குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 07, 2018

அரவிந்தரின் பூரண யோகம்

Image may contain: Anbu Arasan

பூரண யோகத்தின் முழுமை என்பது எப்போது ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த இயல்பை உணர்ந்து தனது சுய யோகப் பாதையை வகுத்துக்கொண்டு, தன் இயல்பிற்கு ஏற்றவகையில் தனது யோகப்பாதையை உருவாக்கிக் கொண்டு, தெய்வ உருமாற்றம் செய்யும் படி தன்னை வளர்த்துக் கொண்டு தனது இயல்பை மேம்படுத்த வேண்டும். சுதந்திரமே இறுதி விதியும் இறுதியான முழு இன்பமும் ஆகும்.
The Synthesis of Yoga, 20:51
ஸ்ரீ அரவிந்தர் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான மனம், புத்தி, சித்த, அகங்கார என்ற அந்தக்கரணங்களும் உடலும் உடையவன் என்பதை உணர்ந்து, ஒருவன் தன்னுடைய முன்னேற்றத்திற்கு தன்னைத் தானே புரிந்து தெய்வ உருமாற்றத்திற்கு உந்த வேண்டும். இதில் ஒருவனுக்கு பூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறார். ஏனெனில் ஒருவன் தன்னை தெய்வ உருமாற்றம் செய்ய அவனுக்கே உரிய பிரத்தியேக முறையில் உழைக்க வேண்டி இருக்கிறது.
யோகத்தில் சித்தி பெறுவதில் ஒருவனுடைய உழைப்பு பூரண சுதந்திரமும், முழுமையும், தெய்வ உருமாற்றம் பெறுவதற்கான இலட்சியமும் இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் ஒருமுறை எமக்கும் செல்லத்துரை சாமிக்கும் நடைபெற்ற ஒரு உரையாலைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். செல்லத்துரை சாமி யோகர் சுவாமியின் முதன்மைச் சீடர். சிவதொண்டன் நிலையத்தின் பொறுப்பாக இருந்து 93 (சரியாக தெரியவில்லை) குரு சேவை செய்தவர். 2013ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் மாலை வேளையில் ஒருரிமணித்தியாலம் தினசரி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
யோகர் சுவாமி தனது சீடர்களுக்கு அவரவர் பக்குவத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு சாதனா மார்க்கத்தை உபதேசித்துள்ளார். அதில் செல்லத்துரை சாமிக்கு உபதேசித்தது குண்டலினி யோகம், ஆர்தர் ஆவலோனின் serpent power புத்தகத்தை வரிவரியாக மொழிபெயர்த்து தனது சாதனைக்கு உபயோகிக்கும் படி யோகர் சுவாமிகள் உபதேசித்திருந்தார். அதன் படி இவரும் தனது சாதனையை செய்து வந்த காலத்தில் ஒரு நாள் சுவாதிஷ்டானத்தில் பிரம்ம கிரந்தி பிளக்கும் போது செல்லத்துரை சுவாமிகளால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்பட்ட அவஸ்தையை தாங்க முடியவில்லை.
நேராக கொழும்புத்துறையில் யோகர் சுவாமி இருக்குமிடத்திற்கு ஓடி இருக்கிறார். சுவாமிக்கு முன்னால் உட்கார சுவாமி கோபமாக எழுந்து "உனக்கு ஒவ்வொரு கவளத்திற்கும் நெய் வார்க்கோணுமோ? என்று காலால் உதை விட்டு விரட்டியிருக்கிறார். உதை பட்ட வலியுடன் அதுவரை உடலிலிருந்த அவஸ்தை போக இவரும் யோகர் சாமி விரட்டி விட்ட பயத்தில் ஓடி வந்து விட்டார். அதன்பின்னர் தனது சாதனையை சொந்த முயற்சியில் குருவை தியானித்து சித்தி பெற்றதாக செல்லத்துரை சாமி கூறினார்.
இங்கு அரவிந்தரின் வாக்கினையும், யோகர் சுவாமி சொன்ன "உனக்கு ஒவ்வொரு கவளத்திற்கும் நெய் வார்க்கோணுமோ?" என்ற வார்த்தைகளும் ஒப்பிட்டுப்பார்க்க கூடியவை

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...