குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 10, 2018

ஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் - 01

Image result for Lalitha devi

ஸோமானந்தன் அகத்தியர் மகரிஷியின் சீடர்களில் ஒருவன். தனது குருகுல வாசத்தை முடித்த பின்னர் குருநாதரால் அன்னை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியிடம் நேரடியாக யோக  உண்மைகளை கற்க அனுப்பி வைக்கப்பட்டான். 

அகத்திய மகரிஷி ஸ்ரீ லலிதையை சந்திக்கச்செல்லும் முறையை உபதேசித்தார். 

ஸோமா, நீ உனது மூச்சையும், உடலையும், மனத்தையும் இணைக்கு பயிற்சியில் நன்கு சித்தி பெற்றுள்ளாய், உனது மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் சுத்தி செய்துள்ளாய், உனது மூச்சு நிலைப் பட்டு ஊர்த்துவமுகமா செல்ல ஆரம்பிப்பதால் இனி நீ அன்னையைச் சென்று அவளிடமே நேரில் கற்க ஆசிகள்! எப்படி செல்லவேண்டும் என்பதை கூறுகிறேன் கேள்!

உனது காயத்ரி சாதனையால் உனது உடல்,  மனம் போன்ற எல்லா அணுக்களிலும் புத்தியை தூண்டும் அந்தப்பேரொளி நிறையத்தொடங்கியுள்ளது, இந்த புத்தியை தூண்டும் பேரொளிதான் அன்னையை சென்றடையும் வழி! அந்த ஒளியை அகக்கண்களில் மிக ஊன்றி கவனித்து மனத்தை செலுத்து! இப்படி உணர்வு மனதிலிருந்து விடுபடும் போது அந்த ஒளியினூடாக அன்னையின் ஸ்ரீ நகரத்தை அடைவாய்! உடலுக்குள் அடங்கிய இந்த சிறிய மனதிலிருந்து பிரபஞ்ச பேருணர்வான ஆகாய மனம் அல்லது பிரபஞ்ச மனத்தினூடாக நீ இந்த அனுபவத்தை மீளப்பெறலாம். 

வீணாக உனது சித்த சலனத்தை அதிகரித்து கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணாக்காமல் உனக்குள் உள்ள அந்த அம்பிகையின் ஒளியை வைகறை நேரத்தில் கவனிக்கத்தொடங்கு என்று ஆணையிட்டு அகத்திய மகரிஷி மறைந்தார். 

ஸோமன் தனது சுவாசத்தை கவனித்துக்கொண்டு உணர்வை புருவ மத்தியில் ஒடுக்கி தன்னுள் தெரியும் ஸவிதாவின் பேரோளிய கவனிக்கத்தொடங்கினான். சற்று நேரத்தில் மழை இருட்டுப்போன்ற கருமேகங்கள் கவியத்தொடங்கியது.  அதன் பின்னர் ஸோமன் அதி மின்னல் வேகத்தில் மேகங்களை கிழித்துக்கொண்டு தான் செல்லுவதை உணர்ந்தான். தான் செல்லுகிறோம் என்பதை தவிர தான் என்று நினைத்த உடலைக்காணவில்லை! வேகம் அதிகரிக்க அதிகரிக்க கருமேகக்கூட்டம் சிதறியது. எவ்வளவு நேரம் சென்றோம் என்று தெரியாமல் வேகமாக பயணிக்க சிறிது நேரத்தில் கருமேகம் மறைந்து வெண்மேகம் தோன்ற ஆரம்பித்தது. இந்த வெண்மேகத்தை கடக்க வானவில்லின் நிறங்கள் தோன்ற ஆரம்பித்தது.  இதைக்கடக்க தங்க நிற ஒளி நிறைந்த பிரதேசத்திற்குள் புகுந்தான் ஸோமன். 

