குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 18, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 04: ஆன்ம சாதனைக்குரிய வழிகள்


மனிதன் தனது உணர்வு சக்தியை மனதின் பிடியில் இருந்து விழிப்பித்தால் அதீத மன, பிராண, உடல் ஆற்றல்களை பெறலாம் என்பது ரிஷிகளின் சித்தர்களின் ஆன்ம விஞ்ஞானமாகும்.

மனமே உணர்வு சக்தியை ஈர்க்கும், செயற்படும் அலகு. இந்த மனம் அதிக சலனத்திற்கோ அல்லது புலன் வழி அதிகம் ஈர்க்கப்படும்போது அதன் மூலமாகிய உணர்வுடன் தொடர்பினை இழந்து விடுகிறது. இப்படி மனம் உணர்வை விட்டு விலகி குழம்பிய நிலையே துன்பம், குழப்பம் எனப்படுகிறது.

இது மனிதன் தனது மனத்தை இயற்கையின் விதிக்கு மாறாக பயன்படுத்துவதாலும், அசுர எண்ணங்களில் செலுத்துவதாலும் தனது ஆளுமையை தாழ்மைப்படுத்திக்கொள்வதால் ஏற்படுகிறது.

ஆக ஒருவன் தனது துன்பங்களில் இருந்து மீண்டு இன்ப வாழ்க்கை பெற விரும்புவன் தனது உணர்வு சக்தியின் பால் மனதை திருப்ப வேண்டும். இதற்கு முதலில் மனதை தூய்மைப்படுத்த வேண்டும். இரும்பில் துருப்பிடித்திருந்தால் அதை நீக்குவதற்கு அதை அக்னியில் சூடாக்கவேண்டும், அல்லாவிடில் அமிலத்தால் எரிக்க வேண்டும். இதுபோல் மனம் அழுக்கடைந்திருந்தால் மனதை தபஸ் எனும் அக்னியில் சூடாக்க வேண்டும்.
தபஸ் என்றாலே சூடாக்கல் என்றே பொருள். மனதில் உள்ள வேண்டாத எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், மனப்பாங்கு (attitude) போன்றவற்றை நீக்கி மனதை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவந்து ஒரு இலக்கில் நிறுத்துவது தபஸ் எனப்படும்.
புறத்தில் எதிரி என்று தெளிவாக தெரிந்த ஒருவனுக்கு எதிரியை சமாளிப்பது எளிது. ஆனால் தன்னுடன் கூட இருக்கும் எதிரியை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதுபோல் மனதில் இருக்கும் தமது குறைகள் எளிதாக குறைகளாக தெரியாது. அவை எமது இயல்பான நல்ல குணங்களாகவே எமக்கு பிரதிபலிக்கும். ஆகவே எது சரியான எண்ணம் செயல் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு துணிதுவைப்பவன் (முற்காலத்தில்) செய்யும் செயல் முறை போன்றது இது. துணியை முதலில் வெள்ளாவி கட்டி, பின்னர் சவர்க்காரம் போட்டு, பின்னர் நன்கு தேய்த்து, பிறகு அடித்து துவைத்து பின்னர் சுத்தமான நீரில் கழுவி வாசனை திரவியம் இடல் போன்றதே தபஸ்.
இது வெறுமனே உடலை முள்ளால் தைத்து, நெருப்பில் துன்புறுத்தி உடலை துன்புறுத்துவதல்ல தபஸ். தபஸில் நான் கு படிகள் இருக்கிறது.

  1. புலன்கள் வழி செல்லுதலை தடுத்தல், கட்டுப்படுத்தல், அளவுடன் பயன்படுத்தல்.
  2. நேரத்தை ஒழுங்காகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தல்.      
  3. பணத்தை நேர்மையாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்தல்
  4. சிந்தனையின் போது எண்ணங்கள் எப்போதும் ஆக்கபூர்வமாகவும், வேண்டாத விஷங்களைப் பற்றிய வீண் சிந்தனை இல்லாமலும் மனதை வைத்துக்கொள்ளுதல்.


எமது ஐம்புலன்களும் இன்பத்தையும், இயக்கத்தை விரும்புவது, நேரத்தை எப்படி எதில் பயன்படுத்துகிறோம், வளங்களையும், பணத்தையும், மனதையும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே எமது உலக வாழ்க்கை. ஆகவே இந்த நான் கு விஷயத்திலும் ஒரு ஓழுங்கைக்கொண்டு வருவதன் மூலம் ஒருவன் தனது வாழ்வை கட்டுப்பாட்டிற்குள் கோண்டு வரமுடியும்.

இங்கு பலரும் தம்மை குழப்பி சோர்ந்து போகும் விஷயம் “கட்டுப்படுத்தி அளவாக தமது புலன் களை பயன்படுத்துதலுக்கும், புலன் இன்பங்களை அடக்கி ஒதுக்கி இருப்பதற்குமிடையிலான வேறுபாடு.

இன்று ஆன்மீக வாழ்க்கை என்று தமது குடும்பத்தில் இன்பத்தை சிதைத்தவர்கள் பலர். கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் இயல்பான வாழ்க்கை ஆன்மீக வாழ்விற்கு தடை என்று மயங்கி தமது குடும்ப உறவை சிதைத்தவர்கள் பலர். கிருகஸ்த அசிரமத்தில் இருந்துகொண்டு தபஸை செய்யும் எந்த சாதகரும் தமது ஆசிரமத்திற்கு உகந்த தர்மத்தை சரிவர செய்வதால் மட்டுமே ஆன்ம முன்னேற்றம் பெறமுடியும்.

ஆகவே சாதனை, ஆன்மீக, தபஸ் என்ற வார்த்தைகளை கேட்டவுடன் உடனே காவி கட்டுதல், ருத்திராக்ஷம் போடுதல், வேஷங்களை போட்டு தம்மை உலகில் இருந்து மாறுபட்ட கோமாளிகளாக காட்டிக்கொள்ளுதல் என்பவை உண்மை ஆன்மீகம் அல்ல. தமக்கு கர்மத்தினால் அமைந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தமது அகத்தினை/மனதை புடம் போட்டு வாழ்வினை செம்மைப்படுத்துவதே உண்மை ஆன்மீகம்.


ஆன்மீகம் என்பது ஒருவன் தனது மனம், புலன்கள், செல்வம், நேரம் ஆகிய நான் கினையும் சரியான வழியில் ஒழுங்குபடுத்தி தனது உணர்வு சக்தியின் ஆற்றலை தன்னில் விழிப்பிக்கும் செயல்முறை. இதுவே ரிஷிகளும் சித்தர்களும் அனுபவ பூர்வமாக செயல்கொண்ட முறை. 

1 comment:

  1. ஐயா...

    மேற்கண்ட நான்கு படிகளும் ஓவ்வொரு மனிதனும் உணர்ந்து செயப்படுத்த வேண்டிய ஒன்று ஐயா

    மிக்க நன்றி

    நல்லதே நடக்கிறது

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...