குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 17, 2015

அகத்தியர் கூறும் மத அரசியல் அதிகார மையங்களின் செயல்கள்

மதங்களும் அரசியல் அதிகார மையங்களும் மனிதன் தனது உண்மை தன்மையான விழிப்புணர்வினை அடைவதை தடுக்கின்றன. தனது உண்மை ஸ்வரூபத்தை தெரிந்த மனிதன் எதற்குபின்னாலும் ஓடாமல் தனது சுயத்தில் திருப்தி அடைபவனாக இருக்க ஆரம்பிப்பான். இப்படிப்பட்ட மனிதர்களை வைத்துகொண்டு அடிமைத்தனத்தை ஏற்படுத்த முடியாது.  இத்தகைய சமூகம் வன்முறை அற்ற அமைதியான ஆனந்தமான சமூகமாக இருக்கும். இத்தகைய மனித சமூகத்தை கட்டி எழுப்ப விரும்பியவர்களே கீழைத்தேய (இந்திய - சீன) ஞானிகள். இப்படிப்பட்ட ஞான நிலை விடயங்களை மக்கள் புரியாதவகையில், இலகுவாக பயன்படுத்தாத வகையில் உருவாக்கப்பட நிர்வாக கட்டமைப்புகளே ஆதீனங்கள், மடங்கள் என்பன. இவை மனிதனை தமது அதிகார இலக்கிற்குள் இயங்க வைக்கும் வகையில் சட்ட திட்டங்களையும், பயமுறுத்தல்களையும் உருவாக்கி மக்களை எப்போதும் பயம் சார்ந்த, பாவம் செய்த ஒருவனாக தன்னை கற்பித்துக்கொண்டு இருப்பான். இப்படியான நிலையில் இருந்து மீண்டு மக்கள் அனைவரும் ஞான நிலை பெறவேண்டும் என்று எண்ணிய சித்தர்களில் அகத்தியர் முதன்மையானவர் அவர் தனது ஞானப்பாடல்களில் கூறும் விடயங்களை கீழே பார்ப்போம். 

இதில் வினோதம் என்னவென்றால் கடவுள் இல்லை என்பவர்களும் பழைய கள்ளு புதியபானையில் என்பதுபோல் அதே மத, அரசியல் மையங்களை ஏற்படுத்திக்கொண்டு தாமும் தமது குடும்பமும் பிழைக்கவே வழிவகை செய்துவருகிறார்கள் என்பதுதான்! 

இந்தப்பாடல்கள் தற்காலத்தில் ஞானம், யோகம், கோயில், குளம் என்று அலைபவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய பாடல்களாகும். 

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு 
மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா! 
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார் 
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்; 
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு 
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்; 
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா 
யெண்ணித் தளமான தீயில்விழத் தயங்கி னாரே; 2

தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம் 
சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே; 
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் 
கூடி மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும் 
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும் 
இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்; 
வயலான பயன்பெறவே வியாசர் 
தாமும் மாட்டினார் சிவனாருத் தரவினாலே. 3

உத்தார மிப்படியே புராணங் காட்டி 
உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்; 
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக் 
கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச் 
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ் 
சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் 
பெய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே. 4

பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு 
பாரதபு ராணமென்ற சோதி யப்பா! 
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும் 
நிலையான தசரதன்கை வெல்ல வென்றும் 
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும் 
நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும் 
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும் 
பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே. 5

கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும் 
கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள் 
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை 
அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி 
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும் 
உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள் 
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும் 
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே! 6



2 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...