குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 10, 2015

சித்த வித்யா என்றால் என்ன?

“சித்த வித்யா” என்றால் என்ன?  பொதுவாக சித்தம் என்பது ஆழ்மனம் என்று தற்கால விஞ்ஞானம் குறிப்பிடும் மனதின் பகுதியினை தெய்வ ஞானத்துடன் ஒடுக்கி பிரபஞ்ச ஞானத்தினை பெறும் முறையாகும். தாரணையால் எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ,தியான சாதனையினால் உணர்வை அறிய வேண்டிய பொருளுடன் ஒடுக்கும்போது உணர்வு அறியப்படும் பொருளாய் மாறி நிற்கும், பின்னர் அப்பொருள் பற்றிய அறிவு சித்தத்தில் பதியும். இதனை மேல்மனத்திற்கு கொண்டுவந்து மொழியில் விளங்கப்படுத்தினால் அந்த அறிவு சித்த வித்யா எனப்படும். இது குருமுகமாய் தியான சாதனையின் பலனாய் வரும் ஒரு சித்தியாகும். 

இதற்காகவேண்டியே அக்காலத்தில் மனதை சப்த ஒலிகளால் ஒழுங்குபடுத்தத் ஒலியமைப்பு கோர்வையாக இசைக்கும் வண்ணம் யாப்பு இலக்கணம் எனப்படும் பாடல் வரைமுறை அமைக்கப்பட்டது. இப்படி பாடலை பாராயணம் செய்யும்போது மனம் படிப்படியாக தாரணை நிலையினை அடையும். தாரணை நிலையடைந்த மனம் எதுவித முயற்சியும் இன்றி தியான நிலையினை அடையும். இந்த யோக இரகசியத்தின் அடிப்படையிலேயே சித்தர் பாடல்கள் பொருள் காணப்படவேண்டியவை. இந்த நிலையில் அறியப்படும் விளக்கம் அந்தப்பாடலை பாடிய ஆசிரியர் எந்த நிலையில் இருந்து பாடினாரோ அந்த நிலையில் விளங்கி கொள்ள முடியும். அல்லாமல் அகராதியின் துணையினை மட்டும் கொண்டு பொருள் காண முற்படும்போது மயக்கங்களையும், மறைப்புகளையும் வேண்டுமென்றே சித்தர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதேவேளை இந்த ஞானம் பாமரனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக எளிய பேச்சு மொழியில் பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ வித்தை, காயத்ரி சாதனை மூலம் சித்த வித்யா என்ற சித்தியினை அடையமுடியும். இதனையே லலிதா சகஸ்ரநாமம் ஸித்தேஸ்வரி ஸித்த வித்யா ஸித்த மாதா" என்று குறிப்பிடுகிறது.  இந்த ஆற்றலால் பல்வேறு நன்மைகளும் உண்டும் 

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...