அங்கிருந்த ஒளி மெதுவாக ஒடுங்கி அழகிய பெண் ஒருத்தியாக மாறியது. அந்தப்பெண்ணின் அழகினை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இருக்க வில்லை.  அதுவரை தனது உடலை காணவோ உண்ரவோ முடியாத ஸோமன் இப்போது தனது உடலைக் காணத்தொடங்கினான். தனது வழமையான கருத்த சரீரம் இப்போது அந்தப்பெண்ணின் உடலைப் போன்று பொன்னிறமாக மாறியிருந்ததைக் கண்டான். 

அவளது ஆற்றலுக்கு முன்னர் இயல்பாகவே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் ஸோமன். 

வணங்கிக் கொண்டு இருக்கும் போதே இனிய குரலில் "ஏழுந்திரு ஸோமா" என்ற குரல் ஒலி அவனை சுதாரிக்கச் செய்தது. 

ஸோமா, உன் குருநாதர் அகத்தியர் உன்னை எமது ஆணைப்படி இங்கு அனுப்பி வைத்தார், என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ கேள் என்றாள், அந்தப்பெண். 

தேவி, கேட்பதற்கு என்றும் ஒன்றுமில்லை, நீங்கள் விரும்புவதை தாருங்கள் என்றான்! 

பூவுலகில் இருந்து உனது சாதனையின் பக்குவத்தினாலும், குருவின் ஆசியாலும் எனது இந்த ஸ்ரீ நகரத்திற்கு வந்திருக்கிறாய், இப்போதைக்கு ஒளிமயமாக தோன்றும் இந்த உலகத்தில் பலகோடி தெய்வ சக்திகள் மிக சூக்ஷ்மமாக வசிக்கின்றன. அவற்றை பார்த்து உணரும் பக்கும் படிப்படியாகப் பெறுவாய். அதுவரை என்னை இந்த ஒளி ரூபத்திலும் இந்த ரூபத்திலும் பார்த்துக்கொள்ளலாம், உனக்கு இந்த ரூபம் பிடிக்கவில்லை என்றால் சொல், உனக்கு விரும்பிய வடிவத்தை நான் எடுத்துக்கொள்கிறேன்!

தேவி இந்த அழகிய ரூபத்தைப் பார்க்க எவருக்கு பிடிக்காமலிருக்கும்! இப்போதைக்கு இந்த ரூபத்திலேயே உங்களை காணவிரும்புகிறேன் என்றான் ஸோமன். 

நல்லது, பூவுலகில் பலர் யோகம் செய்கிறேன் என்று எல்லாவற்றையும் வெறுத்து, ஒதுக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னை விட்டு ஓடுவதால் தாங்கள் முக்தி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடித்து கிடைத்த மானிட ஜென்மத்தை வீணாக்கிக் கொண்டுள்ளார்கள் என்றால் தேவி! 

அதற்கு ஸோமனும் ஆம் தேவி, பலர் காமத்திற்கு பயந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறார்கள், காமத்திற்கு காரணம் பெண் என்று நினைக்கிறார்கள், தமது ஆன்மீக முன்னேற்றம் தடைப்படும் என்று பயப்படுகிறார்கள் என்றான். 

அதற்கு தேவி தனது செக்க சிவந்த உதட்டிலிருந்து புன்னகையை உதிர்த்து விட்டு, 

ஸோமா, இப்படி முன்னொரு காலத்தில் சிவனாரும் யோகத்தில் அமர்ந்தார். என்னை விட்டு நீங்கி உக்கிர தபஸில் அமர்ந்தார், இதனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கம், பரிணாமம் தடைபடத்தொடங்கியது. இதை அறிந்த தேவர்கள் சிவனாரிடம் முறையிட்டு சிவனார் மனதில் இச்சையை உண்டாக்க காமனை அனுப்பினார்கள். காமனுக்கோ தனது அம்பிற்கு வசப்படாதவர்கள் எவருமில்லை என்ற ஆங்காரம். சிவனார் மேல் தனது அம்பை பாய்ச்ச, சிவனார் கோபம் கொண்டு பொசுக்க, காமனின் உடல் பொசுங்கியது. எனினும் காமனோ காதி வித்தையால் என்னை உபாசித்தவன். சிவனார் கோபத்தினால் தனது ஸ்தூல உடலை இழந்தானேவொழிய எனது ஆசியால் சூக்ஷ்ம காரண சரீரத்த்திற் புகுந்தான்.  அதுவரை காமனாக இருந்தவன் அனங்கன் ஆகினான். 

