குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 01, 2018

மஹாலஷ்மி தத்துவம்: மஹாலஷ்மி அஷ்டகம் - 03

Image result for Mahalakshmi Sadhana
சர்வஜ்ஞே சர்வவரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
சர்வஜ்ஞே : அனைத்தையும் அறிந்தவள் 
மஹாலக்ஷ்மியை அனைத்து செல்வத்தையும் கொடுப்பவள் என்றும் அனைத்து செல்வங்களுக்கு அதிபதி என்று சொல்கிறோம். இப்படி எல்லாவற்றிற்கும் அதிபதியாகவும் எல்லா செல்வங்களையும் தர வேண்டும் என்றால் அவள் அந்த செல்வங்களைப்பற்றியும், அதன் பண்புகள் பற்றியும், தன்மை பற்றியும் முழுமையாக அறிந்தவளாக அல்லவா இருக்க வேண்டும். ஆகவே மகாலஷ்மியின் சர்வஜ்ஞே என்ற அமிசத்தை தியானிப்பதன் மூலம் ஒருவன் செல்வங்களை அடைவது என்ற வழிமுறைகளை தந்து மனதில் விழிப்படையச் செய்கிறான். மஹாலக்ஷ்மியை சர்வஜ்ஞேயாக தியானிப்பதால் அனைத்து செல்வங்களையும் அடையக்கூடிய அறிவினை, ஆற்றலை, நுட்பத்தினை, தெளிவினை சாதகன் பெறுகிறான், 


ஸர்வ வரதே : எல்லா வரங்களையும் கொடுப்பவள் 
ஒருவன் தன்னிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். பணம் மட்டும் உள்ளவன் பணத்தை மாத்திரமே கொடுக்க முடியும். கல்வியை தரமுடியாது. இதுபோல் ஒவ்வொன்றை பெறவும் ஒவ்வொரு தெய்வ சக்தியை நம்மில் ஈர்க்க வேண்டும். ஆனால் எல்லா வரங்களையும் கொடுக்கு வண்ணம் எல்ல செல்வங்களுக்கும் அதிபதியாக இருக்கும் மஹாலக்ஷ்மியால் இது முடியும். ஆக மகாலக்ஷ்மியை ஸர்வ வரதே என தியானிப்பவன் அனைத்து செல்வங்களையும் பெறக்கூடிய ஆற்றலைப் பெறுவான். இந்த வல்லமை உடைய தெய்வ சக்தியே மஹாலக்ஷ்மி! 



ஸர்வ துஷ்ட பயங்கரி: எல்லாத் தீமைகளையும் பயமுறுத்தி தண்டிப்பவள் 

தீமைகள் அண்டுபவன் லக்ஷ்மித்துவம் பெறமுடியாது. இதன் மறுதலையாக லக்ஷ்மித்துவம் பெற்றவனை தீமைகள் அண்ட முடியாது. லக்ஷ்மித்துவம் என்பது இன்பத்தினை பெறுவற்குரிய சரியான வழி. பலர் இன்பத்தினை அடைய லக்ஷ்மித்துவத்தினை பெறாமல் அசுரத்தனத்தின் மூலம் பெற முயல்கிறார்கள். இன்றைய நிலை அதுவே. இப்படி அசுரத்தனத்தின் மூலம் பெறப்படும் இன்பம் மூலம் ஒருவன் தனது பரிணாமத்தை முன்னேற்றி பரிபூரணம் பெறமுடியாது. இதனால் மீண்டும் மீண்டும் மாயையின் பிடியில் சிக்கி காலம் வீணாகி தீமைகளும் துன்பமும் இன்பமும் கலந்து ஆன்ம முன்னேற்றம் பெற முடியாமல் போய் விடும். 

இப்படி இல்லாம மகாலக்ஷ்மியின் அருளை தன்னில் விழிப்படையச் செய்து தீமைகள் அண்டாமல், இன்பமான வாழ்க்கை பெற்று அதன் திருப்தியால் ஆன்ம முன்னேற்றம் அடையும் வழியே மகாலக்ஷ்மியின் அருள் தருகிறது. இதனால் சாதகனுக்கு வரக்கூடிய எல்லா துஷ்டங்களும் விலகுகிறது. 

சர்வ துக்க ஹரே : எல்லா துக்கங்களையும் போக்குபவள் 

இன்பம் கிடைக்கவேண்டும் என்றால் துன்பம் போக்கப்பட வேண்டும் என்பதுதானே தர்க்க ரீதியாக சரியான விஷயம். எல்லா இன்பங்களும் மகாலக்ஷ்மியால் கிடைக்கும் என்றால் அவை கிடைப்பதற்கு எல்லா துன்பங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே சரியான ஒழுங்கு அல்லவா. 

ஆகவே மகாலஷ்மியை உபாசிப்பவனது எல்லா துக்கங்களும் போக்கபடும். 

இந்த ஸ்லோகத்தில் சாதகர்களுக்கான அறிவுரை 

1. இந்த ஸ்லோகம் மகாலஷ்மியை உபாசிப்பவர்களுக்கு மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கும் வழிகளை அவள் செயல்படும் தன்மைகளை கூறுகிறது. 

2. மஹாலக்ஷ்மியின் அருள் ஒருவனுக்கு செல்வத்தை சரியான வழியில் பெறுவதற்குரிய வழிகள் எல்லாவற்றையும் அறியத்தரும். 

3. ஒருவன் மஹாலக்ஷ்மியின் ஆற்றல் எல்லா வரங்களையும் தந்து எல்லா துன்பங்களையும் போக்க கூடியது. 

4. மகாலக்ஷ்மியை உபாசிக்கும் சாதகன் தனது துக்கங்கள் நீங்கி எல்லா ஸௌபாக்கியங்களும் பெறுவான்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...