குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 19, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 06: ஆன்மீக மூட நம்பிக்கைகள்

இந்த உலகில் பலவகை மூட நம்பிக்கைகள் காணப்படுகிறது. ஆண்கள் மட்டும்தான் சில தெய்வங்களை வணங்க வேண்டும், பெண்கள் வணங்ககூடாது. சில ஜாதியை சேர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் சிலர் தாழ்ந்தவரகள் என்ற எண்ணம். குணத்தளவே ஆகுமாம் குலம் என்று ஒருவனது மனப்பண்பே ஒருவனின் தகுதியை நிர்ணயிக்கும் என்று எமது முன்னோர்கள் வகுத்து வைத்திருக்க இன்று பலர் அறியாமையில் பல மூட நம்பிக்கை வளர்த்து திரிகிறார்கள்.

இப்படி ஆன்மீகத்திலும்  மூட நம்பிக்கைகள் பல இருக்கின்றன. இறைவனின் நாமத்தை கூறிவிட்டால் முக்தி கிடைத்துவிடும், பூஜை செய்துவிட்டால் இறைவன் திருப்திப்பட்டு விடுவான், இப்படி திருப்தி பட்ட இறைவன் நாம் கேட்பதெல்லாம் தருவான் இப்படி பலர் மூட நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். இடைக்காலத்தில் அரசர்களும் அதிகாரம் படைத்தவர்களும் தமது அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும் தாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காட்டவும் உருவாக்கிய முறைகளே இன்று பெரும்பாலும் கோயில் பூஜை, திருவிழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய எண்ணத்துடன் பூஜையை செய்யும் எவரும் அதற்கான பலனை பெறுவதில்லை.

உலகை படைத்து காத்து அழிக்கும் கடவுள் இத்தகைய சொற்ப அற்ப உபச்சாரங்களுக்கு மதி மயங்கும் ஆசாமியாகவா இருப்பார்? இப்படி நினைப்பது எவ்வளவு தவறு?  நேர்மையான ஒரு அதிகாரியையே இப்படி வளைக்க முடியாமல் இருக்கும்போது பிரபஞ்சத்தின் உயர்ந்த சக்தியை எப்படி பூஜைகளாலும், யாகங்களாலும் அடிமையாக்க, ஏமாற்ற முடியுமா?
அப்படியானால் இவை எல்லாம் எந்த பிரயோசனமும் அற்றவையா?


இல்லை! அதன் பொருளறிந்து, பலனறிந்து, குறித்த நோக்கத்தினை அடைவதற்காக செய்யப்படுபவை நிச்சயம் பலனளிக்கும். இன்றைய வெளிப்பகட்டு பூஜை, திருவிழா, வழிபாடுகளின் உண்மை வடிவம் உபாசனையும் சாதனையும் ஆகும்.

உபாசனையினதும் சாதனையினதும் உண்மை நோக்கம் தன்னை சுத்தி செய்துகொள்வதும் முன்னேற்றிக்கொள்வதுமாகும். தபம் என்பதும் எமது தீய பண்புகளை சுட்டெரித்தல் என்றும் யோகம் என்பது நல்ல பண்புகளை வளர்த்து பரமான்மாவுடன் இணைதல் என்றும் பார்த்தோம். ஆக ஒருவன் தனது அடிப்படை பண்புகளை வளர்த்துக்கொள்வதாலும் பக்தியாலும் மட்டுமே இறையருளுக்கு பாத்திரமாகலாமன்றி வெறுமனே பூஜை செய்வதாலும் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதாலும் அல்ல.


ஜெபம், தியானம், வழிபாடும், கூட்டுப்பிரார்த்தனை, பூஜை என்பவற்றின் உண்மை நோக்கம் மனிதனை கருணை, தர்ம சிந்தனை போன்ற நற்குணங்களை தம்முள் நிரந்தரமாக வளர்ப்பதற்காகவே அன்றி இறைவனை திருப்திப்படுத்த அல்ல. 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...