ஸோமா, அனங்கன் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா உனக்கு? என்றால் தனது இனிய குரலில், 

அதற்கு ஸோமன், ஆம் தேவி உடல் அற்றவன் என்று பொருள் என்றான். 

ஆம், ஸ்தூல உடல் இல்லாமல் மனத்தினூடாக மற்றவர்களை கலங்கச் செய்யும் ஆற்றலைப் பெற்றான், பலர் சிவனார் காமனை கோபத்தோடு எரித்து விட்டதாகத்தான் பூவுலகில் கதை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்தூலமாக காமத்தை செயற்படுத்திய காமன் சிவனரின் யோக அக்னியால் அனங்கனாக தெய்வ உருமாற்றம் பெற்றான் என்பதே உண்மை! 

இதைக்கேட்ட ஸோமன், தேவி, இந்த விளக்கம் புதுமையாக இருக்கிறதே என்று தனது ஆர்வத்தை வெளிப்படுத்த அதற்கு தேவி,

பொறு, இன்னும் இருக்கிறது, பூவுலகில் இந்த கதையை படித்திருப்பாய் அல்லவா? எரிந்த காமனின் சாம்பலுக்கு என்னவாயிற்று என்று உனக்கு தெரியுமா? என்றாள். 

ஆம் தேவி, பண்டாசூரனாக உருப்பெற்றது என்றான் ஸோமன். 

காமனின் சாம்பலில் இருந்து உருப்பெற்ற பண்டாசூரன் தாமஸ குணத்துடன் தேவர்களை துன்புறுத்த தொடங்கினான் என்று முடித்தாள் தேவி! 

ஸோமா, இந்தக் கதைகள் எல்லாம் எங்கு நடைபெற்றது என்று தெரியுமா உனக்கு என்றாள்! 

பூவுலகில் எங்காவது இருக்கலாம், பல கோயில்கள் சேத்திரங்களில் அந்த இடங்களில் நடைபெற்றதாக தல வரலாறுகள் கூறுகின்றன என்றான் ஸோமன். 

தேவி புன் சிரிப்புடன், அவற்றுள் சிலது உண்மை, சிலது உண்மைகளை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறியீட்டு விளக்கமாக கூறப்பட்டவை! 

ஸோமா, என்னை அறிவதற்கு மிகச்சிறந்த இடம் எது என்று உனது குருநாதர் உபதேசித்தார்? 

அதற்கு "எனது மனித உடல்" என்றான் ஸோமன். 

அப்படி இருக்கையில் எப்படி இந்தக்கதைகள் எல்லாம் எங்கோ நடந்ததாக கற்பனை செய்ய வேண்டும், உனக்குள் இந்தக் கதைகள் எங்கே நடக்கிறது என்று கண்டுபிடி என்றாள் அம்பிகை!

சரி தேவி, காமனை எரித்த கதையை மட்டும் விளக்கம் பெற விரும்புகிறேன் என்றான் ஸோமன்

அப்படியே ஆகட்டும் என்றாள் தேவி!

யோகத்தில் அமர்ந்து மனதை ஒடுக்க எனது மாயா சக்தியிலிருந்து மனம் விலக ஆரம்பிக்கிறது, மனதின் இயக்கத்திற்கு காரணமான சக்தியை வழங்குவதே மாயாசக்தி தான், பலர் மனதையும், மூச்சையும் ஒடுக்கி அடக்கும் போது தூய்மையற்ற அறிவால் மாயைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறியாமையில் கற்பித்து வெறுப்பு, பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றார்கள். 

