குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 02, 2018

மஹாலக்ஷ்மி தத்துவம் - மஹாலக்ஷ்மி அஷ்டகம் - 04

Image result for Mahalakshmi Sadhana

சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி 
மந்த்ரமூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

சித்தி புத்தி ப்ரதே தேவி: சித்திகளையும் நல்லறிவினையும் கொடுக்கும் தேவி 

மாகாலக்ஷ்மி எல்லா செல்வங்களுக்கும் அதிபதி என்பதால் எல்லாவித சித்திகளையும் அருளும் ஆற்றல் உள்ளவள். சித்திகள் என்றவுடன் பலரும் அபூர்வ ஆற்றல்களைப் பற்றி மனக்கோட்டைகளைக் கட்டுகிறார்கள். உண்மையில் சித்திகள் என்பவை முறையான, ஒழுக்கமான தொடச்சியான பயிற்சிகள் மூலம் உண்டாகும் பிரதிபலன்களே சித்திகள். சித்தி என்ற ஸமஸ்க்ருத சொல்லின் பொருள் முழுமை அடைதல், அல்லது தேர்ச்சி அடைதல் என்பதாகும். எடுக்கும் காரியத்தினை செம்மையாக செய்து தேர்ச்சி பெறுதலே சித்தி. 

சூக்ஷ்ம சக்திகளில் தமது சாதனையால் தேர்ச்சி பெற்றவர்களால் யோக நூற்களில் கூறப்படும் அணிமாதி சித்திகள் கிடைக்கப்பெறுகின்றன. 

இதைப்போல் தனது தொழிலை செம்மையாக செய்பவன் தனது தொழிலில் சித்தி பெறுகிறான். 

சம்பத்துகளை செல்வங்களை பெற விரும்புபவன், லக்ஷ்மித்துவத்தை பெற விரும்புவன் தான் அடைய விரும்பும் துறையில், தொழிலில் பயிற்சியில் நிபுணத்துவம் பெறவேண்டும். பலருக்கு அறிவு இருந்தாலும் அந்த அறிவை எப்படி செயற்படுத்தி சித்தி பெறுவது எனபது மகாலக்ஷ்மியின் அருளாலேயே சாத்தியமாகும். 

ஒரு துறையில் நிபுணத்துவம் பெற அதற்குரிய அறிவு இருக்க வேண்டும். இந்த அறிவு ஒருவனிடம் இருந்தாலே அவனால் குறித்த துறையில் நிபுணத்துவம் பெறமுடியும். மகாலக்ஷ்மி அந்த புத்தியும் அந்த புத்தியை பயன்படுத்தி சித்தி பெறும் வழியினையும் ஒருவனில் தோற்றுவிக்கும் தெய்வ சக்தி. 

மகாலக்ஷ்மியை உபாசிப்பவன் சித்தி என்ற நிபுணத்துவத்தையும் புத்தி என்ற அந்த நிபுணத்துவத்தை பெறும் அறிவினையும் ஒரு சேரப்பெறுவான். 

இதையே இந்த வரிகள் குறிப்பிடுகின்றது. 

புக்தி முக்திப் பிரதாயினி: போகத்தையும் மோக்ஷத்தையும் தருபவள் 

புக்தி என்றால் போக பாக்கியங்கள் என்று பொருள். இந்த உலக போகங்கள் அன்னையின் மஹா மாயையின் ஸ்தூல வெளிப்பாடுகள். ஆன்மாக்கள் இவற்றையே உண்மை இன்பம் எனக்கருதி இவற்றை பெறுவதையே வாழ்வின் அடிப்படை போராட்டமாக ஆக்கிக்கொண்டு தமது வாழ் நாளை இவற்றை அடைவதிலேயே செலவழிக்கின்றது. இந்த போகங்களை அனுபவிக்காமல் மனம் திருப்தியடைந்து வைராக்கியம் வெகு எளிதில் ஏற்படுவதில்லை. இப்படி போகத்தில் திருப்தியுறாத மனம் ஒரு நாளும் அதைவிட உயர்ந்த இறை இன்பத்தை நாடுவதில்லை. ஆகவே ஆன்மாக்கள் மஹாமாயையின் விளையாட்டில் வெற்றி பெற்று எல்லா போக பாக்கியங்களயும் அனுபவித்து திருப்தியுற்று இறையை அறியும் முக்திப்பாதையில் செலுத்து வல்லமை வாய்ந்தவள் மகாலஷ்மி. 

