குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, March 30, 2019

கிளிநொச்சிப் புழுவும் வடமாகாண ஆளுனரும்

முன் கதைச் சுருக்கம்: கிளிநொச்சி உணவகத்தினால் ஆளுனரின் குழுவிற்கு வழங்கப்பட்ட சாப்பாட்டில் புழு இருந்தது என்பதற்கான ஆளுனரின் நடவடிக்கை தொடர்பான கருத்து. 

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்

இது வள்ளுவர் வாக்கு, ஒரு அரசன் தனது குடிகள் செய்யும் தவறினை, அவர்கள் திருந்தி சரியாக வழியில் வருவதற்கு மாத்திரமே தனது அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும், அப்படியில்லாமல் அதீத உணர்ச்சிவசப்பட்டு கடுமொழியாலும், தனது தண்டத்தாலும் - தற்காலத்தில் நீதிமன்றத்தின் அதிகாரம் என்று கொள்ளலாம், தண்டிக்க முயன்றால் அது அவன் தனது அதிகாரத்தை தேய்க்கும் அரமாகிவிடும். அரம் என்பது இரும்பை தேய்க்க பயன்படும் கருவி. 

இதைத் தான் இன்று கிளிநொச்சி உணவகப் பிரச்சனையில் வடமாகண ஆளுனர் செய்துகொண்டிருக்கிறார். 

ஆளுனரின் கோபம் நியானமானது, உணவை சுகாதாரமாக கொடுப்பது வியாபார நிலையத்தின் கடமை! அதனை நெறிப்படுத்த தனது அதிகாரத்தின் எந்த அஸ்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் பிழை விட்டுள்ளார். 

அதிகார நெறிமுறையில் (protocol) ஒரு சுகாதார பரிசோதகரின் அதிகாரத்திற்கு ஒரு ஆளுனர் இறங்கி வந்து குடிமகனுடன் பிரச்சனைப்படுவதும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது சொந்த முயற்சியால் முன்னேறிய ஒருவர் தனது தவறை ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்வதாக கூற தனது அதிகாரத்தை வரம்பிற்கு மீறி பிரயோகித்தல் அவரது மக்கள் செல்வாக்கினை குறைக்கும். 

இப்படி ஒரு பிரச்சனை இனிமேல் நடக்கக் கூடாது என்றால் அது தொடர்பான சுகாதார பரிசோதகருக்கும் குறித்த திணைக்களத்திற்குமே தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி குடிமக்களிடம் நேரடியாக இல்லை! 

குடியினருக்கும் அன்பானவனாகவும், நெறிமுறையை பேணுபவரிற்கு (சுகாதார பரிசோதகருக்கு) கடுமையானவராக இருக்கும் ஆட்சியாளரே சரியான ஆளுனராக இருப்பார்! 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! அதிகாரமும் தான்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...