இதுதான் சிவனாருக்கும் முதலில் யோக நிஷ்டையில் அமரும் போது ஏற்பட்ட நிலை! இப்படி மாயையிலிருந்து ஒதுங்கியவுடன் மனச்சலனம் ஒடுங்குவதால் வரும் இன்பத்தில் மனம் பற்றுக்கோண்டு அதுதான் இறுதி இன்பம் என்று தான் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து யோகத்தில் ஆழ்ந்து விட்டார். இப்படி ஆழ்ந்த சிவனாரை காமனும் தான் வழமையாக மனிதர்களை எப்படி ஸ்தூல அழகினை காட்டி மயங்கச் செய்வானோ அதுபோல் சிவனாரிற்கு காமத்தை ஏற்படுத்த முனைந்தான். ஆனால் யோகாக்னி கொண்ட சிவனாரினால் அவனது ஸ்தூலத்தன்மை மறைந்து அனங்கன் ஆகும் பெரும் பேறு பெற்றான். 

இப்படி யோகாக்னி கொண்டு ஸ்தூல காமனை அழிந்தாலும் அந்த ஸ்தூல காமனின் பஸ்பமக்கப்பட்ட தாமஸ குணம் பண்டாசுரனாக வெளிப்பட்டு துன்புறுத்தும். பூவுலகில் இன்றும் யோகம் செய்து பண்டாசுரனாகியவர்கள் பலர். அவர்கள் தமது யோக சக்தியால் ஸ்தூல காமனை அழித்து விட்டு பண்டாசூரனாகி விடுவார்கள். ஆற்றல் உள்ளவரகளாக இருப்பார்கள். ஆனால் என்னிடம் சரணாகதி இருக்காது. 

ஸ்தூல உடலை இழந்த காமன் என்னிடம் இருந்த சரணாகதியால் மகாகாரண சரீரம் பெற்று அனங்கன் ஆகினான். 

யோகம் செய்கிறோம் என்று மனதில் வெறுப்பு, பயம், சலிப்பு போன்ற குணங்களை வளர்த்தால் முதல் நிலையில் யோகானியால் அழிக்க அதிலிருந்து பண்டாசூரனே வெளிப்படுவான்! 

ஆனால் காமனைபோல் என்னிடம் சரணாகதி இருந்தால் அனங்கன் ஆகலாம். 

காமன் யோகத்தின் எதிரி இல்லையா தேவி! என்றான் ஸோமன்

அவள் தனது மந்தகாசப் புன்னகையுடன் "ஸோமா, எப்படி எதிரியாக முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டாள். 

யோகத்தில் முன்னேற விடாமல் காமத்தில் ஆழ்த்தும் காமன் யோகத்தின் எதிரிதானே என்றான் ஸோமன். 

அதற்கு தேவி 'இல்லை ஸோமா, காமன் உலகின் பரிணாமத்தை சரியாக நடத்துவதில் எனக்கு பெரும் துணை புரிகிறான், தாமஸ குணம் நிறைந்தவர்களே காமனை எதிரியாக எண்ணுகிறார்கள், இங்கு நீ புரிந்து கொள்ள வேண்டியது உனக்கு எதிரி வெளியே இருக்க முடியாது என்பதே, உனது மனம் தமோ, ரஜோ, சத்துவ நிலைகளுக்கு ஏற்ப தனது எதிரிகளை  முறையே தனக்கு வெளியே, உள்ளே, எங்கேயும் எதிரி அற்ற நிலையை காண்கிறது. 

ஆக காமன் அல்ல எதிரி, உனது மனது தாமஸமா, ராஜஸமா, சத்துவமா என்பதே எதிரி எங்குள்ளான் என்பதை தீர்மானிக்கிறது. 

அப்படியானால் காமத்தை வெல்லாமல் யோகத்தில் சித்தி பெறமுடியுமா என்றான் ஸோமன். 

