குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 10, 2015

காகபுஜண்ட மகரிஷியிற்கு ஜீவ சமாதி உண்டா?

இன்று பலரும் ஜீவ சமாதி செல்கிறோம் என்றும், பரிகாரம் என்றும் சொல்லி வருகிறார்கள்.  சித்தர்கள் சமாதி அடையும் நிலைகள் பல உள்ளன. காகபுஜண்டர், அகத்தியரை மகரிஷிகள் என்றே அழைக்கிறோம். மகரிஷிகள் என்று அழைக்கப்படுபவர்கள் உடலிருந்து ஆன்மாவினை ஒளிநிலைப்படுத்தி  மகாகாரண பஞ்சாட்சரம் என்ற "சி" கார தத்துவத்தினை அடைந்தவர்கள். இவர்கள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பவர்கள். பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருப்பவரும் தனது உணர்வால் - மனதால் அல்ல! தொடர்பு கொள்ளக்கூடியவர்கள். உணர்வு ஜாக்ர, ஸ்வப்ன, சுழுத்தி எனும் சாதாரண நிலையில் இருக்கும்போது இவர்களின் உண்மை தொடர்பு கிடைப்பதில்லை. உணர்வு துரியத்தை அடையும்போது மட்டுமே அவர்கள் தொடர்பு கிடைக்கின்றது. 

மேலும் காகபுஜண்டர் காகமாக இருக்கிறார்கள் என்று காகத்திற்கு சோறு வைத்தால் அது ஜீவகாரண்யமே அன்றி யோக சாதனை ஆகாது. காகம் என்பது பஞ்ச பட்சிகளில் ஒன்று, பஞ்ச பட்சி என்பது பஞ்ச பூதம், 
  • நிலம் - வல்லூறு
  • நீர் - ஆந்தை, 
  • நெருப்பு - காகம், 
  • காற்று - கோழி, 
  • ஆகாயம் - மயில். 

பஞ்ச பூதம்
வித்தெழுத்து
ஆதார தளம்
ஐந்து பூத கலப்பு உறை நிலை
ஓம்
மூலாதாரம்
நிலம் – ப்ருதிவி `
சுவாதிஷ்டானம்
நீர் – அப்பு
மணிப்பூரகம்
தீ – அக்னி
சி
அனாகதம்
வாயு
விசுத்தி
ஆகாயம்
புருவமத்தி – ஆக்ஞா
பஞ்ச பூத ஒடுக்க நிலை
ஓம்
சஹஸ்ராரம்

இனி பஞ்சாட்சரத்தின் தத்துவ ஒடுக்கம் பார்ப்போம் 
  • ந-ம-சி-வ-ய = ஸ்தூல பஞ்சாக்ஷரம். 
  • சி-வ-ய-ந-ம = சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம். 
  • சி-வ-ய-வ-சி = அதி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம். 
  • சி-வ = காரண பஞ்சாக்ஷரம் எனப்படும்.
  • சி = மகா காரண பஞ்சாக்ஷரம்
காகம் என்பது அக்னி தத்துவம், அத்தத்துவத்தில் தன்னை ஒடுக்கியவர் மகாகாரண சரீரம் அடைந்தவர், இதனையே தனது பெருநூல் காவியத்தில்

கர்த்தனை போல் நான்இருந்து வாழுவேனே
வாழுவேன் திரிலோகம் தெரிந்து கொண்டேன்
மாளாமல் நின்றிடுவேன் திரிலோகத்தும்
காகபுசுண்டர் பெருநூல் காவியம். பாடல் 236..& 237

காகமாய் மரத்தின்மேல் நிற்பேணப்பா
கவலையாய் நீ இருந்தால நா னுள் நிற்பேன்.
காகபுசுண்டர் பெருநூல் காவியம். பாடல் 239

மேலே குறிப்பிட்ட வரியில் காகம் எனபது அக்னி தத்துவம் மரம் என்பது உடல், ஆக எமது உடலில் உள்ள அக்னி தத்துவத்தின் மூலம் எமது உணர்வால் தொடர்பு கொள்ளக்கூடிய மகரிஷிதான் காகபுஜண்டர். அதாவது அண்டத்தில் மகாகாரண சரீரம் என்ற சிகார தத்துவமாய் சிவனாய் நிற்பவரும், பிண்டத்தில் அக்னிதத்துவமாய் இருந்து வழிகாட்டக்கூடியவரே காகபுஜண்ட மகரிஷி!  

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...