குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 23, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 07: ஆன்மீக வாழ்வு

ஆன்மீக வாழ்வு

வாழ்க்கை இரண்டு பக்கங்கள் உள்ளது. ஒன்று புற வாழ்க்கை, மற்றையது அகவாழ்க்கை.

புறவாழ்க்கை உடலையும் உடல் சார்ந்த இன்பத்தையும் முதலாக கொண்டு இயங்குவது. எமது கல்வி, தொழில், செல்வம், உடல் இன்பங்கள் எல்லாம் புறவாழ்கையின் இலக்குகள்.

அகவாழ்க்கை என்பது எமது எண்ணங்களுக்கு ஆதாரமாக எது இருக்கிறது? நாம் யார்? எமது இன்ப துன்பங்களுக்கு காரணம் என்ன? எனக்கு ஏன் விருப்பு வெறுப்பு இருக்கிறது? போன்றவற்றை அறியும் தேடல் நிறைந்த வாழ்க்கை.

இன்று பலர் புறவாழ்க்கையை இலட்சியமாக்கி விட்டு ஓடத்தொடங்கும்போது இறுதியில் பெரும்துன்பத்தில் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் தமது வாழ்க்கையில் இரண்டு பகுதி அகம், புறம் என்ற இரண்டும் இருக்கிறது என்பதை பிரித்தறியாமல் இருப்பதும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று இயைந்தது என்பதை அறியாமல் இருப்பதுமே.
அகத்தின் மையத்தை ஆன்மா அல்லது உணர்வு என்று கூறுவர். இந்த மையமே மனிதனை இயக்குகிறது. இந்த மையத்தையே இந்திய தத்துவ ஞானம் ஒளியாக, மனித வாழ்க்கைக்கு ஆதாரமான மூல காரணியாக குறிப்பிடுகிறது.

ஆக மனிதன் தனது வாழ்க்கையை ஒழுங்கிற்கு கொண்டுவரவேண்டும் என்றால் புறத்தில் இருந்து அகத்திற்கு செல்ல வேண்டும். அகத்துடன் தொடர்பு கொண்டு வாழும் மனிதன் தனது வாழ்வினை சம நிலைக்கு கொண்டு வர ஆரம்பிக்கிறான். இப்படி சம நிலைக்கு வந்த வாழ்க்கையை புறத்தின் வழி ஓடாமல் அகத்தில் வழி மட்டும் ஓடி சித்தி மூல பரம்பொருளுடன் கலந்தால் அதை முக்தி என்கிறார்கள். இந்த இலட்சியம் கோடியில் ஒருவருக்கே வாய்க்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளதால் தற்கால மனிதனுக்கு அவசியமான அறிவு தனது அகத்தையும் புறத்தையும் சமப்படுத்தல்.

ஆகவே ஒருவன் ஆன்மீக வாழ்வு வாழப்போகிறான் என்று முடிவெடுத்தால் அகத்திலும் புறத்திலும் சம நிலையை கொண்டுவரவேண்டும். இது இல்லாமல் வெறுமனே வேடங்களை போட்டுக்கொண்டு, நூலகளைக் கற்று விளக்கம் கொடுப்பது ஆன்மீக வாழ்க்கை இல்லை.


அகத்தையும் புறத்தையும் சம நிலைப்படுத்தல் ஆன்மீகத்தின் முதல் படி! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...