இங்கு வெல்வதுமில்லை, தோற்பதுமில்லை! எனது மாய விளையாட்டுக்களை புரிந்தவன் மட்டும் அதைக்கடக்கிறான், எதிர்ப்பவனும் வெல்வதுமில்லை, பயந்தவனும் வெல்வதில்லை! எவன் புரிந்து சரணாகதியை அடைகிறானோ அவனே கடக்கிறான்! தெய்வ உருமாற்றம் பெறுகிறான்!  பலர் அற்ப மானுடன மனது கொண்டு மாயையை வெல்வதற்கு முயற்சிக்கிறாரகள், அற்ப சிற்றறிவு அதைப் புரிந்து கொள்ள முடியாது! புத்தியை தெளிவிக்க எனது ஸவிதாவின் ஒளியை உனது ஒவ்வொரு அணுவிலும் பரவவிட்டு உன்னை தெய்வ உருமாற்றம் செய்த பின்னரே உனக்கு இந்த உண்மைகள் எல்லாம் அனுபவமாக தெரியவரும். 

ஸோமா, நான் அகஸ்தியமயி! ஆகவே நான் வேறு உன்னை வழிகாட்டும் அகஸ்தியன் வேறல்ல! இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் நானே! இந்த உண்மையை வெகுவிரைவில் அனுபவமாக உணர்வாய்! 

இன்று இது போதும், உன்னை தேவையான நேரங்களில் நான் இந்த தங்கமயமான ஸ்ரீ புரத்திற்கு வரவழைப்பேன்! அதற்குரிய வழியை உனக்கு அகஸ்தியன் உரைத்திருக்கிறான்! நீ பூவுலகு திரும்பிய பின்னர் நான் உபதேசித்ததில் உலகத்தவர்களுக்கு தேவையானது மட்டும் உனது எழுத்தாற்றலில் வெளிவரும், மற்றவற்றை உனது சாதனைக்கு பயன்படுத்து! இப்போது நீ சென்று வரலாம்" என்றால் தேவி.

இப்படிக்கூறி முடிய அவளது பொன்னிற சரீரம் கரைந்து பொன்னிற ஒளிப்பிரவாகமாக ஸோமனும் தனது உடல் கரைவதை அவதானித்தான். தான் வந்த வேகத்தில் மீண்டும் வானவில் நிற மேகங்கள், வெண்மேகங்கள், கருமேகங்கள் கடந்து நொடிப்பொழுதில் தான் தன து உடலில் புருவ மத்தியில் கவனித்துக்கொண்டு இருப்பதை உணரத்தொடங்கினான். 

மெதுவாக கண்விழிக்க தான் மலைச்சாரலில் இருக்கும் தனது வீட்டு பூஜையறையில் தான் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றிய விளக்கும், சந்தன் ஊதுபத்தி வாசமும் கமழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். 

தனது சுவாசம் வருவது தெரியாதபடி அடங்கி மெதுவாக செல்வதையும், உடல் ஒருவித குளிர்ச்சியாகவும், மனம் பேரானந்தத்தில் திளைப்பதையும் உணர்ந்தான்.

மெதுவாக எழுந்து குருபாதுகையை வணங்கிக் கொண்டு பூஜை அறையை விட்டு வெளியே வர மனைவி தேனீர் தயாராகி விட்டது என்று கூறிக்கொண்டு தேனீர் கோப்பையை தர வாங்கி அருந்த தொடங்கினான். குளிந்த மலைக்காற்றிற்கு அந்த சூடான தேனீர் இதமாக இருந்தது. 

ஸ்ரீ புரத்திற்கு செல்ல அடுத்து எப்போது குருநாதரின், தேவியின் ஆணை வருமோ என்ற ஏக்கத்துடன் தனது தினசரி வேலையை கவனிக்கத் தொடங்கினான்!

ஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் தொடரும்............

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...