வான ஸ்ரீ லலிதையின் வடிவாகி ஸ்ரீ லலிதையை அகஸ்தியமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்து, தன்னுடன் ஈருடல் ஓரூயிராய் ஒன்றிய தனது மனைவி லோபாமுத்திரையையும் தான் பெற்ற தவசக்தியை ஊட்டி அவரையும் அந்த பேருணர்வு பெறவைத்து லோபாமுத்திரமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்த்தினார்!
எவருக்கு இல்லறத்திலுள்ள நச்சான தீய எண்ணங்களை அகற்றி மகிழ்வான ஒளி மிகுந்த வாழ்க்கை வேண்டுமோ அவர்கள் அன்னை லோபாமுத்திரா ஸஹித ஸ்ரீ அகஸ்திய மாமகரிஷியை எண்ண அந்த உணர்வுகள் அவர்களுக்குள் விளைந்து அவர்கள் வாழ்வை ஒளியாக்கும்!
அகஸ்தியகுலபதி
15/03/2019

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...