குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 24, 2015

பஞ்ச கோசம் என்பது மனிதனில் உள்ள ஐந்து உடல்களா?

இன்று யோகம் கற்பிக்கும் பலரும் பஞ்ச கோசம் என்பது மனிதனை சுற்றி உள்ள நுண்மையான ஐந்து உடல்கள் என்றும் பலவாறு கூறி வருகிறார்கள். முதலில் கோசம் என்பதற்கு உடல் என்பது பொருள் இல்லை. 

இரண்டாவது கோசம் என்றால் உறை என்று பொருள் கூறிவருவது ஓரளவு சரியானது. ஆனால் அது யோகத்தில் ஏன் அவற்றை கோசம் என கூறுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. 

கோசம் என்றால் பொக்கிஷம் அல்லது புதையல் என்று பொருள். மனிதனில் இருக்கும் பிராண சக்தி புதைந்து கிடக்கும் இடம்தான் பஞ்ச கோசங்கள்.

மனிதனது தேவை போக மிகுதியாக உள்ள பிராணன் உடலில் சேர்ந்தால் அது அன்னமய கோசம் .

பிராணனில் சேர்ந்தால் பிராணமய கோசம்

புத்தியில் சேர்ந்தால் விஞ்ஞான மய கோசம்

மனதில் சேர்ந்தால் மனோமயகோசம்

ஆத்மாவில் சேர்ந்தால் ஆனந்தமய கோசம்

இது ஒருமனிதன் எவ்வளவு பிராணனை, எங்கு சேர்க்கிறான் என்பதை குறிக்கும் யோகமொழி.

இது சாதாரண மனிதனிற்கு இயற்கை நிர்ணயித்த வாறும், ஆன்ம மன பரிணாமங்களுக்கு ஏற்றவாறு அவனது கோச நிலை இருக்கும். அதனை யோக, தந்திர  சாதனைகள் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியும். 

4 comments:

  1. அருமையான விளக்கங்கள் ஐயா.

    சில சந்தேகங்கள்.

    1. பலரும் அதை 5 உடல்கள் என்றே சொல்கிறார்கள். அன்னமய உடல் தான் கண்ணிற்கு தெரியும். மற்றது astral உடல்கள், தியானம் கைகூட கூட தெரியும் என்று .

    2. ஒரு மனிதனுக்குள் மூன்று குணங்களும் (சாத்விகம், தாமசம், ரஜோ) உண்டு அல்லவா. மனிதன் எக்குணத்தில் அதிகம் இருக்கிறான் (domination) என்பதை கோசங்கள் காட்டுமா ஐயா?

    ReplyDelete
  2. மேலும் இரண்டாவது கோசமான பிராணன் பற்றி ஒரு சந்தேகம் ஐயா.

    மிகுதியாக பிராணன் எவ்வாறு பிராணனில் போய் சேரும் ஐயா? அதுவே மிகுதியாகத் தானே உள்ளது?

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி.

    1. எல்லாமே சூக்ஷ்மமானது, உடலில் நோய் இல்லை என்றால் அன்னமயகோசம் நன்றாக இருக்கிறது, பிராண சேமிப்பு இருக்கிறது என்று கூறலாம், பொதுவாக விளங்கி கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியினை எடுத்துக்கொள்ளலாம். இதுபோல் ஒவ்வொரு கோசத்தின் இயல்பைக்கொண்டு அறிந்துகொள்ளலாம்.

    2. குணங்கள் என்பது கோசத்தில் சேரும் பிராணனின் அளவினை குறிக்கும். சாத்விகம் இருந்தால் மட்டுமே கோசம் விருத்தியாகும், இராஜசம் இருந்தால் இயங்கு நிலையில் இருக்கும், அதேவேளை சேமிப்பை குறைக்கிறது. தாமசம் என்பது இராஜசத்தால் இழந்த நிலை அல்லது சேமிப்பு இருந்தும் இயக்கம் இல்லாத நிலையை குறைக்கும்.

    3. பிராணன் என்பது எப்போதும் இயங்கு நிலையில் இருப்பது, இந்த இயக்கம் இல்லாமல் சேமிப்பாகும் நிலையே பிராணமய கோசம், மேலும் இந்த ஐந்து கோசங்களும் ஒவ்வொரு சக்கரங்களே நிலைஸ்தானங்கள். இதுபற்றி நேரம் கிடைக்கும்போது விளக்குவோம்.

    ReplyDelete
  4. அய்யா,
    அருமையான விளக்கம்.

    சேர்மைராஜ் அவர்களின் கேள்வியும் தங்களின் விளக்கமும் வெகு அருமை அய்யா.
    நன்றிகள் பல
    வி.ரவீந்திரன்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...