போகத்தில் திருப்தி உற்ற மனம் தன்னுள் இறையை அறியும் பரிணாமத்தில் முன்னேறி அடையும் நிலை முக்தி. ஆக மகாலக்ஷ்மி ஒரு ஆன்மா தனது கீழ்ப்பரிணாமத்திலிருந்து போகத்தை அனுபவித்து முக்தியை அடையும் வழியை காட்டும் தேவி என்பதையே இந்த வரி குறிப்பிடுகிறது. 

மந்திரமூர்த்தே சதா தேவி: மந்திர வடிவானவ தேவி 

மந்திர பூதே ஸதா தேவி என்பது பாடபேதம் – மந்திரத்வடிவாள் சுத்திப்பவள் என்று பொருள் 

பொதுவான ஸ்லோகத்தில் மந்திரமூர்த்தே சதா தேவி: மந்திர வடிவானவ தேவி என்றே காணப்படுகிறது. எனினும் எமது குரு நாதர் உபதேசித்த ஸ்லோகத்தில் மந்திர பூதே ஸதா தேவி என்பது பாடபேதம். குருவாக்கியப்பிரமாணப் பிரகாரம் மந்திர பூதே ஸதா தேவி என்பதன் பொருளை அறிந்தபின்னர் முழுமையான விளக்கத்திற்கு செல்வோம். 

மகாலக்ஷ்மி சங்கினை தரித்தவள் என்பதும், சங்கு நாதத்தின் குறியீட்டு வடிவம் என்பதையும் முன்னைய ஸ்லோகங்களில் அறிந்தோம். நாதம் லக்ஷ்மித்துவம் வெளிப்படும் அல்லது லக்ஷ்மித்துவத்தை விழிப்படையச் செய்யும் ஒரு வழி. இந்த நாதத்தை சாதகன் பயன்படுத்தும் வழியே மந்திர சாஸ்திரம். மந்திரம் என்பது குறித்த ஒலிகளுடைய அட்சரங்களை குறித்த சந்தத்தில் – ஒழுங்கில் அமைத்து அதை மனதில் திரும்ப திரும்ப இயக்கி பிரபஞ்ச மூல சக்தியை கவரும் ஒரு சூக்ஷ்ம சாதனை. இந்த மந்திர சாதனையால் மனம் சுத்தமடையும். குறிப்பாக மகாலக்ஷ்மியின் மந்திர சாதனை ஒருவனை தூய்மைப்படுத்தும் இதையே மந்திர பூதே ஸதா தேவி என்ற வரி குறிப்பிடுகிறது. 

ஒருவன் மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற லக்ஷ்மி மந்திர உபாசனை மிகச்சிறந்த வழி. 


இந்த ஸ்லோகத்தில் சாதகர்களுக்கான அறிவுரை 

1. ஒருவனுக்கு மஹாலக்ஷ்மி சாதனை சித்தி என்ற நிபுணத்துவத்தையும் அதற்குரிய செயற்பாட்டு அறிவினையும் கொடுக்கும். 

2. மகாலக்ஷ்மி சாதனை செய்பவன் முதலில் மஹாமாயியின் விளையாட்டான போகங்களை அடைந்து கீழ் ஆன்ம பரிணாமத்திலிருந்து முக்தியாகிய மேல் ஆன்ம பரிணாமத்திற்கு தேவியின் அருளாள் செலுத்தப்படுவான். 

3. மஹாலக்ஷ்மி அருளைப்பெற, ஒருவனை சுத்தி செய்ய மஹாலஷ்மி மந்திர சாதனை மிக உகந்த வழி

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...